Thursday, September 28, 2017

1,000 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்

பதிவு செய்த நாள்27செப்
2017
23:53


சென்னை: தொடர் பண்டிகைகள் வருவதால், நாளை முதல், அக்., 2 வரை, தமிழகம் முழுக்க, ௧,௦௦௦ சிறப்பு பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நாளை, ஆயுத பூஜை, நாளை மறுநாள், விஜயதசமி, ௧ல், மொகரம், 2ல், காந்தி ஜெயந்தி என, தொடர்ந்து நான்கு நாட்கள், அரசு விடுமுறை வருகிறது. அந்நாட்களில், அதிகம் பேர் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. அவர்களுக்காக, நாளை முதல், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட, கூடுதலாக, ௧,௦௦௦ பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024