Saturday, September 30, 2017

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வாய்ப்பளிக்க முடியாது: சுஷ்மா ஸ்வராஜ்
2017-09-28@ 13:03:30




நியூயார்க்: பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, நியூயார்க் நகரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் 7,500 கோடி ரூபாய் அளவுக்கு, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்றிக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என சுஷ்மாவிடம் கோரப்பட்டது. ஆனால், என்.ஆர்.ஐ.க்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள போதிய வாய்ப்புகள் ஏற்கனவே அளிக்கப்பட்டதாகக் கூறிய சுஷ்மா, மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...