Thursday, May 31, 2018

கணினி இயக்க தெரியாத அமைச்சர்களுக்கு 'கல்தா' : நேபாள பிரதமர் அதிரடி

Added : மே 31, 2018 12:20 |




காத்மண்டு : 6 மாத காலத்திற்குள் லேப்டாப் இயக்க கற்றுக் கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என நேபாள பிரதமர் சர்மா ஒலி எச்சரித்துள்ளார்.

இரண்டாவது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ள அவர், அலுவலகத்தை முற்றிலும் கணினிமயமாக்க முடிவு செய்துள்ளார். தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய சர்மா ஒலி, அலுவலகப் பணிகளை முற்றிலும் கணினிமயமாக்குவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும், 6 மாத காலத்திற்குள் லேப்டாப்களை இயக்க தெரியவில்லை என்றால் , எந்த அமைச்சராக இருந்தாலும் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

Administrative nod for three government polytechnic colleges

Administrative sanction to establish three new Government Polytechnic Colleges at Kooduveli in Cuddalore district, Sevvapettai in Tiruvallur district and Vanavasi in Salem district.



Published: 31st May 2018 05:14 AM | Last Updated: 31st May 2018 05:14 AM | 

By Express News Service

CHENNAI: Administrative sanction to establish three new Government Polytechnic Colleges at Kooduveli in Cuddalore district, Sevvapettai in Tiruvallur district and Vanavasi in Salem district has been accorded from the year 2018-19. Nearly Rs 69 crore has been sanctioned for constructing buildings for the three colleges. About Rs 1.50 crore has been sanctioned towards non-recurring expenditure.
Meanwhile, co-operative sugar mill polytechnic colleges in Palacode, Dharmapuri district, and Mohanur in Namakkal district which were earlier functioning on self- supporting basis, have been converted to government polytechnic colleges.

Proposed to further the paperless working environment by automation of administration with e-governance. Public Finance Management System is to be introduced for all externally funded programmes in academic and infrastructure areas.

All three modes of teaching-direct class room lectures, distance education mode and online courses will be offered. Regulations to introduce flexibility in core courses, credit transfer facility to promote students mobility between institutions within and outside of the country, were formulated.

National Council for Teacher Education has approved introduction of two-year B Ed course through Integrated Development Environment (IDE) from the academic year 2018-19.
With UGC financial assistance ‘Fitness Centre with Sports Science Backup facility’ will be constructed at a cost of Rs 2.42 crore in 2018-2019.

Proposed to introduce three new post graduate programmes in 2018-2019- Executive MBA, MA (Saiva Sidhanta- Self Study) and MCom (Big Data Science)

The Human Resource Development Centre has been recognised by UGC as a National Resource Centre to produce and upload online courses in ‘Political Science’ and ‘International Studies’.

While government provides free schooling, School Education Department has decided to conduct higher education loan camps at district level in collaboration with nationalised banks.The 2018-19 policy note for the department said plans are underway to extend these camps to block level. Deserving students can apply for loan at https:/www.vidyalakshmi.co.in

The government has decided to provide all government middle, high and higher secondary girls schools with electric incinerators, cupboards and napkins at a budget of Rs 11.88 crore.

Rajini gets taste of bitter politics after victim asks ‘who are you?’

Superstar Gets Trolled On Social Media



Pradeepkumar.V@timesgroup.com

Chennai:

K Santhosh Raj wasn't born when Rajinikanth's 1989 flick ‘Raja Chinna Roja’ was released. “Superstar-u yaaru-nu ketta, chinna kozhandaiyum sollum," (Even a child will answer the question who is superstar") goes the lyrics in a popular song in the movie.

On Wednesday, Santhosh posed this question not to any child, but to the actor's face. "Who are you?" asked the 21-year-old Tuticorin native, to which Rajini responded, "I am Rajinikanth!"

A video clip which caught this momentary exchange then went viral on social media unleashing trolling of a kind that Rajini had never witnessed before.

Within a few hours, twitterati created, and made a trend out of hashtags #Naan-ThanPaRajinikanth (I am Rajinikanth) and #AntiTamilRajinikanth. Some tweeted with wit while others used memes juxtaposing Santhosh's question with a scene from one of Rajini films. For instance, a picture of a bloodied Rajini walking out of his palatial residence in the 1995 flick ‘Muthu’ or the picture of Rajini living through his notorious gangster past in ‘Baashha’, parodied well with Santhosh's question.

Several users were not so kind. "Narikaalan," said a tweet from user @aekumaran, a wordplay on the name of Rajini's character in his upcoming ‘Kaala’.

Another user @NaranayaM tweeted, "If you who merely add salt to your food could be so arrogant, imagine how arrogant we who produce that salt could be."

Political analysts took a dim view of what they considered a PR fiasco for Rajini. "This is a big setback (for Rajini)," said analyst 'Tharasu' Shyam.

"He may have intended to call the fringe elements associated with the protest as anti-socials. But saying so, given the current atmosphere, would suggest that Rajini is calling the common people as anti-socials," Shyam said.

It was normal for Rajini to run into resistance at Tuticorin considering he had made no attempt to connect with the people in the run up to the violence, said political commentator M Kasinathan.

"There was no statement (from Rajini) on the protests for 100 days. At least, the Rajini Makkal Mandram members should have been in touch with the protesters. The incident shows that the coordination between leadership and the support is not at a satisfactory level," Kasinathan said.

Had Rajini not deviated from his political strategy, Wednesday's fiasco could have been avoided, Kasinathan added.

Wednesday, May 30, 2018

பிரசாரத்துக்கு வந்த 'போலி' கோலி... மக்களை ஏமாற்றிய தில்லாலங்கடி அரசியல்வாதி 


எம்.குமரேசன்


திரைப்படம் ஒன்றில், நடிகர் கமல்ஹாசனை கோயில் திருவிழாவுக்கு அழைத்துவருவதாக கிராம மக்களிடையே கஞ்சா கருப்பு வாக்குறுதி கொடுப்பார். மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றுக்கொண்டு, கமல்ஹாசன் வேடத்தில் நடித்த சிறுவனை கோயில் திருவிழாவுக்கு அழைத்துவந்து ஊர் மக்களிடையே தர்ம அடி வாங்குவார். அதே போல, தனக்காகத் தேர்தல் பிரசாரம்செய்ய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வருகிறார் என்று புனே அருகே ஊர் மக்களை ஏமாற்றியிருக்கிறார், லோக்கல் அரசியல்வாதி.



ஸ்ரீரூர் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. விட்டல் கண்பத் என்பவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் மோகம் அதிகம் என்பதால், தேர்தல் நேரத்தில் அவர்களைக் கவர கிரிக்கெட் கிட்டுகளை வழங்கி இளைஞர்களின் ஓட்டுகளைப் பெற அரசியல்வாதிகள் முயல்வார்கள். கிரிக்கெட் போட்டி நடத்த நன்கொடைகளைத் தாராளமாக அள்ளி வழங்குவார்கள். கண்பத், இவற்றையெல்லாம் தாண்டி சற்று வித்தியாசமாக யோசித்தார். கண நேரத்தில் அட்டகாசமான ஐடியா உதித்தது.

தனக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்ய விராட் கோலியே கிராமத்துக்கு வர இருப்பதாக இளைஞர்களிடம் கண்பத் கூறத் தொடங்கினார். விராட் கோலியுடன் கண்பத் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அடிக்கப்பட்ட பேனர்கள் கிராமம் எங்கும் வைக்கப்பட்டிருந்தன. இளைஞர்களும் இந்திய கேப்டனைப் பார்க்கும் ஆர்வத்துடன் இருந்தனர். சொன்ன மாதிரி, சொன்ன தினத்தில் விலை உயர்ந்த காரில் விராட் கோலி கிராமத்துக்கு வந்து இறங்கினார். கண்பத்துக்காக பிரசாரத்திலும் ஈடுபட்டார். கண்பத் விவரமாக யாரையும் 'போலி' கோலி அருகே நெருங்கவிடவில்லை.



 மகிழ்ச்சியில் திளைத்த இளைஞர்களோ கோலியைக் காண முண்டியடித்தனர். ஒரு சிலர் நெருங்கிச் சென்று செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போதுதான், வந்திருப்பது விராட் கோலி அல்ல 'போலி ' கோலி என்று அறிந்துகொண்டனர். தேர்தலில் வெற்றிபெற அவரைப் போன்ற தோற்றமுடையவரை கண்பத் அழைத்துவந்திருப்பது தெரிந்து ஏமாற்றமடைந்தனர். உண்மை தெரிந்ததும் கண்பத், 'போலி' கோலியுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.

`நம்பரும் போயிடும்... பணமும் திருடப்படும்!” - டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி #SimSwapping


ச.அ.ராஜ்குமார்   vikatan 30.05.2018

தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்' (SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.

ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல் நிலையம் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் தற்போது சிம்-ஸ்வாப் என்ற புது வழியில் குற்றங்கள் நடைபெறுவதாகவும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைத் திருடிப் பண மோசடியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.




`சிம்-ஸ்வாப் ' மூலம் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?

புதிதாக சிம் கார்டு ஒன்றை வாங்கி, ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும் குற்றவாளிகள், தங்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக அறிமுகம் செய்துகொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்டு, ``தங்களின் மொபைல் எண்ணுக்கு 10 ஜிபி இன்டர்நெட் இலவசமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் 16 இலக்கு எண்ணை 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் இலவச இன்டர்நெட் பேக் ஆக்டிவேட் செய்யப்படும்" என்று கூறித் தொடர்பைத் துண்டிக்கின்றனர். அவர்களால் புதியதாக வாங்கப்பட்ட சிம் கார்டில் இருக்கும் எண்ணைத்தான் அவர்கள் 16 இலக்கு எண்ணாக நம்மிடம் சொல்வார்கள்.

அதாவது நமது மொபைல் எண்ணை 3ஜி வசதியிலிருந்து 4ஜி வசதிக்கு மாற்றுவதற்கு இந்த முறையைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்கின்றன. உங்கள் கையில் ஒரு வெற்று சிம்கார்டைக் கொடுத்துவிடுவார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட புதிய சிம் கார்டின் 16 இலக்கு எண்ணை 121 என்ற எண்ணுக்கு உங்கள் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிய பிறகு சில நேரத்தில் உங்கள் பழைய சிம் கார்டு செயலிழந்துவிடும். பிறகு உங்கள் கையில் கொடுக்கப்பட்ட புதிய சிம்கார்டை மொபைலில் போட்டுப் பயன்படுத்தலாம். அது 4ஜி வசதிக்கு மாற்றப்பட்டிருக்கும்.

அவ்வாறு ஒரு சிம்கார்டை வாங்கிக் கொள்ளும் இந்த நூதனத் திருடர்கள், ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணை, (உங்கள் எண் என வைத்துக் கொள்வோம்) அழைத்து இலவச இன்டெர்நெட் இருப்பதாக ஆசை காட்டுகின்றனர். உங்களை அதற்கான குறுஞ்செய்தி அனுப்ப வைப்பதன் மூலம் உங்கள் எண் அவர்கள் கைக்கு மாறிவிடுகிறது. அந்த மொபைல் எண்ணில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளுக்கான செயலிகள் (Apps) மீண்டும் வேறு மொபைலில் பதிவிறக்கப்படும்போது உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) கூட அவர்களுக்கே செல்வதால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சுலபமாகத் திருடிவிட முடியும்.

கொஞ்ச நேரம் ரீசார்ஜ் கடையில் நின்றால் போதும். ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் குறைந்தது 5 எண்கள் நம் காதில் விழுந்துவிடும். அதைக் குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் ஏர்டெல்லா, வோடோஃபோனா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்கிறார்கள். புது சிம் ஆக்டிவேட் ஆனதும் பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற ஆப்களை அவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஓ.டி.பி மூலம் அதுவும் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன்பின் நம் பணமும் களவுபோகும். அதோடு பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பரை வைத்துப் பல குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன.

இந்த மாதிரியான ஒரு குற்றவாளியிடம் சிக்கிய மும்பையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் வங்கிக் கணக்கில் இருந்த 24,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 20,300 க்கும் மேற்பட்ட சிம்-ஸ்வாப் வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர்கள், ``எப்போதும் எங்கள் மையத்திலிருந்து எக்காரணம் கொண்டும் தங்களுக்கு இவ்வாறு 16 இலக்கு எண்களைக் கொடுத்து அனுப்பச் சொல்ல மாட்டோம். மேலும் தங்களுக்கு வரும் OTP எண்கள் எதையும் அனுப்புமாறும் நாங்கள் கேட்க மாட்டோம். எனவே, அவ்வாறு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால் அதற்குப் பதில் அளிக்காமல் எங்களிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.

இதே போன்ற தொழில்நுட்பக் குற்றங்கள் பல நிகழ்ந்து வருவதால், தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் இலவச இன்டர்நெட் பேக், புதிய பிரத்யேக ஆஃபர் என்ற செய்திகளையும் அழைப்புகளையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துத் தொடர்ந்தால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கலாம்.

 கொஞ்சம் உஷாராகத்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது.

திருவிழாவில் வழங்கப்பட்ட திருநீறில் பிரச்னையா? 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! 


எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி   vikatan 30.05.2018

'திருநீறு’ எனப்படும் விபூதியைப் பூசிக்கொண்டால் கண்கள் பாதிக்கப்படுமா? `இதென்ன கேள்வி?’ என்கிறீர்களா? உண்மை. இந்த விபரீதம் நடந்திருப்பது தேனி மாவட்டம், போடி அருகேயிருக்கும் கொடுவிலார்பட்டியில்! அங்கே நடந்த கோயில் திருவிழாவில், திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டவர்களுக்குக் கண்களில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.



கொடுவிலார்பட்டியில் அமைந்திருக்கிறது மதுராமலிங்கம் செளடாம்பிகையம்மன் கோயில். பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரமாக திருவிழா நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கத்திவிடும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் பக்தர்கள். அதாவது, கத்தியால் தங்களின் வெற்றுடம்பில் அடித்துக்கொள்ளும் வேண்டுதல்! அப்போது உடலில் ஏற்படும் காயத்தில் திருநீறு பூசிக்கொள்வார்கள். அதன்படி, கத்திவிடும் நேர்த்திக்கடன் முடிந்ததும், எல்லா பக்தர்களின் உடலிலும் திருநீறு பூசப்பட்டது. அப்போதே சிலருக்குக் கண்களில் எரிச்சல் இருந்திருக்கிறது. இரவு நேரம் என்பதால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஊர் மக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கண்களில் எரிச்சல் இருந்திருக்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட கிராம நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களை தேனி நகரில் அமைந்திருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

"திருவிழா முடிஞ்ச பிறகு எல்லாருமே தூங்கப் போயிட்டோம். ஆனா எல்லாருக்குமே கண்ணுல எரிச்சல் இருந்திருக்கு. தண்ணீரால முகத்தையும் கண்களையும் கழுவிட்டுப் படுத்துட்டோம். ஆனா எரிச்சல் தாங்க முடியலை. எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்குறவங்களும் அதே மாதிரி கண் எரிச்சல் இருக்குறதாச் சொன்னாங்க. சிலர் ராத்திரியே மருத்துவமனைக்குக் கிளம்பிப் போயிட்டாங்க.



என்னால ராத்திரியெல்லாம் தூங்கவே முடியலை. காலையிலதான் ஊர்ல நிறையப் பேருக்குக் கண் எரிச்சல் இருக்குறது தெரிஞ்சுது. கண் சிவப்பு நிறத்துல மாறிடுச்சு. கண்ணுலருந்து தண்ணீர் வழிஞ்சுக்கிட்டே இருக்கு. உடனே நாங்க எல்லாரும் மருத்துவமனைக்கு வந்துட்டோம். இங்கே சொட்டு மருந்து கொடுத்தாங்க. திருவிழாவுல குடுத்த திருநீறுதான் கண் எரிச்சலுக்குக் காரணம்னு சொல்றாங்க. உடம்புல கத்திவிட்ட அத்தனைபேருக்கும் கண்கள்ல எரிச்சலும் வலியும் இருக்கு. திருநீறுல ரசாயனம் எதையாவது கலந்திருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு. அந்தத் திருநீறையும் கையோட கொண்டுவந்திருக்கோம். ஹாஸ்பிட்டல்ல கொடுத்திருக்கோம். கண்கள் பாதிக்காம இருந்தா சரி’’ என்கிறார் பாதிக்கப்பட்ட ரவீந்திரன், கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.



அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்களில் பாதிப்பு ஏற்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடக்கம். அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் பாதிப்புக்கு என்ன காரணம் என்று அரவிந்த் கண் மருத்துவமனையின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, விளக்கம் சொல்ல மறுத்துவிட்டார்கள்.

இது தொடர்பாக தேனி மாவட்டப் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, "நேற்று திருவிழாவில் கத்திபோடும் நேத்திக்கடன் நடைபெற்றிருக்கிறது. அப்போது வழங்கப்பட்ட திருநீறுதான் கண் எரிச்சலுக்குக் காரணமா அல்லது திருவிழாவுக்காகப் போடப்பட்டிருந்த ராட்சத சோடியம் மின் விளக்குகள் காரணமா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

சோடியம் விளக்குகளைப் பயன்படுத்தினால் கண்கள் பாதிக்கப்படுமா என்று ஒரு கண் மருத்துவரிடம் கேட்டோம். "நிச்சயம் பாதிக்கப்படும். 2,000 வாட் திறன் கொண்ட ராட்சத சோடியம் விளக்குகள் திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கண் எரிச்சல், கண் சிவந்து போவது, கண்ணீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது போன்ற விளக்குகளால் பார்வைகூடப் பறிபோகலாம். இதே மாதிரியான சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன. எனவே, இது போன்ற விழாக்களில் அதிகத் திறன்கொண்ட மின் விளக்குகளைத் தவிர்த்துவிட வேண்டும். இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால், உடனே கண் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் கண் எரிச்சல் குணமாகும்’’ என்றார் அந்த மருத்துவர்.
சென்னை கொடுங்கையூர், பெருங்குடி... குப்பை மலைகளுக்கு அருகில் ஒரு சாபக்கேடான வாழ்க்கை! 

இளவரசன்  vikatan
30.05.2018 

சென்னையின் குப்பைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டப்பட்டு, மொத்தமாகச் சேர்ந்து சிறு சிறு குன்றுகளாக மாறி நிற்கின்றன. அந்தப் பகுதிக்குள் நுழைந்தாலே இன்னவென்று சொல்ல முடியாத கடும் துர்நாற்றம் வீசுகிறது; நன்கு ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே மூச்சுத்திணறல் ஏற்படுத்துகிற மாதிரி காற்றில் அத்தனை இறுக்கம்; உடனே அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்பது மாதிரி ஓர் அசெளகர்ய உணர்வு ஏற்படுகிறது.... 30 ஆண்டுகளாக அங்கேயே வசிக்கும் மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மாநகரத்தின் ஒட்டுமொத்த திடக்கழிவுகளும் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகளில்தான் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.



வட சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 270 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 2,100 முதல் 2,300 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதேபோல பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியிலிருக்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கு, 1988-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. இதன் பரபரப்பளவு 228 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 2,200 முதல் 2,400 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்தக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளால் அந்தப் பகுதிகளில் ஏற்படும் முதல் பிரச்னை... கடுமையான துர்நாற்றம். மனிதர்களால் தாங்கவே முடியாத துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டுதான் அதற்கு அருகிலேயே வசிக்கிறார்கள் மக்கள். இவர்களுக்கு இந்தக் குப்பைக் கிடங்கால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று போன்ற பிரச்னைகள் சர்வ சாதாரணமாக ஏற்படுகின்றன. பெருகியிருக்கும் ஈக்கள், கொசுக்கள், எலிகள் மூலமாகத்தான் விதவிதமான தொற்றுநோய்களும் பரவுகின்றன.

இந்த பூமியில் அரிதான நிலப்பகுதி நன்னீர் சதுப்பு நிலம். பாதுகாக்கப்படவேண்டிய நிலப்பகுதிகளில் சதுப்பு நிலமும் ஒன்று. பல்லுயிர் வளரும் இதை `அலையாத்தி காடுகள்’ என்று சொல்வார்கள். பள்ளிக்கரணை அப்படிப்பட்ட சதுப்பு நிலப் பகுதி. இந்த அரிய நிலப்பகுதியை குப்பைக் கிடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று, பாழ்படுத்திக்கொண்டிருக்கிறது.



பெருநகர சென்னை மாநகராட்சி என்னென்னவிதமான கழிவுகள், எவ்வளவு சதவிகிதம் கொட்டப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது. அதன்படி...
* உணவுக் கழிவுகள் - 8 சதவிகிதம்
* பசுமைக் கழிவுகள் - 32.25 சதவிகிதம்
* மரக் கழிவுகள் - 6.99 சதவிகிதம்
* பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் - 5.86 சதவிகிதம்
* தொழிற்சாலைக் கழிவுகள் - 1.18 சதவிகிதம்
* உலோகக் கழிவுகள் - 0.03 சதவிகிதம்
* துணிக் கழிவுகள் - 3.14 சதவிகிதம்
* காகிதக் கழிவுகள் - 6.45 சதவிகிதம்
* ரப்பர் மற்றும் தோல் கழிவுகள் - 1.45 சதவிகிதம்
* கட்டடக் கழிவுகள் - 34.65 சதவிகிதம்

கொடுங்கையூர் குப்பைக் கிடங்குக்கு எதிரில், 100 அடிக்கும் குறைவான தூரத்திலேயே இருக்கிறது வீட்டு வசதி வாரியக் குடியுருப்புப் பகுதி. அங்கே வசிக்கும் ஒருவர் சொல்கிறார். ``24 மணி நேரமும் கெட்ட நாத்தத்தை சுவாசிச்சுக்கிட்டேதான் வாழவேண்டியிருக்கு. ராத்திரியில கொசுத் தொல்லை, பகல்ல ஈ தொல்லை. எங்களுக்கு இது சாபக்கேடான வாழ்க்கை. மாசா மாசம் உடம்பு சரியில்லாமப் போயிடுது. உடம்பு சரியில்லைன்னா, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குப் போவோம்; ஊசி போடுவாங்க, மாத்திரைகள் கொடுப்பாங்க; ஆனா அடுத்த மாசமே மறுபடியும் ஏதாவது பிரச்னை வந்துடும். குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல்னு எப்பவும் ஏதாவது வந்துக்கிட்டே இருக்கு. சம்பாதிக்கிற பணத்துல பாதிக்குமேல ஆஸ்பத்திரிக்கே சரியாப் போகுது. கொசுக்கடியால சரியான தூக்கமில்லை, சருமத்துல ஏதாவது பாதிப்பு வந்துடுது, மூச்சுவிடுறது சிக்கலாகிடுது, இன்னும் ஆஸ்துமா, டி.பி-னு என்னென்னவோ நோய்களால அவதிப்படுறோம். இங்கே மாநகராட்சிக்காரங்க வந்து கொசு மருந்து அடிச்சே ஆறு மாசம் இருக்கும். எத்தனையோ தடவை போய் சொல்லிட்டோம்... ஆனாலும் மருந்து அடிக்க மாட்டேங்கிறாங்க...’’ - நீள்கிறது அவரின் வேதனைக் குமுறல்.



சற்று தூரத்தில் 50 வயதான ஓர் அம்மா நிதானமில்லாமல், முகமெல்லாம் வீக்கத்தோடு படுத்திருந்தார். என்னவென்று விசாரித்தோம், ``இந்த அம்மா ஒரு வருசத்துக்கு முன்னாடி நல்லாத்தான் இருந்தாங்க. என்ன பிரச்னைன்னே தெரியலை. திடீர்னு முகம், கை, காலெல்லாம் வீங்கிக்கும். இவங்களுக்கு எழுந்து நிக்கறதுக்கே தெம்பு இல்லாமப் போச்சு. டாக்டர்கிட்டப் போனா, ஊசி போடுவாங்க, மாத்திரை கொடுப்பாங்க. அவ்வளவுதான். பிரச்னை என்னன்னு விளக்கமா சொல்ல மாட்டாங்க. ஒரு வாரம் நல்லாயிருப்பாங்க. அப்புறம் மறுபடியும் கை, கால் வீங்கிக்கும்...’’ என்கிறார் ஒருவர். அவர் சொன்னதைப் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அந்த அம்மா.

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால், உடல்நல பாதிப்புகள் மட்டுமல்ல... நிலத்தடி நீரும் அந்தப் பகுதிகளில் மிக மோசமாக மாசடைந்து வருவதாகச் சொல்கிறார் சமூக செயற்பாட்டாளர் உதய் ராஜ்... ``பெரிய குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளில் இருக்கும் வேதிப் பொருள்கள், கரிமப் பொருள்கள், மழைநீருடன் கலந்து, கீழே வடியும்போது கறுப்பு நிறத்தில் இருக்கும். அதை `லீச்சேட்’ (Leachate) என்று சொல்வார்கள். இந்த நீர், நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து இருக்கிறது. அந்த நீரை எடுத்துச் சோதனை செய்ததில் உலோகத் துகள்கள், ஆர்சனிக் போன்ற உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் கலந்திருக்கின்றன. சதுப்புநிலம் என்பதால், இந்த பாதிப்பு பள்ளிக்கரணைப் பகுதியில் மிக அதிகமாக இருக்கும். குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து தனியார் அமைப்புகள் இப்போதுதான் ஆய்வுகள் நடத்திவருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகுதான், எவ்வளவு பேர், என்னென்ன உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.’’



சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான `பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜனிடம் பேசினோம்... ``கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகள் இப்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருக்கும் பிளாஸ்டிக், அழுகிய பொருள்கள் என அனைத்தும் சேர்ந்து அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் முழுவதும் மாசடைந்துவிட்டது. அந்தக் குப்பைகளை எரிக்கும்போது, அதிலிருக்கும் பிளாஸ்டிக்கும் சேர்ந்து எரிந்து வெளிவரும் புகையால் அந்தப் பகுதி மக்களுக்கு தோல் வியாதிகள், நுரையீரல் பாதிப்புகள், சுவாசக் கோளாறுகள், புற்றுநோய்கூட ஏற்படுகின்றன.

குப்பைகளைக் கையாள்வதில் தமிழக அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. வீடுகளிலிருந்தோ மற்ற இடங்களிலிருந்தோ குப்பைகள் எடுக்கும்போது, `மக்கும் குப்பை’, `மக்காத குப்பை’ எனப் பிரிக்க (Source Segregation) இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதை அவர்கள் முன்னெடுக்கவே இல்லை. பிளாஸ்டிக், பேட்டரிகள், மின்னணு சாதனக் கழிவுகள், அழுகிய காய்கறிகள்... என அனைத்துக் குப்பைகளும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் கொட்டப்படுகின்றன. குப்பைக் கிடங்குகளை அகற்றக் கோரி கொடுங்கையூர், பெருங்குடிப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆனால், அரசு இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை.



பெருங்குடி குப்பைமேடு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் இருக்கிறது. அங்கே குப்பைகளைக் கொட்டுவது அநியாயத்தின் உச்சம். சதுப்புநிலம் என்பது ஓர் உயிர்ச்சூழல். பல்லுயிர்கள் வாழும் பகுதி. அரிதாக இருக்கும் நன்னீர் சதுப்புநிலம். மழை, வெள்ள நீரைத் தேக்கிவைக்கும் இடம். இந்தப் பகுதி மற்ற இடங்களைவிட, பத்து மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. இந்தக் குப்பைக் கிடங்கால், அந்தப் பகுதியின் நிலப்பரப்பும், நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்திருக்கின்றன. இயற்கையின் கொடையான அந்த சதுப்புநிலப் பகுதியை எதற்கும் லாயகற்றதாக மாற்றிவிட்டார்கள். `லீச்சேட்’ கலந்த நிலத்தடி நீரைக் குடித்தால் புற்றுநோய் வரவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் இந்த லீச்சேட்டில் மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, கரிம வேதிப் பொருள்கள், ஆல்கஹால், ஆல்டிஹைடு என்று பல நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப் பொருள்கள் இருக்கின்றன. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உயிரையே பறிக்கும் நோய்கள் வரக்கூட வாய்ப்பிருக்கிறது. அந்தப் பகுதி மக்களை ஆய்வுக்குள்ளாக்கினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

குப்பைகளில் கொட்டப்படும் `ஃப்ளோரசன்ட்’ பல்புகளிலிருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசித்தால், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும். இந்தக் கிடங்குகளிலிருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்’ வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட இருபது மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உலகின் பிளாஸ்டிக் கழிவுகளில் ஒன்பது சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 91 சதவிகிதம் மற்ற கழிவுகளுடன் சேர்ந்து கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.

பெருங்குடி குப்பைக் கிடங்கு இருக்கும்வரை, தென் சென்னைப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இதற்குக் காரணமும் சதுப்புநிலப் பகுதியிலிருக்கும் குப்பை கிடங்குதான். அந்த இடத்தில் இவ்வளவு பெரிய குப்பைக் கிடங்கு இருப்பதால், தண்ணீர் நிலத்தில் பரவி, உறிஞ்சப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனாலேயே அந்தப் பகுதியில் வெள்ளம் வந்தால் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும், அரசு குப்பை மேலாண்மையைச் சரிவர செய்யாததே காரணம்’’ என்கிறார் சுந்தரராஜன்.

குப்பைக் கிடங்குகளில் கள ஆய்வு செய்த சமூகச் செயற்பாட்டாளர் ஹேரிஸ் சுல்தானிடம் பேசினோம். ``கடந்த 8.4.2016-ல் மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மைச் சட்டம் கொண்டுவந்தது. அதில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தில், `பெரிய நிறுவனங்கள் தங்களது பொருள்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் அடைத்து விற்பனை செய்தால், அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஆறு மாதங்களுக்குள் செய்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், எந்த நிறுவனமும் இதை நடைமுறைப்படுத்தவில்லை. பெருங்குடி, கொடுங்கையூர் மட்டுமில்லாமல் சிட்லப்பாக்கம், பல்லாவரம் ஏரிகளில் கொட்டப்பட்டுவரும் குப்பைகளை ஆய்வு செய்ததில், பெரிய நிறுவனங்களின் பிளாஸ்டிக் குப்பைகள்தான் அவற்றில் அதிகமாக இருந்தன. சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அதை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய நகரங்களிலேயே, இந்தச் சட்டத்தை அமல்படுத்தாதது சென்னையாகத்தான் இருக்கும்’’ என்று வேதனையுடன் கூறுகிறார்.



குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுநல மருத்துவர் எழிலன் கூறுகிறார்... ``ஈக்கள் மற்றும் சிறு பூச்சிகள் பரப்பும் கிருமிகளால் பரவும் தொற்றுநோய்களான காலரா, வயிற்றுப்போக்கு, அமீபியாஸ் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. குடிநீரில் குப்பைக் கழிவுநீர் கலப்பதால், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் போன்ற வாயுக்களால், நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக் கோளாறுகள் உண்டாகும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஐ.எல்.டி (ILD - Interstitial Lung Disease) - நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு வரலாம். நான் அந்தப் பகுதியில் மூன்று முறை ஆய்வு செய்திருக்கிறேன். அங்கே வசிக்கும் மக்கள் கிருமிகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். மற்ற இடங்களில் பெரும்பாலும் இதுபோன்ற நோய்கள் பரவுவது இல்லை.

இங்கே வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சருமப் பிரச்னைகள் இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசிக்கும், அந்தப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு மீத்தேன், சல்பர் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ரத்தக்குழாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய்கள் ஏற்படலாம். ஆனால், அங்கே இதற்கான முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. வெளிநாடாக இருந்தால், அந்தப் பகுதி மக்களை பத்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் வசிப்பவர்கள் என்று பிரித்து முறையாக ஆய்வு நடத்தி, கண்டுபிடித்து அதைச் சரி செய்திருப்பார்கள். அரசுதான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதுபோன்ற இடங்களை `ஹாட் ஸ்பாட்ஸ்’ என்று கூறுவோம். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஐந்து பேருக்காவது எப்போதும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் கண்டறியப்படுவது வேதனை’’ என்கிறார் எழிலன்.
``மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..! - இந்த ஆசை சரிதானா? 

க.சுபகுணம்  vikatan 30.05.2018

கோடைக்காலம் தொடங்கியவுடன் கையில் நைலான் நரம்புகளால் செய்த தூண்டில்களை எடுத்துக்கொண்டு குளம் குளமாகத் தேடிச்சென்று மீன்பிடித்த நினைவுகள் பலரது மனதில் குளத்தோரச் சிற்றலைகளைப் போல் அலைமோதிக் கொண்டிருக்கும். அன்றெல்லாம் தேடித் தேடிச் சென்று கலங்கிய குளங்கள் தெளியும் வரை பொறுமை காத்திருந்தத் தருணங்களும், பொறி, அரிசிச் சோறு போன்றவற்றைத் தூவிவிட்டு அதைச் சாப்பிட மீன்கள் மேலே வரும்வரை நீரில் சிறு அலைகூடத் தளும்பவிடாமலும், தேவையான அளவு மீன்கள் மேலே வரும்வரை சிறு ஓசைகூடச் செய்யாமல் அமைதிகாத்த நிமிடங்களும் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத நினைவுக் குமிழிகள்.



அந்த நினைவுக் குமிழிகளுக்குள் நாம் தேடிப் பிடித்த அனைத்து மீன் வகைகளும் இன்றும் உயிர்வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. நமது ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் நினைவகக் குளங்களில். தூண்டிலில் கட்டுவதற்காக மண்ணைத் தோண்டித் தோண்டிச் சேகரிக்கும் மண்புழு இரைகளில் தொடங்குகிறது அன்றைய சிறுவர்களின் மீன் பற்றிய அறிவு. மண்புழுவைத் தூண்டிலில் கட்டிவிடுவதன் மூலம் அனைத்து மீன்களையும் பிடித்துவிட முடியாது. சூரை, கெண்டை, வவ்வால் போன்ற மீன்களை மட்டுமே அப்படிப் பிடிக்க முடியும். கொரத்தி, ஜிலேபி போன்ற சில மீன்களை நீரில் உணவைத் தூவி வலை போட்டுத்தான் பிடிக்க முடியும்.

கல் இடுக்குகளில் ஒளிந்துகொள்ளும் கல்லுளிமங்கன் முதல் சாப்பிடுவதற்கு ஆகாததால் கண்ணில் பட்டாலும் அவசியமின்றிக் கொல்லக்கூடாது என்று அப்படியே விட்டுவிட்ட ஓலை மீன் வரை எதையும் எப்போதும் தேவையின்றிப் பிடித்ததில்லை. பொழுதுபோக்காகவே இருந்தாலும் குழுவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு முன்னமே திட்டமிட்ட மீன்களைத் தவிர வேறு எதையும் பிடித்ததில்லை.



அன்று சிறுவர்களாய் நாம் குளங்கள் தேடி ஓடினோம். அதையே ஸ்போர்ட் ஃபிஷிங் (Sport Fishing) என்ற பெயரில் வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு வித்தியாசம், நாம் சில மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டோம். இவர்கள் வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாம் போகலாம், மீன் பிடிக்கலாம். எவ்வளவு மீன்களை வேண்டுமானாலும் பிடிக்கலாம். ஆனால், ஒரு விதியுண்டு. நாம் பிடிக்கும் மீன்களை மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும்.
இந்த வகைப் பொழுதுபோக்கு மீன்பிடித்தலில் எழுதப்படாத ஒரு விதியுண்டு. ஒருமுறை பிடிக்கப்பட்ட மீன் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பிடிக்கப்படலாம். ஆனால், பிடித்தவுடன் கடலில் விட்டுவிட வேண்டும். அதற்கு ஏற்படும் காயங்களைப் பற்றியோ, அவற்றின் உடலில் சேரும் செயற்கை இரைகளைப் பற்றியோ எந்தவிதக் கவலையும் இல்லை. அது வெறும் மீன் தானே.



செயற்கை இரைகளைப் பயன்படுத்தி பிடிக்கும் இவர்கள் பிடிக்கப்படும் மீன்கள் கடலிலேயே மீண்டும் விடப்படுவதால் வளம் குறையாது என்று வாதிடுகிறார்கள். ஆனால், அந்தச் செயற்கை இரைகள் பிடித்த பிறகு விடப்படும் மீனின் வயிற்றுக்குள் தான் இருக்கும் என்பதையும் அந்த பிளாஸ்டிக் இரை அதை எப்படியும் கொன்றுவிடும் என்பதையும் ஏன் மறந்து விடுகிறார்கள்?

உணவுக்காக வேட்டையாடலாம் என்பது இயற்கை விதி. ஆனால், அதற்காகக் கூட எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. 95% மீன்கள் இந்தக் கடும் சோதனைகளைக் கடந்தும் உயிர் வாழ்கின்றனதான். ஆனால், இங்கே கொல்லப்படுவதல்ல பிரச்னை. மீன்களை ஒவ்வொருவராகப் பிடித்து அதற்கு 1%, 3%, 5% என்ற அளவுகளில் காயங்களைத் தந்துவிட்டு இரக்க குணத்தோடு அதை மீண்டும் வாழவிடுவது எவ்வளவு பெரிய கபட நாடகம்?

உணவுக்காக மீன் பிடிப்பவர்கள் மீண்டும் அவற்றின் வம்சம் வளர்வதற்காகக் கொஞ்சம் விட்டுவைப்பார்கள். ஆனால், இத்தகைய பொழுதுபோக்கு மீனவர்கள் தங்கள் சுய திருப்திக்காக மற்ற உயிர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தான் கொல்லவில்லையே! மீண்டும் உயிருடன் விட்டு விடுகிறார்களே! என்றும் சிலர் வாதிடுகிறார்கள். மீன்களுக்கு இயற்கையாகவே தப்பித்து வாழக்கூடிய திறன் உண்டு. ஆனால், நமது மனநிம்மதிக்காக அவற்றைப் பிடித்துத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தப் புகார் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். இது கவனிக்கப்பட வேண்டிய விபரீத பிரச்னை. லாப நோக்கோடு உளவியல் ரீதியாக இந்த வகை ஆசைகளை வளர்த்தெடுக்கும் ஊக்குவிக்கும் நிறுவனங்கள், ஆசைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இயற்கையின் அடிப்படை அறங்களை மக்கள் மத்தியில் மறக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.



``ஓர் உயிரினத்துக்குக் காயம் உண்டாக்கும் வகையில் செய்யும் செயல்கள், கொடுக்கும் தண்டனைகள், வற்புறுத்திச் செய்யவைக்கும் செயல்கள் அது தண்டனையாகவோ அல்லது கொடுப்பவரின் மன நிம்மதிக்காகவோ எதுவாக இருப்பினும் அது சித்ரவதை தான்."

இது நமது சட்டத்தில் சித்ரவதை குறித்து எழுதப்பட்டிருக்கும் விளக்கம். இதில் எந்த உயிருக்கும் என்ற வரையறையில் மீன்களும் உள்ளடங்கும். இதற்கும் பலர் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முயற்சிக்கிறார்கள். மீன்களுக்கு வலிகளை உணரும் நரம்பு மண்டலங்கள் இல்லாததால் இந்தச் செயல்களால் அவை எதையும் உணராது என்கிறார்கள். நம்மை சில நிமிடங்கள் சுவாசிக்க வழியற்ற வகையில் விட்டுவிடுவோம். மீண்டும் சுவாசிக்க அனுமதிக்கலாம். மீண்டும் அவ்வாறே சுவாசிக்க வழியின்றிச் செய்யலாம். மீண்டும் அனுமதிப்போம். இவ்வாறாகத் தொடர்ச்சியாக இம்சித்துக்கொண்டே இருந்தால், அப்போது புரியும் மீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் விடும்வரை மூச்சுத்திணறி அவை படும்பாடு.

என்றோ ஒரு பாட்டி சொன்ன வரிகள், ``தினமொரு பொழுதுபோக்கு இருந்தால், சூரியனைக் கண்ட பனிபோல் கவலைகள் கரையும்".

உண்மைதான். அது அடுத்த உயிர்களின் கவலைகளை அடித்தளமாகக் கொண்ட பொழுதுபோக்குகளாக இல்லாத வரையிலும்.
இரண்டாக உடைந்த ரயில் சக்கரம் - பெரும் விபத்து தவிர்ப்பு! 

பிரேம் குமார் எஸ்.கே.

ஓடும் ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்ததால், அதிவிரைவு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



ரயில்வே துறையில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்களுக்கு, தண்டவாளத்தில் ஏற்படும் விரிசல் போன்ற பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும். ஆனால், நேற்று காலை அதிவிரைவு ரயிலின் சக்கரம் ஒன்று இரண்டாக உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் - யஷ்வந்த்பூர் அதிவிரைவு ரயிலின் சக்கரம், ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது இரண்டாக உடைந்துள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து விநோத சத்தம் கேட்டுள்ளது. இதனால், உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திச் சோதித்துள்ளார். அப்போது ஒரு பெட்டியில், ஒரு சக்கரம் இரண்டாக உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளில் ஏற்றப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரயில்வே உயர் அதிகாரிகள், ”இதுபோன்று இது வரை நாங்கள் பார்த்தது இல்லை. ரயில் சக்கரத்தில் பிரச்னை வருவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். சக்கரம் அதிக முறை பயன்படுத்தப்பட்டதா அல்லது தயாரிப்பில் நடந்த குளறுபடியா என விசாரணை நடைபெறும்” என்றனர்.

  இதுபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் சக்கரத்தின் நிலைகுறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரும் பிள்ளைகளும்

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 28th May 2018 02:12 AM

அறிவியலின்படி உலகின் அனைத்து உயிரினங்களும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று, தாவர இனங்கள், மற்றொன்று விலங்கினங்கள். அறிவியலில், மனிதன் விலங்கினமாகவே கருதப்படுகிறான். விலங்கினத்திலேயே அளப்பரிய ஆற்றல் உடைய மூளையைக் கொண்டிருப்பதாலும், மற்ற திறமைகளாலும், பரிணாம வளர்ச்சியை விளக்கும் பரிணாம மரத்தின் உச்சாணிக்கொம்பில் மனிதன் அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.

உயிரினங்களே தோன்றியிராத காலத்தில், உயிரணுக்களாகத் தொடங்கி, ஒரு செல் உயிரி, பலசெல் உயிரிகளாக உருவெடுத்து, முதுகெலும்பு கொண்ட உயிரிகளாகப் பெருக்கம் அடைந்து, இறுதியில் மனிதர்களைப் போன்ற குரங்குகளில் இருந்து ஆதி மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்பதாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய வரலாறு விரிகிறது. இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல படிப்படியாக ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக உருவெடுக்கிறது என்பதே அதன் தத்துவமாகும். அதன்படி கடைசி உயிரினமான மனிதன் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புதிய உயிரினமாக (!) மாறுவான் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. இறை நம்பிக்கை உடையவர்களோ, வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், எல்லா உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்று உறுதியாக நம்புகிறார்கள். உண்மையான இறை நம்பிக்கையும், அதனால் ஏற்பட்ட இறையச்சமும் மக்களை தவறுகள் செய்வதில் இருந்து தடுக்கிறது. நல்லொழுக்கத்தைப் பேணும் இறை நம்பிக்கை அற்றவர்கள் கூட தவறு செய்வதற்குத் துணிய மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் நற்பண்புகளால், மனிதர்களும், விலங்குகளும் ஒன்றல்ல என்று தங்களை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்கிறார்கள் .

தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காக்கப்பட்டு வந்த பழக்க வழக்கங்களும், கலாச்சாரங்களும், ஒழுக்க விழுமியங்களும் காற்றில் கற்பூரம் கரைவதைப் போல் காணாமல் போய் விட்டதற்கு தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்வது, பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்காமல் இருப்பது, குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் பெரியோர் இல்லாமல் இருப்பது, தடையின்றிக் கிடைக்கும் இணையம், கைப்பேசி வசதிகள் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். சிறுவர்கள், தொலைக்காட்சியில் சில காட்சிகளைப் பார்க்கும்போது தணிக்கை அதிகாரிகள் போன்று பெற்றோர் அங்கே வந்தால், காட்சிகள் மாற்றப் பட்டு விடும். அவர்கள் பார்க்கக் கூடாதவை என்று பெற்றோர், பெரியோர் எதையெல்லாம் அவர்களிடம் இருந்து மறைத்தார்களோ, அவை எல்லாம் தற்பொழுது மிக எளிதாக கணினியிலும், கைப்பேசியிலும் கிடைக்கிறது.
அவர்களின் வயதுக்கு மீறிய, இலைமறை காயாக இருக்க வேண்டியவை எல்லாம் அவர்களின் கண்களுக்கு அருகில் தங்கு தடையின்றித் தணிக்கை செய்யப்படாமலேயே கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர்வது எப்படி சாத்தியமாகும்?

ஒழுக்கமான பெற்றோர், கண்டிப்பு, நல்ல வீட்டுச்சூழல் என்று எல்லாம் இருந்தும் பிள்ளைகள் வழி தவறுவதற்கு கெட்ட நண்பர்களின் சகவாசம் முக்கியக் காரணமாகும். சுதந்திரமான கணினி, கைப்பேசி பயன்பாட்டுடன் குடிப் பழக்கமும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். மதுவின் தீமையைப் பற்றி நாம் கேள்விப்பட்ட ஒரு குறுங்கதை, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் முன் மது, மாது, குழந்தை மூன்றும் காட்டப்படுகிறது. மது குடிக்க வேண்டும், அல்லது பெண்ணை மான பங்கப்படுத்த வேண்டும், அல்லது குழந்தையைக் கொல்ல வேண்டும், இந்த மூன்றில் ஒன்றை அவன் எப்படியாவது செய்ய வேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது
.
பெண்ணை மானபங்கப்படுத்துவதும், குழந்தையைக் கொலை செய்வதும் கொடூரமான குற்றங்களாக அவனுக்குத் தோன்றவே மதுவைக் குடிக்கிறான். குடி போதையில் குழந்தையைக் கொன்று விட்டு, பெண்ணையும் மான பங்கப்படுத்துகிறான் என்று, மதுவின் தீமையை விளக்குவதாகக் கதை முடிகிறது. மதுப் பழக்கத்தாலும், கூடா நட்பினாலும், பிறன் மனை விழைதலாலும், தாயோ, தந்தையோ பெற்ற குழந்தைகளைக் கொலை செய்கிறார்கள். இன்னும் கணவன், மனைவியை அல்லது மனைவி கணவனைக் கொலை செய்ததாகப் பத்திரிகைகளில் வரும் சில செய்திகளைப் படிக்கும்போது மிருகப் பண்புகள் மரபணுக்கள் வழியாக மனிதர்களிடம் படிமம் போல் படிந்து மக்களை, மாக்களாக்கி விட்டதோ என்றும், "தாயிற் சிறந்த கோயிலுமில்லை,' தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை', "தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்பதெல்லாம் இத்தைகையோருக்கு எள்ளளவும் பொருந்தாது என்றும் எண்ணத் தோன்றுகிறது.

குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் என்பதாக மனிதர்களின் வாழ்நாட்களை மூன்று பருவங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். குழந்தைப்பருவம் எதுவும் எழுதப்படாத, சுத்தமான கரும்பலகைக்குச் சமம். நாம் அவர்களை எப்படி வளர்க்கிறோமோ, எந்த சூழலில் வளர்கிறார்களோ அப்படியே கரும்பலகை நிரப்பப்படுகிறது. நாற்பது நாட்களுக்கு நாய் கூட பிள்ளை வளர்க்கும் என்று பெரியோர் அடிக்கடி கூறுவார்கள். பிள்ளைகள் வளர வளர பிரச்னைகள் வரும் சமயம் எல்லாம் அவர்களின் கூற்று, நினைவில் வரும். இந்தக் கடினமான கடமையை, பெற்றோர் நல்ல விதமாகப் பூர்த்தி செய்து விட்டால் இளமைப்பருவம் அழகாக மலரும். இப்பருவத்தில் அவர்கள் பெறும் அனுபவங்கள் அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும்.
ஆபத்தான அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில் பெற்றோருக்கு இவ்வளவு சவால்கள் இருந்திருக்காது. கைக்கெட்டும் தூரத்தில் அவை நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளை, புதையலைக் காக்கும் பூதம் போல் காக்கும் பணி நிச்சயமாக சவால் நிறைந்ததுதான். அவற்றை சமாளித்து வெற்றி பெற்று விட்டோமானால் நாம் கனவு காணும் புதிய சமுதாயத்தில் நன்மக்களைப் பெற்ற பெற்றோர் என்று அனைவரும் கொண்டாடுவர்; நாமும் பெருமிதம் கொள்ளலாம். வலிகள் இல்லாத வெற்றிகள் கிடையாது. "மாக்கள் அல்ல நாம், மக்கள்' என்பதை என்றும் நினைவில் கொண்டு நம் குழந்தைகளை நன்மக்களாக வளர்ப்பதில் மிகுந்த அக்கறையும், முயற்சியும் எடுப்போம்.












கவலை வேண்டாம்… ரயில் டிக்கெட் முன்பதிவு ‘வெயிட்டிங் லிஸ்டா?’- ஐஆர்சிடிசி புதிய வசதி அறிமுகம்

Published : 29 May 2018 14:59 IST

பிடிஐ புதுடெல்லி

 


கோப்புப்படம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக ரயில்வேயின் ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வசதியின்படி, காத்திருப்போர் பட்டியலில் ஒருவர் இருந்தால்,அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசி நிலைக்கு வருமா என்பதை ரயில்வே அறிமுகம் செய்துள்ள கணித்துச் செல்லும்சேவை, அவர்களுக்குத் தகவல் அளிக்கும்.
 
இதன்மூலம் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதியாகுமா என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும்.இதன் மூலம் பயணிகளின் கடைசி நேர பரபரப்பு தவிர்க்கப்படும்.

ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கணித்துக்கூறும் சேவையை, மத்திய ரயில்வே தகவல் முறை உருவாக்கியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திருக்க இனி தேவையில்லை. ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு குறித்த கணித்துச் சொல்லும் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்ஏசியில் வருமா என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்'' எனத் தெரிவித்தார்.

இந்த கணித்துக்கூறும் சேவையை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்தான் காரணமாக இருந்தவர். கடந்த 13 ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கணித்துக்கூறும் சேவையை உருவாக்கக் கோரி ரயில்வே தகவல் மையத்துக்கு அறிவுறுத்தி, அதை ஒரு ஆண்டுக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக நாள்தோறும் 13 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி செல்கிறார்

Published : 30 May 2018 07:33 IST

சென்னை




தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு தல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தூத்துக்குடி செல்ல உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடந்த முற்றுகைப் போராட் டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து போலீஸார் நடத் திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தூத்துக்குடி செல்ல இருக்கிறார். சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு தூத்துக்குடி புறப்படும் விமானத்தில் அவர் செல்கிறார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
13 உயிர்கள் பலி; ஸ்டெர்லைட்டுக்கு மூடுவிழா: கற்ற பாடம் என்ன? குற்றம் யார் பக்கம்?

Published : 30 May 2018 07:34 IST


எம்.சண்முகம்

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். - (கோப்புப் படம்)

விலை மதிக்க முடியாத 13 உயிர்கள் பலியான பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடுவிழா கண்டு வருகிறது. இந்த ஆலையை மூடும் அவசியம் குறித்து பேசும் நிலையில், இந்த ஆலை தேவையா என்ற கருத்தையும் நாம் விவாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உலகில் தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருளாக காப்பர் அமைந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக 140 முதல் 300 கிராம் காப்பர் தேவைப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் 1.5 கிலோ காப்பர் இடம்பெற்றுள்ளது. வீடுகளில் சராசரியாக 100 கிராம் காப்பர் பயன்பாடு உள்ளது. காற்றாலைகளில் 5 டன் காப்பர் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.2 கோடி டன் காப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. காப்பர் தயாரிப்பு, தோண்டி எடுத்தல் மற்றும் வேதியியல், இயற்பியல் ஆய்வக முறைப்படி நடைபெறுகிறது. இதில் இரண்டாவது முறையையே ஸ்டெர்லைட் மேற்கொள்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம் 8 சதவீத காப்பர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. நம் நாட்டின் தேவையில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

‘கழிவுகளை வெளியேற்றுவதில்லை’

இந்நிலையில், ‘நாங்கள் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ என்ற நிலையை கடைப்பிடிக்கிறோம். எங்கள் ஆலையில் இருந்து எந்தக் கழிவும் வெளியேறுவதில்லை. தன்னிச்சையான நிபுணர் குழு மூலம் சோதனை நடத்தினால், அதற்கு உடன்பட தயார்’ என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘வெளிநாடுகளில் இருந்து காப்பர் இறக்குமதி செய்யும் நாடாகவே இந்தியா இருக்க வேண்டும் என்று அந்நிய சக்திகள் விரும்புகின்றன. அவர்கள் உள்ளூர் அமைப்புகள் உதவியுடன் போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். உண்மையை பொய் பிரச்சாரம் வென்றுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே ஸ்டெர்லைட் நிறுவனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதா, போராட்டக்காரர்கள் உள்நோக்கத்துடன் செயல்பட்டு மூட வைத்துள்ளார்களா போன்ற கேள்விகள் சாதாரண மக்கள் மத்தியில் எழுகிறது.

முன்பெல்லாம் சாதாரண மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வேண்டும், தொழிற்சாலை வேண்டும் என்று போராடிய நிலை மாறி, தற்போது நான்கு வழிச் சாலை வேண்டாம், தொழிற்சாலை வேண்டாம் என்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று விரிவாக ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனைத் துச்சமாக புறந்தள்ளிவிட்டு திட்டங்களை செயல்படுத்தும் போக்கே இந்த மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. ‘இந்த ஆலை தேவைதான், சுற்றுச்சூழலுக்கு கேடு வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று உறுதியளிக்க வேண்டியவர்கள் அனுமதியளிக்கும் ஆட்சியாளர்கள், கண்காணிக்கும் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்கள். இவர்கள் பல காரணங்களால் தொழில்நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து விடுகின்றனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

இந்த நம்பகத்தன்மை குறைவுதான் போராட்டக்காரர்களை உருவாக்குகின்றன. அவர்களுக்குள் சமூக விரோதிகள் ஊடுருவவும் காரணமாகி விடுகிறது. வன்முறைகளைத் தூண்டும் சித்தாந்தவாதிகள் இந்த நிலைமையை பயன்படுத்தி சுயலாபம் அடைகின்றனர். அவர்களது பேச்சை சாதாரண மக்கள் நம்பி களத்தில் பலியாகும் நிலை ஏற்படுகிறது. ஆட்சியாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு, நீதிமன்றம், பத்திரிகைகள் அனைத்தும் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுவதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
ரயில்வே நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Added : மே 30, 2018 01:01

சென்னை: உரிய சேவை வழங்காத, ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, அமைந்தகரை, அய்யாவு காலனியை சேர்ந்த, சேரன், 56. இவர், சென்னை வடக்கு, நுகர்வோர் நீதிமன்றத்தில், அளித்த மனு:நானும், என் மனைவியும், சென்னையில் இருந்து, கர்நாடகா மாநிலம், மங்களூருக்கு, வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், 2011ம் ஆண்டு, முதல் வகுப்பு, 'கூபே' பெட்டியில் பயணம் செய்தோம்.இந்த பெட்டியில், டிக்கெட் இல்லாத பயணி ஒருவர் வந்து அமர்ந்ததால், பிரச்னை ஏற்பட்டது. ரயில் டிக்கெட் பரிசோதகரும், கண்காணிப்பாளரும் கண்டுகொள்ளவில்லை. மன உளைச்சலுக்கு ஆளானோம். 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணையில், 'அதிகாரிகளை அவதுாறாக சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்தது. இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர் உயிரொலி கண்ணன் பிறப்பித்த உத்தரவு:பயணியர் அதிகம் கட்டணம் செலுத்தி, உயர் வகுப்புகளில் பயணம் செய்வது, மற்றவர்களால் தொந்தரவின்றி அமைதியாக பயணம் செய்வதற்கு தான்.ஆனால், பெட்டியில் அனுமதி இல்லாதவர் வந்து செல்வதால், சம்பந்தப்பட்ட பயணியர், சங்கடத்திற்கு ஆளாக நேரிடுகிறது. கவனக்குறைவாக செயல்பட்ட, ரயில் டிக்கெட் பரிசோதகர், கண்காணிப்பாளர் மற்றும்தெற்கு ரயில்வே நிர்வாகம், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
தேனி அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற 500 பேருக்கு கண் எரிச்சல் : அதிக வெளிச்ச விளக்கே காரணம் என டாக்டர்கள் விளக்கம்

Added : மே 30, 2018 01:50



தேனி; தேனி அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு அதிக வெளிச்ச மின்விளக்கால் கண்பாதிப்பு ஏற்பட்டது.தேனி அருகே கொடுவிலார்பட்டியில் சவுடாம்பிகை அம்மன் கோயில் திருவிழா நான்கு நாட்களாக நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு நெஞ்சில் கத்தியை வைத்து கீறும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரத்தகாயங்களில் விபூதி வைத்தனர்.அருகில் இருந்தவர்களின் கண்களில் விபூதி துாசி விழுந்துள்ளது. விபூதியில் ரசாயனம் கலந்ததால் கண் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.தேனி கண் மருத்துவமனைகளுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அரவிந்த் கண் மருத்துவமனையில் மட்டும் 42 குழந்தைகள் உட்பட 349 பேர் சிகிச்சைக்காக குவிந்தனர். சிறிது நேரத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.ரசாயனம் இல்லைதிருவிழா நிர்வாக குழு உறுப்பினர் வைரவன் கூறியதாவது: நிர்வாகத்தின் செலவில் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளோம். விபூதியை ஆய்விற்கு அனுப்பினோம். அதில் எந்த ரசாயனமும் இல்லை என்று கூறிவிட்டனர், என்றார்.கண் பாதிக்கப்பட்ட நாகராஜ் கூறியதாவது: நிகழ்ச்சியின் போதே கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. காலையில் எழுந்தபோது கண்களை திறக்க முடியவில்லை, என்றார்.கண் டாக்டர்கள் கூறியதாவது: திருவிழாவில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததே கண்பாதிப்பிற்கு காரணம். கண்களுக்கு சொட்டுமருந்து தரப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனைவருக்கும் குணமாகிவிடும், என்றனர்.
வருமான வரி குறைதீர்ப்பு முகாம்

Added : மே 30, 2018 00:28

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள சந்தேகங்கள் மற்றும் குறைகளை, ஜூன், 1 முதல், 15ம் தேதி வரை, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, வருமான வரி துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருமான வரி கணக்கு தாக்கலில் உள்ள சந்தேகங்கள் மற்றும் குறைகளை, வருமான வரி அலுவலகத்தில், வரி செலுத்துவோர் முறையிட்டு, தீர்வு காணலாம்.வரி செலுத்துவதில், ஏற்கனவே நிலுவையில் உள்ள முறையீடு, அதன் நிலை என்ன என்பது குறித்து, வருமான வரி மதிப்பீட்டு அதிகாரிகளிடம் தெரிந்து கொள்ளலாம்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும், ஜூன், 1 முதல், 15ம் தேதி வரை, காலை முதல் பிற்பகல் வரை, அதிகாரிகள் விளக்கம் அளிப்பர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ரூ.1 லட்சம்

Added : மே 30, 2018 07:26



புதுடில்லி : முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அலுவலக செலவின படியாக, ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதே போல, முன்னாள் துணை ஜனாதிபதிகளுக்கு ரூ.90 ஆயிரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் வங்கிகள் 'ஸ்டிரைக்'; ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்படையும்

Added : மே 30, 2018 06:31



ஊதிய உயர்வு கோரி, இன்றும், நாளையும்(மே 30, 31) வங்கி ஊழியர்கள், நாடுமுழுவதும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுஒப்பந்தம், 2017 அக்டோ பரில் முடிந்தது. 2017 நவ., முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது குறித்து, வங்கி நிர்வாகத்துடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டது.

கடைசியாக, மே, 28ல், டில்லியில் உள்ள தொழிலாளர் நல தலைமை ஆணையருடன், சமரச பேச்சு நடந்தது; இந்த பேச்சு தோல்வில் முடிந்தது. இதையடுத்து, 'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும்' என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதன்படி, இன்றும், நாளையும், 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில், வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழகத்தில், 300 கோடி ரூபாய் உட்பட, நாடு முழுவதும், 2,000 கோடி ரூபாய் வரை, வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.

வாடிக்கையாளர் நலன் கருதி, வங்கியின் அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Cooking ‘dosa’ for the Prime Minister 

Srividya P.V. 

 
KRISHNAGIRI, May 29, 2018 00:00 IST

What’s cooking?:Narendra Modi with Ujjwala Yojana beneficiaries in Hosur in Tamil Nadu.Special Arrangement 


Three women chat with the PM about their switch from firewood to LPG stoves

It’s not every day that you get a request from the Prime Minister to cook dosa for him. But for three lucky women from Shoolagiri taluk in Krishnagiri district of Tamil Nadu, Monday happened to be that day.

At first, Rudramma was quite casual about the call she got from the local gas agent, informing her about a proposed “meeting” with the Prime Minister. “I said I can't come, I have an infant to take care of,” she says. “But they compelled me, told me to arrange for someone to take care of the child.” That was on Friday.

On Monday, Ms. Rudramma became one of the three women beneficiaries from Tamil Nadu, under the Pradhan Mantri Ujjwala Yojana (a government scheme that seeks to replace unclean cooking fuels with LPG in rural India), to interact with Prime Minister Narendra Modi over video conference. By the end of her interaction, her initial indifference had turned into exhilaration.

With the Indian Oil Corporation’s coordinator as the translator, the women responded to the PM’s queries.

“He asked us how we liked the new gas stoves. I said it was helping us cook faster than before. Then he asked us if we cook idli and dosa, and we said yes,” says Rudramma. “He then said that he will come home next time and that we should cook dosa for him. Now I’m waiting for everyone in the village to come back from work in the evening, so that I can tell them all that I spoke to the PM.”

“I’m just very happy,” says Chandra, who also took part in the interaction. “I told the PM, no more burning eyes, no more struggles to light up the firewood, no more embers to deal with.”

Ms. Rudramma, Ms. Chandra and Eashwari, who belong to the Scheduled Caste, Scheduled Tribe and the Most Backward Community, respectively, at Melumalai village in Shoolagiri, were given LPG connections in April.

As new entrants to the scheme, the women had been short-listed by the local gas agent at the request of the IOC. The videoconference was held at the Krishnagiri Collectorate in the presence of Collector C. Kathiravan. Such interactions with beneficiaries were arranged for seven States in the country, and one district each was picked up at random in each of those states to gauge the performance of the scheme.

Student accuses College of demanding 50 lakh for admission, moves HC — 

By Narsi Benwal | May 27, 2018 12:14 am 

 Dr Faaria, resident of Juhu, has moved the vacation bench seeking stay on the admission process to the Post Graduate (PG) Dermatology course. She claims that the college has asked her to pay Rs 50 lakh as donation for her admission to the course in DY Patil Medical College.

Mumbai : The Bombay High Court on Saturday issued notice to the management of DY Patil Medical College and has sought its response to a plea field by a student accusing the institution of denying admission and demanding a hefty amount as ‘donation.’

A vacation bench presided over by Justice Shahrukh Kathawalla and Justice Ajay Gadkari issued the notice after admitting a writ petition filed by Dr. Faaria Asif Ali.

Dr. Faaria, resident of Juhu, Mumbai has moved the bench seeking stay on the admission process to the Post Graduate (PG) Dermatology course. She claims that the college has asked her to pay Rs. 50 lakh as donation for her admission to the said course in DY Patil Medical College.

According to advocate Anukul Seth, his client Faaria was allotted a seat in the course by the Directorate General of Health Services, Ministry of Health and Family Welfare, Government of India.

“The ministry had made a provisional allotment to my client by issuing a letter on May 19. She was given the allotment under the NRI quota since her uncle is an NRI,” Seth told Free Press Journal.

“Soon after receiving the letter from the ministry, we approached the college to confirm our seat by paying the fees. But there we were asked to pay an additional amount of Rs. 50 lakh, which did not include the course fees. We haven’t paid the amount yet since our admission has not been confirmed,” Seth added.

Dr. Faaria has now moved the court seeking a stay on the admission process since the Saturday was the last date for admissions to the course. She has claimed that if the college now refuses to grant her admission then it would cause great harm to her career.

Having heard the contentions, the bench said, “Since the College is not served and therefor not represented before us, we are not able to verify the allegations made by the Petitioner (Faaria) against the management of the College.”

“However, we adjourn the matter till Monday, with a clarification that all steps taken by the College for granting of admissions to students in M.D. (Dermatology) between today and Monday, shall be subject to the Orders which would be passed on the next date,” the judges added.


DVAC files DA case against Coimbatore doctor, wife

TIMES NEWS NETWORK

Coimbatore: 30.05.201`8


The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), Coimbatore, has registered a disproportionate assets case against Dr V Elango, 57, professor of surgery at the Coimbatore Medical College Hospital, and his wife P Mallika, 56, who is working as junior engineer in Chennai.

According to the DVAC, the couple is in possession of pecuniary resources and properties disproportionate to their known source of income. The inspector of police, DVAC, Coimbatore, M Kanagasabapathy, registered a case against the couple on May 25 under sections 13 (2) read with 12 (1) (e) of the Prevention of Corruption Act, 1988. According to DVAC, Mallika was working as junior engineer at the office of the divisional engineer, National Highways, Coimbatore, since January 1, 2008. She hailed from Arani in Thiruvannamalai district and got married to Dr V Elango in 1984. The couple has two sons.

Mallika joined in the government service as an assistant draftsman at the office of divisional engineer, highways, Coimbatore division on November 21,1981. She was promoted to junior drafting officer on January 30, 1997 and later as junior engineer in 2010.

The couple was in possession of pecuniary resources to the tune of ₹44.89 lakh in their name and in the names of their family members as on January 1, 2008.
MGR varsity offers seven new courses

Chennai: toi 30.05.2018

Dr MGR Medical University has introduced seven new courses, in addition to the numerous courses under Allied Health Sciences since 2010.

The newly introduced courses are B.Sc fitness and lifestyle modification, B.Sc clinical nutrition, M.Sc nuclear medicine technology, diploma in hearing, language and speech, certificate course in home health care aide, emergency medicine, cardiac electrophysiology, cosmetology and otology, PG diploma in health care management and PG diploma in health law.

The admission examinations are conducted by the university which also furnishes the candidates with a degree certificate upon the completion of the course. The university charges a minimum fee, ranging between Rs18,000 and Rs 23,000, for all the courses under Allied Health Sciences. More details about Allied Health Sciences and the courses listed under it can be found on the university’s website (tnmgrmu.ac.in). TNN
Story of grit: Ethiraj College opens doors to corporation school topper

Shruti.Suresh@timesgroup.com

Chennai: 30.05.2018


Having overcomethe death of her father to ace the Class XII exams with 1176 marks, a corporation school student realised her dream by landing the first seat of the BCom programme at Ethiraj College on the opening day of the admission process on Tuesday.

On May 17, TOI had reported that Pavitha Preethi, a student of the Corporation Girls Higher Secondary School, Saidapet, emerged among the toppers despite the loss of her father in a road accident three months earlier and a financial crunch. On Tuesday, the chairman of EthirajCollege,VMMuralidharan, admitted her to the first seat for the BCom programme. “I called her up as soon asI readthe news report. She wantedtostudy here andshedeserved this for all her hard work,” said Muralidharan who told Pavitha to continue her brilliant performance. The college received over 3,500 applications for the 70 BCom seats, said a department staff.

Braving the odds, the IAS aspirant worked hard, supported by her sister Nikhitha. “She constantly told me that our father was still here supporting me and that I should make him proud. Today, I feel that he is with meeven now,” said an emotionalPavitha. “I am thankfulto my family and teachers who pushed me to work hard despite the circumstances and, today, it has paid off,” she added.

“I plan to finish my course and then work for a year before I become eligible to write the UPSC exam,” Pavitha told TOI. Officers IAS Academy has offered Pavitha a three-year UPSC training programme free of cost, besides taking responsibility of her semester fees. “The newspaper report helped identify her talent. She is well-deserving and was in need of support for her education when we reached out to her,” said KTS Mugundan, vice president, Officers IAS Academy. 



Pavitha Preethi gets awarded first seat for BCom programme


HC: Children not weightlifters, use NCERT books

TIMES NEWS NETWORK

Chennai: 30.05.2018

Children have fundamental and basic human rights to enjoy their childhood with joy and enthusiasm, without stress, the Madras high court has said while directing the Centre to ensure that private CBSE schools follow only NCERT prescribed syllabus and not to give homework to children up to Class II.

Observing that children aren’t weight-lifters, and school bags aren’t loaded containers, Justice N Kirubakaran said, “Children should not be overburdened with many subjects; they are entitled to minimum sleeping hours as per their age which is a fundamental right as per Article21of the Constitution. Deprivation of required sleep would affect children mentally and physically, causing adverse effects, and they should not be allowed/made to hold pencils till they become five years old.”

Children are also entitled to a conducive learning environment, to study without stress or trauma. Home work given to Class I and Class II students would put pressure on them and affect their sleeping time. Compulsion to read nonprescribed books which are not age appropriate would have adverse effects on young minds. Children should not be made to carry heavy school bags at the risk of their health, the judge added.

The court made the observations on a plea moved by advocate M Purushothaman seeking a direction to CBSE schools to follow only syllabus prescribed by NCERT.

When the plea came up for hearing, Justice Kirubakaran said, “The innocence of children is being robbed by ambitious parents, taskmaster teachers and result-oriented schools by prescribing irrelevant books at a very young age. Children end up rote memorising which does not help the children or the parents. The system only does destruction of younger minds.” The directions have to be implemented from the academic year 2018-19.

Monday, May 28, 2018

ஒரே போனில் மூன்று வாட்ஸ்ஆப்(WhatsApp)- எப்படின்னு தெரியுமா?

வாட்ஸ்ஆப் பொறுத்தவரை இந்தியாவில் பல மல்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக வாட்ஸ்ஆப் பொறுத்தவரை தொழில், பயனம், வங்கி போன்ற பல்வேறு சேவைகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு அல்லது மூன்று வாட்ஸ்ஆப் கூட மிக எளிமையாக பயன்படுத்த முடியும், அதற்கு தகுந்த பல்வேறு ஆப் வசதிகள் ஆன்லைனில் உள்ளது. மேலும் ஸ்மார்ட்போனில் இரண்டு அல்லது மூன்று வாட்ஸ்ஆப் பயன்படுத்தினால் உபயோகப் படுத்த சிறிது கடினமாக இருக்கும். இப்போது ஒரே போனில் மூன்று வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படியென்று பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் வழியாக NoxApp+ -எனும் செயலியை பதிவிறக்கம் செய்தல் வேண்டும்,பின்பு அந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை-2:
அடுத்து இந்த செயலியில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து அப்ளிக்கேஷன்களும் காண்பிக்கப்படும், அதில் உங்கள் விருப்பான செயலியை தேர்வு செய்து clone- செய்ய முடியும். அதன்படி நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை மிக எளிமையாக clone செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறை-3:
NoxApp+ செயலியில் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை தேர்வு செய்தபின்பு create multi app எனும் ஆப்ஷனை கிளிக் செய்தல் வெண்டும்.


வழிமுறை-4:
அடுத்து NoxApp+ பகுதியில் உங்கள் இரண்டாவது வாட்ஸ்ஆப் இடம்பெறும், அவற்றில் உங்களின் புதிய மொபைல் எண் பதிவிட்டு பயன்படுத்த முடியும். பின்பு இந்த NoxApp+ -இருக்கும் இரண்டாவது வாட்ஆப் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனின் முன்பகுதிக்கு எளிமையாக கொண்டுவர முடியும், அதற்கு create shortcut எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-5:
மேலும் NoxApp+ செயலியில் மூன்றாவது வாட்ஸ்ஆப் கூடclone முறையில் பயன்படுத்த முடியும், பின்பு இந்த செயலியில் பேட்டன் லாக் வசதி உள்ளது. மேலும் நோட்டிபிக்கேஷன் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த NoxApp+ செயலி.


அப்டேட்:
வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட க்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் புதிய நிற சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும்

* ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு

 ஜூன் 1ம் தேதி முதல் அரசு பள்ளியில் படிக்கும் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் புதிய நிற சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரே வகையான வகுப்புகளுக்கு ஏற்றவாறு புதிய நிறத்தில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2018-19ம் கல்வியாண்டு முதல் 9ம் மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சாம்பல் நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், இளஞ்சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன்மேல் சாம்பல் நிற கோட்டும் அணிய வேண்டும். 11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், கருநீலநிறக் கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன் மேல் கருநீலநிறக் கோட்டும் அணிய வேண்டும்.

இந்த சீருடைகள் வரும் 1ம் தேதி பள்ளி திறக்கும் நாள் அன்று அனைத்து மாணவ, மாணவிகளும் அணிந்து வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சீருடை மாதிரிகள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சீருடைகள் இரண்டு செட் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். பள்ளி சீருடைகளை பொறுத்தவரை அரசு தெரிவித்தப்படிதான் சீருடை இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து சஸ்பெண்ட் ஆன மாணவர்: சிபிஎஸ்இ தேர்வில் 91 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி

Published : 27 May 2018 13:01 IST
T
திருவனந்தபுரம்





கேரளாவில் மாணவியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான மாணவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91 சதவீத மதிப்பு பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் மத்திய பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவியைப் பாராட்டுவதற்காக பிளஸ் 2 மாணவர் கட்டிப்பிடித்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் கட்டிப்பிடித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மாணவர் மாணவி இருவரும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 
இடைநீக்கத்தினால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாத நிலை மாணவருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவரின் பெற்றோர் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்தனர். மாணவியையும் இடைநீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்.

இதையடுத்து செயிண்ட் தாமஸ் மத்திய பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட மாணவர், மாணவி, பெற்றோரிடையே சமரச முயற்சிகள் நடந்தன. திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. மாணவரையும் மாணவியையும் மீண்டும் சேர்த்துக் கொண்டது அந்த பள்ளி.

எனினும் அந்த மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் பள்ளி நிர்வாகம் சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதி அனுமதி வாங்கியது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர் பொதுத் தேர்வை எழுதினார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த மாணவர் 91.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவர் ஆங்கிலத்தில் 100க்கு, 87 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பொருளாதாரத்தில் 99, வணிகவியலில் 88, கணக்கு பதிவியலில் 92, உளவியலில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுபற்றி அந்த மாணவரின் தந்தை கூறுகையில் ‘‘எனது மகனின் ஒழக்கம் பற்றி பலரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால் அவர் சிறப்பான முறையில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்’’ எனக் கூறினார்.
Diabetes management significant in holy month 

DECCAN CHRONICLE.


Published May 26, 2018, 5:11 am IST


Doctors stress intake of calories should be balanced. 



Maintaining a balanced sugar level during the month of Ramazan with the advice of the experts is significant for diabetes management, say diabetologists.

Chennai: As the holy month of Ramzan commences, people with health complications like diabetes need special attention during this phase of fasting. This is because fasting during Ramzan can be risky or may result in various issues for the person fasting if his or her dietary restrictions disturb the overall equilibrium of the body.

During Ramzan the health hazards include low sugar reaction, high sugar reaction, dehydration and acute metabolic complications such as diabetic ketoacidosis. Maintaining a balanced sugar level during the month of Ramazan with the advice of the experts is significant for diabetes management, say diabetologists.

Diabetics with type 1 and type 2 diabetes on regular multiple doses undergo complications while fasting as they food intake is not as per the requirement of the body.

“Type 1 diabetics need multiple dose of insulin during a day and during Ramzan, it becomes risky for them if the food cycle is not maintained. In case of type 2 diabetics, those who take one or two insulin shots are recommended to take one extra dose when they break the fast in the evening. Diabetolo-gists may recommend slow-action insulin and long-action tablets that do not produce low sugars to avoid the risk of hypoglycemia,” says senior diabetologist Dr V. Mohan.

Dr Mohan emphasised that an individualised consultation is significant for diabetics those who follow fasting. A blood sugar level test along with adjustment of drug dosage can prevent the risk for diabetics during Ramzan.

The doctors stress that intake of calories between morning and evening meals should be balanced with carbohydrates, proteins and fat after fasting with food include plenty of fruits vegetables and salads and should avoid sugary desserts.

Dr K. P. Dinakaran, consultant diabetologist, Lifeline Institute Of Minimal Access, said, “It is very important to maintain diabetes management during fasting. During fasting and post-Ramazan follow-up meeting with healthcare professional, should be scheduled to discuss medication and regimen readjustments and assess how the patients can handle the fasting.”

Diabetes should keep their body hydrated between sunrise and sunset by drinking water or other non-sweetened. Taking proteins in the morning will help them to maintain the sugar level and should avoid the dehydrating medicine in the morning, he added.
UGC asks varsities to launch anti-spitting campaigns 

DECCAN CHRONICLE. | LAKSHMI L LUND


Published May 26, 2018, 5:46 am IST


Mr Rajnish Jain, secretary of the UGC stated that the government of India has initiated the campaign with the aim of increasing awareness. 



University Grants Commission

Coimbatore: The University Grants Commission (UGC) has decided to involve students in spreading awareness among the public against spitting in public places. Calling it as a social problem, in a letter to the vice chancellors of various universities across the nation, Mr Rajnish Jain, secretary of the UGC stated that the government of India has initiated the campaign with the aim of increasing awareness about the prevalent problem of spitting in public. The letter pointed that spitting in public is a sickening sight and the practice is responsible for spreading of several communicable diseases including ailments like tuberculosis (TB).

Stating it was a common sight to witness people spitting in public spaces, he urged the youth to play an active role in spreading awareness in order to bring to an end to the social problem. Mr Jain suggested that activities like rallies and campaigns in this direction can be initiated by students of universities and affiliated colleges. National Service Scheme (NSS) wing of the educational institutions can take up the initiative. In his letter, Mr Jain recommended that colleges and universities put up posters on themes of ill-effects of tobacco consumption among other subjects inside their respective campus.

When DC contacted the heads and management of a few higher educational institutions in and around the textile city, a majority of them stated that they are awaiting the new academic year to begin after which a plan of action will be designed and implemented on these lines.
Chennai to receive light showers in next 48 hours 

DECCAN CHRONICLE.


Published May 27, 2018, 6:19 am IST


As per the heavy rainfall warning issued by RMC on Saturday, Chennai is likely to expect rains in northern parts of the city till Monday. 



The air circulation off South Tamil Nadu coast is to bring scattered rains to interior parts of the state.

Chennai: Though interior parts of Tamil Nadu have received good rainfall during last few days, Chennai remained dry. However, regional meteorological centre forecasts isolated light rainfall over Chennai in next 48 hours due to a cyclonic circulation over south Arabian Sea. Meanwhile, rains in interior districts of Tamil Nadu are to reduce.

As per the heavy rainfall warning issued by RMC on Saturday, Chennai is likely to expect rains in northern parts of the city till Monday.

“Heavy rains are unlikely in the first week of June, but light spells of rain are expected as the monsoon hits Tamil Nadu. The temperature is expected to decline subsequently. With party cloudy sky condition, maximum and minimum temperatures are likely to be around 36 degree Celsius and 28 degree Celsius in Chennai,” said S. Balachandran, director, area cyclone warning centre.

The air circulation off South Tamil Nadu coast is to bring scattered rains to interior parts of the state. However, pre-monsoon rains are expected to be concentrated over Southeast Arabian Sea, bringing more rains to parts of Kerala, thereby reducing the amount of rainfall over interior parts of Tamil Nadu.

“IMD is expecting onset of mosnoon on May 29 but early monsoon onset with heavy rains is expected in southern districts in next 24 hours,” said weather blogger Pradeep John.
Few takers for PG medical seats under management quota in Tamil Nadu

Over one-third of the unfilled PG medical seats under management quota in the deemed medical universities are in Tamil Nadu.



Published: 28th May 2018 03:53 AM | Last Updated: 28th May 2018 03:53 AM | A+A A-

By Express News Service

CHENNAI: Over one-third of the unfilled PG medical seats under management quota in the deemed medical universities are in Tamil Nadu. The Medical Council Committee, functioning under the Union Health Ministry’s Directorate General of Health Services, has surrendered over 150 PG medical degree and diploma seats to various private medical universities in Tamil Nadu. The committee usually conducts the single-window admission counselling for all management seats of PG medical courses in deemed universities across the country.

Even after a mop-up round of counselling, over 450 seats across the country remained unfilled and over 150 were in Tamil Nadu. The private universities are now free to admit students on their own, before the deadline of May 31.

“Non-clinical PG seats were not filled even after the mop-up round (of the counselling). Because there is no scope in these courses,” a Directorate General of Health Services official told Express.“Also across India, over 200 non-resident Indian (NRI) seats were not filled. This is because of the huge fee that the private medical colleges charge. Per annum, Rs 40 lakh fee is collected for each NRI seat and many cannot afford it. These colleges should reduce the fee,” the official added. The official said that the percentile was further reduced, but still, there were no takers for many of the courses.
நடுவழியில் நின்ற சிறப்பு ரயில்; சிக்கி தவித்த திருப்பூர் பயணியர்

Added : மே 28, 2018 02:55


திருப்பூர் : ஷீரடி சிறப்பு ரயிலில் புறப்பட்ட திருப்பூர் பயணியர், நடுவழியில் உணவின்றி தவித்தனர்.

திருப்பூரில் இருந்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, திருப்பூரை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம், ஐ.ஆர்.டி.சி., ஒப்புதலுடன், கடந்த, 25ம் தேதி, 940 பயணிகள், 14 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. கடந்த, 26ம் தேதி மதியம், தரிசனம் முடித்து, மீண்டும், 2௮ல் திருப்பூர் திரும்பும் வகையில், பயண திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், நேற்று மதியம் வரை, சீரடி சென்றடையாமல், ரயிலில் பயணியர் காத்திருக்கின்றனர். குறைவான பணம் எடுத்துச் சென்றவர்கள், குழந்தைகளுடன், உணவின்றி தவிப்பதாக தெரிவித்தனர்.

சேலம் கோட்ட, ஐ.ஆர்.டி.சி., மூத்த மேலாளர், விஜ்வனிடம் கேட்ட போது, ''ஷீரடி வழித்தடத்தில் நெரிசல் அதிகம் என்பதால், இதுபோன்று சிறப்பு ரயில் இயக்க அனுமதியில்லை.''இருப்பினும், டிராவல்ஸ் ஏஜென்சியினர், 'புக்கிங்' செய்து விட்டதால், வேறு வழியின்றி ரயில் இயக்க அனுமதியளித்தோம். செல்லும் வழியில் குடிநீர் மற்றும் உணவுக்காக, ரயிலை, 50 நிமிடம் வரை நிறுத்தியுள்ளனர். ''இதனால், அடுத்தடுத்த ஸ்டேஷனுக்கு ரயில் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலால், அந்த வழித்தடத்தில் இயங்கிய, 14 ரயில் போக்குவரத்து தாமதமானது,'' என்றார்.
வங்கி கிளைகள் திறப்பு பணிச்சுமை அதிகரிப்பு

Added : மே 28, 2018 02:31 | 

 'ஐந்து ஆண்டுகளில், வங்கி கிளைகள் திறப்பு அதிகமானதால், வங்கி ஊழியர்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது' என, சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலர், வெங்கடாச்சலம் கூறியதாவது: தேசிய வங்கிகளில், நாடு முழுவதும், 70 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், 68 ஆயிரம் கிளைகள் இருந்தன. தற்போது, 90 ஆயிரம் கிளைகள் உள்ளன. புதிதாக, 22 ஆயிரம் கிளைகள், ஐந்து ஆண்டுகளில் துவக்கப்பட்டுள்ளன. புதிதாக துவங்கப்பட்ட வங்கி கிளைகளுக்கேற்ப, ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. புதிய கிளைகளில், ஒரு மேலாளர், காசாளர் மற்றும் கணக்காளர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். பதவி நிலை இல்லாத அதிகாரிகளை, வங்கிகளின் கிளை மேலாளராக நியமிக்கும் சூழல் தற்போது நிலவுகிறது.

இதன் காரணமாக, ஊழியர்கள் மீது, அதிக சுமை ஏற்றப்படுகிறது. அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாகவும், வாராக் கடன் மீது சரியான கவனம் செலுத்த தவறியதாலும், ஐந்து ஆண்டுகளில், வாராக் கடனின் அளவு, ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வாராக் கடன்களை ஈடுகட்ட, வங்கி நிகர லாபத்தில், 70 சதவீதம் தொகை ஒதுக்கப்படுகிறது. இதனால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு சலுகைகள் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
பவுர்ணமி கிரிவலத்துக்கு உகந்த நேரம்

Added : மே 28, 2018 02:17

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வது வழக்கம். வைகாசி பவுர்ணமி கிரிவலம் செல்ல, பவுர்ணமி திதி இன்று இரவு, 7:34 மணிக்கு துவங்கி, நாளை இரவு, 8:38 வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
'ஆரூரா... தியாகேசா' கோஷம் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்

Added : மே 28, 2018 02:08





திருவாரூர் : திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், நேற்று, 'ஆரூரா, தியாகேசா' கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.

திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது.'இக்கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவு பெருமை பெற்றது' என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது, ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப் பெரியது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம், 96 அடி; எடை, 350 டன். முன்புறம், தேரை இழுப்பது போல், நான்கு குதிரை சிலைகள் உள்ளன.

ஒவ்வொன்றும், 26 அடி நீளம், 11 அடி உயரம் உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன.தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம். திருச்சி பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமயமாக்கி, 'ஹைட்ராலிக் பிரேக்' அமைத்துள்ளது.

சிறப்பு பூஜை :

கடந்த, 20ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, தேருக்கு தியாகராஜர் எழுந்தருளினார். அன்று முதல், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல், விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது.காலை, 6:30 மணிக்கு, கலெக்டர் நிர்மல்ராஜ், உணவு துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் வடம் பிடித்து, ஆழித் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'ஆரூரா... தியாகேசா...' கோஷங்கள் முழங்க, தேரை இழுத்தனர்.

துாறியது மழை :

தேரின் பின் சக்கரங்கள், புல்டோசர்களால் தள்ளப்பட்டன. ஆடி அசைந்து, நிலையில் இருந்து புறப்பட்ட ஆழித்தேர், கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன.ஆழித்தேர், மேல வீதிக்கு திரும்பும் போது, மழை துாறல் இருந்தது. இருப்பினும், தொடர்ந்து தேர் இழுக்கப்பட்டு, வடக்கு வீதி வழியாக, மாலை நிலையை அடைந்தது.
அரபிக்கடலில் புயல் சின்னம்; 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்

Added : மே 28, 2018 01:28



சென்னை : அரபிக்கடலில் உருவான இரண்டாவது புயல், நேற்று கரையை கடந்த நிலையில், மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால், மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில், முன் எப்போதும் இல்லாத வகையில், புயல்கள் உருவாகின்றன. இந்த மாத துவக்கத்தில், கன்னியாகுமரிக்கு மேற்கே, அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானது. 'சாகர்' என, பெயரிடப்பட்ட இந்த புயல், மேற்கு திசையில் சுழன்று, ஏடன் வளைகுடா வழியாக சென்று, ஏமன் நாட்டில் கரையை கடந்தது. இந்தப் புயல், கரையை கடந்த நாளில், குமரிக்கு மேற்கே, மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதுவும் வலுப்பெற்று, புயலாக மாறியது.

காற்றழுத்த தாழ்வு :

'மேகுனு' என பெயரிடப்பட்ட, இந்த புயல், சாகர் புயல் சென்ற அதே பாதையில் பயணித்து, நேற்று ஓமன் நாட்டில், கரையை கடந்தது. இந்நிலையில், மூன்றாவதாக, அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. கேரளா, கர்நாடகா கடற்பகுதிக்கு அருகே உருவாகியுள்ள, இந்த காற்றழுத்த தாழ்வு, மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், மணிக்கு, 100 கி.மீ., வேகத்திற்கு காற்று வீசும் என்றும், வானிலை மையம் கணித்துள்ளது. அதனால், வரும், 30ம் தேதி வரை, அரபிக்கடலில், மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வங்கக்கடலின் கிழக்கு மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளில், எது புயலாக மாறும்; எது வலுவிழக்கும் என்பது, இரண்டு நாட்களில் தெரியவரும்.

மழை நிலவரம் :நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம், பெரியாறில், 7 செ.மீ., மழை பதிவானது. வத்திராயிருப்பு, பவானி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பேச்சிப்பாறை மற்றும் அரியலுாரில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலூர் ஆகிய, வடக்கு உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரே மேடையில் 52 தம்பதியரின் 70ம் திருமணம்

Added : மே 28, 2018 01:20




காரைக்குடி:காரைக்குடியில், 52 தம்பதியருக்கு, 70ம் திருமணம், விமரிசையாக நடந்தது.

மனிதன் செய்ய வேண்டியதாக, 41 வகை சடங்குகள், இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இதில், பல சடங்குகள், குழந்தை பருவத்திலும், வாலிப பருவத்திலும், தந்தையால் செய்யப்பட்டு விடுகின்றன.

அதன் பின், தீயவற்றிலிருந்து தன்னை காத்துக் கொள்ள, 60, 70, 80, 90, 100 வயதில் சாந்தி சடங்குகளை செய்து கொள்கின்றனர். செட்டிநாட்டு நகரத்தார், இந்த சாந்தி நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில், நேற்று, 52 நகரத்தார் தம்பதியருக்கு, 70வது பீமரதசாந்தி விழா விமரிசையாக நடந்தது. செட்டிநாட்டின், 76 ஊர்களை சேர்ந்த நகரத்தார், இதில் பங்கேற்றனர்.
காலை, 7:00 மணி முதல் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம்   நடந்தது. பின், 102 கும்பங்கள், யாகசாலையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து, தம்பதியருக்கு கும்ப கலசங்கள் வழங்கப்பட்டு, அவர்களது வாரிசுதாரர்கள் அபிஷேகம் செய்தனர். காலை, 11:30 மணிக்கு, 52 ஜோடிகளும், திருப்பூட்டி கொண்டனர். தம்பதியரின் பிள்ளைகள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

NEWS TODAY 27.03.2024