Friday, September 29, 2017

திரிலம் ரயில் நிலையத்தில் காதலருக்கு தடை!
பதிவு செய்த நாள்29செப்
2017
00:50

திரிசூலம் ரயில் நிலையத்தில், காதலர்களுக்கு தடை போடப்பட்டு உள்ளது.
சென்னை, திரிசூலம் ரயில் நிலையத்தில், காதலர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதும், மாலை நேரத்தில், எதிரில் உள்ள ஆபத்தான காட்டு பகுதிக்குள் சென்றனர்.

இது குறித்து, நமது நாளிதழில், 'திரிசூலம் ரயில் நிலையம் காதலர் பூங்காவானது' என, செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நிலையத்தில், ரயில் பயணத்திற்கு தொடர்பின்றி அமர்ந்திருக்கும் நபர்கள் வெளியேற்ற படுகின்றனர்.

ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கூறியதாவது: ரயில் டிக்கெட் வைத்திருப்பதால், அவர்களை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. சிலர், எதிரில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டுபகுதியில், ஏதும் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...