Sunday, May 27, 2018

ஆரூரா... தியாகேசா கோஷத்துடன் தொடங்கிய திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

க.சதீஷ்குமார்


திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. ஆரூரா... தியாகேசா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.




உலகப் புகழ்பெற்றதும் சைவ ஸ்தலங்களின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகப் பிரசித்திப் பெற்றதும் பிரமாண்டமானதும் தமிழகத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோவில்களில் உள்ள ஆழித்தேர்களில் முதன்மையானது திருவாரூர்தியாகராஜர் கோயில் தேர். மன்னார்குடி மதிலழகு; திருவாரூர் தேரழகு என்பது பழமொழி. 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடைகொண்டது திருவாரூர் ஆழித்தேர். ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்குப் பிறகு ஆழித்தேரோட்டம் நடப்பது வழக்கம்.
 
இதையடுத்து இன்று காலை 5 மணிக்கு திருவாரூர் சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடரந்து காலை 6.30 மணிக்கு சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள தேரடியிலிருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா, தியாகேசா என்று விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்தனர். ஆழித்தேர் அலங்கார தொம்பைத்துணி அசைந்தாட வந்ததைக் கண்டு, பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் செய்தனர். தேர் வருகையில் அதிர்வேட்டுகளும், ஆரூரா தியாகேசா முழக்கங்களும் ஒலிக்க நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் வலம் வந்து கொண்டுடிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024