Friday, September 29, 2017

சென்னையில் போக்குவரத்து நெரிசல்: போலீசார் அறிவுரை
பதிவு செய்த நாள்28செப்
2017
18:57




சென்னை: தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் மக்கள் மற்றும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர் . இது குறித்து போலீசார் கூறியிருப்பதாவது: நாளை செப்.,29 முதல் அக்., 2 வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகளால் 100 அடி சாலை, பூந்த மல்லிசாலை, ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பஸ் ஸ்டாண்ட், விமான நிலையம் செல்பவர்கள் முன்னதாகவே செல்ல வேண்டும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024