Friday, September 29, 2017

'ஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

பதிவு செய்த நாள்29செப்
2017
00:06

கல்லுாரிகளில், 'ஆன் - லைன்' படிப்பு துவங்க, அனுமதி பெறுவதற்கான காலக்கெடு, அக்., ௩௧ வரை நீடிக்கப்பட்டு உள்ளது. சிறந்த வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்களால் நடத்தப்படும், 'ஸ்வயம்' என்ற, ஆன் - லைன் படிப்பு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு, 'ஸ்வயம் ஆன் - லைன்' படிப்பை நடத்த, கல்லுாரி, பல்கலைகளின் பேராசிரியர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. இதையடுத்து, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி, கல்லுாரிகள், பல்கலைகளில், 'ஆன் - லைன்' படிப்பை கட்டாயமாக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு அனுமதி பெறுவதற்கு, செப்., ௨௫க்குள் விண்ணப்பிக்க, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. 

தற்போது, அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும் மாணவர்களை சேர்க்கும் வகையில், அனுமதி பெறுவதற்கான அவகாசத்தை, அக்., 31 வரை நீடித்து, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024