Friday, September 29, 2017

திருமலையில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் முடி காணிக்கை
பதிவு செய்த நாள்29செப்
2017
00:21




திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், ஒரே நாளில், இரண்டு லட்சம் பேர், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். திருமலையில், நேற்று முன்தினம் நடந்த கருடசேவையை காண, திரளான பக்தர்கள் கூடினர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் உள்ள, தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்கள், 24 மணிநேரமும் திறந்திருந்தன. இங்கு, 250 பெண்கள் உட்பட, 1,400 நாவிதர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருடசேவை அன்று மட்டும், 2.30 லட்சம் பக்தர்கள், தங்கள் தலை முடியை, ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திஉள்ளனர். தேவஸ்தான வரலாற்றில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர், ஒரே நாளில், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியதாக, இதுவரை பதிவுகள் இல்லை.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...