Friday, September 29, 2017

சென்னை,தி.மலை மாவட்டங்களில் மழை
பதிவு செய்த நாள்
செப் 28,2017 18:30



சென்னை: கிண்டி, அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி,கோடம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

வட தமிழக உள்மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையின் பல பகுதிகளில் மாலை முதலே கனமழை கொட்டித்தீர்க்கிறது. வட சென்னையிலும், தென் சென்னையிலும் புறநகரிலும் கனமழை கொட்டித்தீர்க்கிறது. பல்லாவரம், குரோம்பேட்டையில் கனமழை பெய்கிறது. அண்ணாநகர், முகப்பேர் பகுதிகளில் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கோயம்பேடு பகுதியில் பெய்து வரும் மழையால் வெளியூர் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்கிறது. அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் பெய்யும் கனமழையால் வடபழனி, ஜிஎஸ்டி சாலையிலும் பெருங்களத்தூர் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் மழை

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளான ,பாதிரி, மாம்பட்டு, தெள்ளார் நடுகுப்பம் , மும்முனி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...