Sunday, May 27, 2018

`10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு!' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி 

மலையரசு  26.05.2018

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கண்டித்து சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.




அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ராஃபிக் ராமசாமி, ``தூத்துக்குடியில் சட்ட விரோதமாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி போன்றோர் நரேந்திர மோடியின் கைக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட எந்த அமைச்சருக்கும் தூத்துக்குடி பக்கம் தலைகாட்ட தைரியமில்லை. இவர்களெல்லாம் மக்களைக் காப்பாற்றுவதாக பொய் கூறிவருகின்றனர். இதனைக் கண்டித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். ஒருவாரகாலத்துக்குள் இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். 10 பேரைச் சுட்டுக்கொன்றாலே ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனச் சட்டம் இருக்கிறது. அதனை அமல்படுத்த வேண்டும் என திங்கள்கிழமை வழக்கு போடவுள்ளேன்.

 சிபிஐ விசாரணை தேவையில்லை. வழக்கு நிச்சயம் புதன்கிழமை விசாரணைக்கு வரும். விசாரணை ஆணையம் என்பதெல்லாம் வேஸ்ட். நீதிபதிகளைக் குறை சொல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே, ஆறுமுகசாமி ஆணையம், ராஜேந்திரன் ஆணையம் என 4 ஆணையங்கள் பல்வேறு விஷயங்களை விசாரித்து வருகிறது. விசாரணை ஆணையம் அமைத்தும் ஜல்லிக்கட்டு பிரச்னைக்கே இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. ஆட்சியாளர்களுடன் கூட்டு வைத்து அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஆளுபவர்களுக்கு அடியாமையாக செயல்பட்டு தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்த பயப்படுகின்றனர். நிச்சயமாக நல்ல ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர இளைஞர்களுடன் சேர்ந்து நான் போராடுவேன்" என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...