Saturday, September 30, 2017

மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை
dinamalar
பதிவு செய்த நாள்29செப்
2017
08:52




கோலாலம்பூர்: வடகொரியா அணு ஆயுத திட்டத்தையும், ஏவுகணை திட்டத்தையும் கை விட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் அழுத்தம் தந்து வருகின்றன. ஆனால் வடகொரியா இதில் விட்டுக் கொடுக்காமல், தனது அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டபோதும், வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், மலேசிய நாட்டு மக்கள், வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு காரணமாக ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதற்காக மலேசியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே அக்டோபர் 5-ம் தேதி நடக்க உள்ள போட்டி, பாதிப்புக்குள்ளாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...