Wednesday, September 27, 2017

உலக செய்திகள்

அமெரிக்கா வருவதற்கு 8 நாட்டு பயணிகளுக்கு தடை ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு



அமெரிக்கா வருவதற்கு வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாட்டு பயணிகளுக்கு தடை ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு

செப்டம்பர் 26, 2017, 04:15 AM
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்டதும் அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த வகையில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, சூடான், ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு 90 நாட்கள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். இது அங்கு பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த நிலையில், 6 நாடுகள் மீதான தற்காலிக தடை தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் டிரம்ப் புதிய தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், ஏற்கனவே உள்ள தடை பட்டியலில் இருந்து சூடான் நீக்கப்படுவதாகவும், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 3 நாடுகள் சேர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அதன்படி ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவானது அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தடை உத்தரவு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள டிரம்ப், “அமெரிக்காவை பாதுகாப்பான நாடாக்குவதே என்னுடைய முதல் இலக்கு. தடை விதிக்கப்பட்டு உள்ள அந்த 8 நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதித்தால் நாம் பாதுகாப்புடன் இருக்க முடியாது” என குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...