Wednesday, May 30, 2018

ரயில்வே நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Added : மே 30, 2018 01:01

சென்னை: உரிய சேவை வழங்காத, ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, அமைந்தகரை, அய்யாவு காலனியை சேர்ந்த, சேரன், 56. இவர், சென்னை வடக்கு, நுகர்வோர் நீதிமன்றத்தில், அளித்த மனு:நானும், என் மனைவியும், சென்னையில் இருந்து, கர்நாடகா மாநிலம், மங்களூருக்கு, வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், 2011ம் ஆண்டு, முதல் வகுப்பு, 'கூபே' பெட்டியில் பயணம் செய்தோம்.இந்த பெட்டியில், டிக்கெட் இல்லாத பயணி ஒருவர் வந்து அமர்ந்ததால், பிரச்னை ஏற்பட்டது. ரயில் டிக்கெட் பரிசோதகரும், கண்காணிப்பாளரும் கண்டுகொள்ளவில்லை. மன உளைச்சலுக்கு ஆளானோம். 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு விசாரணையில், 'அதிகாரிகளை அவதுாறாக சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்தது. இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர் உயிரொலி கண்ணன் பிறப்பித்த உத்தரவு:பயணியர் அதிகம் கட்டணம் செலுத்தி, உயர் வகுப்புகளில் பயணம் செய்வது, மற்றவர்களால் தொந்தரவின்றி அமைதியாக பயணம் செய்வதற்கு தான்.ஆனால், பெட்டியில் அனுமதி இல்லாதவர் வந்து செல்வதால், சம்பந்தப்பட்ட பயணியர், சங்கடத்திற்கு ஆளாக நேரிடுகிறது. கவனக்குறைவாக செயல்பட்ட, ரயில் டிக்கெட் பரிசோதகர், கண்காணிப்பாளர் மற்றும்தெற்கு ரயில்வே நிர்வாகம், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024