Thursday, September 28, 2017

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான படிவத்தில் வைக்கப்பட்டது ஜெயலலிதா கைரேகைதானா?



திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்துக்கு அளித்த படிவத்தில் உள்ளது ஜெயலலிதாவின் கைரேகை தானா? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 28, 2017, 06:00 AM
சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏ.கே.போசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த படிவத்தில் ஜெயலலிதா தனது இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.

இதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜி அந்த படிவத்தில் சான்றொப்பம் அளித்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவுடன் தான் கை ரேகையை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது.

எனவே, அந்த கைரேகையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அந்த படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம் என்று அறிவித்து ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024