Sunday, May 27, 2018

சி.பி.எஸ்.இ., தேர்வில் மாணவர்கள் சாதனை

Added : மே 27, 2018 00:21

காரைக்குடி:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. அனைத்து மாணவர்களும் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றனர்.வணிகவியல் பிரிவை சேர்ந்த ஜவகர் ஸ்ரீராம் 500-க்கு 469 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அறிவியல் பிரிவில் ராகவ் 452 மதிப்பெண்ணும், ராஜூ விக்னேஷ் 437 மதிப்பெண் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடமும் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் குமரேசன், முதல்வர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.* காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. ஸ்ரீபிரகாதம்பாள் 475, சரவணன் 473, பத்ரிநாத் 466 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர். 450-க்கு மேல் 4 மாணவர்களும், 400-க்கு மேல் 6 மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சத்தியன், முதல்வர் சிவக்குமார், முதன்மை நிர்வாக அதிகாரி ஷீலா இம்மாகுலேட், துணை முதல்வர்கள் வெங்கடரமணன், ரீட்டா ஜார்ஜ், கல்வி ஆலோசகர் குழந்தைராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.* காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி 94.3 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அப்பள்ளியை சேர்ந்த எஸ்.காயத்திரி 449 மதிப்பெண்ணும், எம்.சகாஹ்மகாராஜன் 441, கார்த்திக் ஸ்ரீராம் 427 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர்.இவர்களை சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, முதல்வர் (பொ) நேரு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.* சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் 31 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சசிப்பிரியா, மாணவர் வீர அருண் ராஜ் ஆகியோர் 500 க்கு 468 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவர் கார்த்திக் 461 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி சிரஞ்சினி 435 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.இத்தகவலை பள்ளி முதல்வர் முத்தையா தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024