Thursday, May 31, 2018

கணினி இயக்க தெரியாத அமைச்சர்களுக்கு 'கல்தா' : நேபாள பிரதமர் அதிரடி

Added : மே 31, 2018 12:20 |




காத்மண்டு : 6 மாத காலத்திற்குள் லேப்டாப் இயக்க கற்றுக் கொள்ளாத அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என நேபாள பிரதமர் சர்மா ஒலி எச்சரித்துள்ளார்.

இரண்டாவது முறையாக நேபாள பிரதமராக பதவியேற்றுள்ள அவர், அலுவலகத்தை முற்றிலும் கணினிமயமாக்க முடிவு செய்துள்ளார். தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய சர்மா ஒலி, அலுவலகப் பணிகளை முற்றிலும் கணினிமயமாக்குவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களுடன் பேசி முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும், 6 மாத காலத்திற்குள் லேப்டாப்களை இயக்க தெரியவில்லை என்றால் , எந்த அமைச்சராக இருந்தாலும் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 17,18.4.2025