Tuesday, February 28, 2017

வாட்ஸ் அப்பில் எப்படி இருக்கிறது புதிய 'ஸ்டேட்டஸ்' வசதி?

க.சே. ரமணி பிரபா தேவி


உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.

இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி இந்த வசதியைப் பெறுவது?
இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.

எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால் உங்களின் நண்பர்களின் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அதை அனுப்பலாம்.
உங்கள் ஸ்டேட்டஸை உங்களது வட்டாரத்தில் யார் யார் பார்த்தார்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல், யார் யாருக்கு உங்கள் ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு வசதியும் உங்களுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
உலகம் முழுக்க 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமாகப் பரிமளித்திருக்கிறது வாட்ஸ் அப். 2014-ல் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது. இதனால் ஃபேஸ்புக்கைப் போலவே வாட்ஸ் அப்பிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறை மற்றும் வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமையே இல்லையா?



"நாளும் கிழமையும்
நலிந்தோருக்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கு இல்லை"

- கந்தர்வன்.

வெள்ளிக்கிழமை விடிந்ததுமே 'வீக் எண்ட்' கொண்டாட்ட மனநிலையும் பிறந்துவிடும். சனி, ஞாயிறு கிழமைகளின் விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்கிற யோசனைகள் உதிக்க தொடங்கி விடும். அதனால் வெள்ளிக்கிழமை சீக்கிரமாக செல்வதுபோல இருக்கும். ஞாயிறு மட்டும் விடுமுறை இருப்பவர்களுக்கு இவற்றை அப்படியே சனிக்கிழமைக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

வாரம் முழுவதும் உழைப்பவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது இயல்புதான். அது தேவையானதுதான். ஏனெனில், நீண்ட ஓட்டத்தில் சிறிது ரிலாக்ஸ் செய்தால், உற்சாகத்தோடு ஓட்டத்தைத் தொடர முடியும். ஆனால், இந்தக் கொண்டாட்டம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறதா?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெண்களின் வழக்கமான வேலைகளின் பட்டியல் நீண்டு விடும். விடுமுறை நாள்தானே என்று ஆண்கள் தாமதமாக தூக்கம் கலைப்பார்கள். ஆனால் அவர்கள் எழுந்ததுமே பசிக்கும். அதற்கு தயாராக காபி, டிபன் செய்ய வேண்டியது அந்த வீட்டின் பெண்கள்தான். அதனால் அவர்களால் விடுமுறையன்றும் அதிக நேரம் தூங்க முடியாது. ஆண்கள் டிபன் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்ப்பது, வெளியே செல்வது என்று 'பிஸி (!) ஆகிவிடுவார்கள். பெண்களுக்கு அடுத்த வேலை காத்திருக்கும்.

ஒரு வாரம் சேர்த்து வைத்த அழுக்குத் துணிகள் குவியலாக சேர்ந்திருக்கும். அதைப் பார்க்கும்போதே மலைப்பு வந்துவிடும். அவற்றை ஊற வைத்து, துவைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அவற்றை உலர வைக்க மொட்டை மாடியில் தூக்கிச் செல்வது இன்னொரு போராட்டம். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கும்போதே மதிய சமையலுக்காக இறைச்சி வங்கப்பட்டு தயராக இருக்கும்.

மதிய உணவு மீன் என்றால், அதை சுத்தம் செய்து சமைக்க இன்னும் நேரம் பிடிக்கும். இதற்கு இடையில் பிள்ளைகளைக் குளிக்க வைப்பது, படிக்கச் சொல்வதும் நடந்துகொண்டிருக்கும். ஒரு வழியாக மதிய உணவு முடிந்து 'அப்பாடா' என பெருமூச்சு விடும் பெண்களுக்கு சமையலறையில் குவிந்திருக்கும் பாத்திரங்கள் வெல்கம் சொல்லும். 'அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம், கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றால், பூனைகள் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து விடும். பாத்திரங்களைத் துலக்கி முடித்து, மொட்டை மாடியில் உலரும் துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தால், சூரியன் 'கிளம்பட்டுமா?' என்றுக் கேட்கும். இதற்குள் குழந்தைகள் விளையாடி, சில செல்ல சண்டைகள் போட்டு வர, அதற்கு பஞ்சாயத்துகளையும் பார்க்க வேண்டும். மறுபடியும் மாலை நேர காபி, இரவு டிபன் தயாரித்தல்... என அந்த நாள் முடியும். ஞாயிற்றுக்கிழமையை விட வார நாட்கள் பரவாயில்லையோ எனத் தோன்றிவிடும் பெண்களுக்கு.

அப்படியெனில், பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமை என்பதே கிடையாதா... அல்லது அது வழக்கமான இன்னொரு நாள்தானா?

உண்மையை ஒப்புக்கொள்வதெனில், பெண்கள் ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கு வேலைகள் குவிந்துவிடுகின்றன. அதனால் விடுமுறைத் தினத்தை வரவேற்கும் மனநிலையில் இருப்பதில்லை. இந்தச் சூழல் மாற வேண்டும் அல்லவா?

நிச்சயம் மாறவேண்டும் என்பவர்கள். வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் மன நிலையிலிருந்து வெளியேற வேண்டும். தொடக்கத்தில் தயக்கம் இருக்கத்தான் செய்யும். இந்தத் தயக்கம் ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் மனதில் ஏற்றப்பட்ட ஒன்று. அதை ஓரிரு நாட்களில் இறக்கி வைத்துவிட முடியாது. ஆனாலும் இப்போது தொடங்க விட்டால், அடுத்த தலைமுறைக்கும் இந்த வேலைப் பாகுபாடு பரவிவிடும். வீட்டு வேலைகளில் எல்லோரும் பங்கெடுக்கும்போது, வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு, எல்லோருக்குமான ஓய்வு நேரம் கிடைக்கும். அப்படி அமையும் பட்சத்தில் திங்கள் கிழமையை எதிர்கொள்வதை பெண்களால் திட்டமிட முடியும்.

இனி ஞாயிற்றுக்கிழமை ஓய்வும் கொண்டாட்டமும் பெண்களுக்கும் இருக்கட்டும்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் இயங்கும் தொடக்கப்பள்ளி: ஆசிரியர்களின் சம்பளத்தில் வாடகை

க. ரமேஷ்

ஸ்ரீமுஷ்ணம் அருகே வினாயகபுரத்தில் பள்ளியாக இயங்கி வரும் ஓட்டுவீடு. அடுத்தபடம்: தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் வாடகைக்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை ஊராட்சிக்கு உட்பட்டது வினாயகபுரம் கிராமம். போக்குவரத்து அதிகம் இல்லாத இக்கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும்.
இக்கிராமத்தில் 1978-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டது. ஏழாண்டுகளுக்கு பிறகு 1985-ல் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். ஆனால் தற்போது 11 மாணவர்கள் மட்டும் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளிக் கட்டிடம் வலுவிழந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அரசு உத்தரவின்படி பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி பயின்றனர். ஆனாலும் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அப்பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் என்பவரது முயற்சியால் அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு அறையை பள்ளியாக மாற்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறைக்கான வாடகையை பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களது சம்பளத்திலிருந்து கொடுத்து வருகின்றனர்.
இந்த வீட்டின் மேற்கூரை ஓடுகளால் ஆனதால் வெயில் காலங்களில் மாணவர்கள் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு கூடம் அதே வீட்டின் பின்புறம் செயல்பட்டு வருகிறது. மேலும், போதிய இடவசதி இல்லாததால் பெஞ்ச், ஆவணங்கள் வைக்கும் பீரோ ஆகியவை வைத்து பயன்படுத்த முடியவில்லை. மாணவர்களும் தரையில் அமர்ந்து தான் படிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், “எங்கள் ஊரில் உள்ள ஏழை எளிய மக்கள், தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத நிலையில் உள்ளவர்கள். அரசு கிராமப்புற மாணவர்கள் படித்து முன்னேறும் வகையில் பல்வேறு நடவடிக்கையை எடுத்தாலும், எங்கள் ஊர் போல போக்குவரத்து இல்லாத உட்பகுதியில் உள்ள பள்ளிகளின் நிலை இது தான். எனவே எங்களை போன்ற ஏழைகளின் பிள்ளைகள் படிக்க உடனடியாக பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தர வேண்டும்" என்றார்.

மலைக்க வைத்த நகைகள்.. அசரவைத்த சொகுசுப் பேருந்து! அந்த நாள் ஞாபகம்!


2000 பிப்ரவரி முதல் வாரத்தில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திலிருந்து ஐந்து பெரிய சூட்கேஸ்கள், அப்போது சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த முதலாவது சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ஜெயலலிதா, சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குச் சொந்தமான தங்க நகைகள், வைர நகைகள் அந்த ஐந்து சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருந்தன.

போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதா வீட்டிலும், சுதாகரனின் வீட்டிலும் கைப்பற்றப்பட்ட அந்த நகைகளை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருமாறு நீதிபதி எஸ்.சம்பந்தம் ஆணையிட்டிருந்தார். நகைகளை மதிப்பிட்டு, வழக்கின் சாட்சியங்களாக அவற்றை வைத்திருக்கலாம் என்று அவை கொண்டுவரப்பட்டிருந்தன. ஒவ்வொரு சூட்கேஸிலிருந்தும் எடுக்கப்பட்ட ஆபரணங்களின் அழகைப் பார்த்து, நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், போலீஸ்காரர்கள் என்று அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சுதாகரன் திருமணத்தின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே மாதிரியான சேலைகளில், ஒரே மாதிரியான நகைகள் அணிந்திருக்கும் புகைப்படம் மிகப் பிரபலமானது. அப்போது அவர்கள் அணிந்திருந்த ஒட்டியாணங்களில் ஒன்று நீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டபோது அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

இன்னொரு ஒட்டியாணம் சோதனைகளில் கிடைக்கவே இல்லை என்று வழக்கு விசாரணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒட்டியாணத்தின் எடை 1,044 கிராம். 2,389 வைரக் கற்கள், 18 மரகதக் கற்கள், 9 மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணம் அது. 487.4 கிராம் எடை கொண்ட காசுமாலையும் எல்லோர் கண்களையும் விரிய வைத்தது. ஜெயலலிதா வாங்கியிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு.

கேரவன் வேன்களெல்லாம் வராத காலத்திலேயே பல்வேறு சிறப்பு வசதிகள் அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்தன. ஷவருடன் கூடிய ஒரு குளியலறை, தொலைபேசி, மேஜை, நாற்காலிகள் கொண்ட ஒரு ‘மினி கான்ஃபரன்ஸ் ஹால்’, தொலைக்காட்சி என்று புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்த சிறப்பு வசதிகள் அனைவரையும் வாய் பிளக்கச் செய்தன. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அந்தப் பேருந்தை வடிவமைத்ததுடன், ஜெயலலிதாவுக்கு அதை விநியோகமும் செய்திருந்தது. சீக்கியரான அதன் தலைவர், ஜெயலலிதாவுக்கான அந்தப் பேருந்தை போயஸ் கார்டனுக்கு தானே தனிப்பட்ட முறையில் சேர்ப்பித்ததாகவும் சொன்னார்.

“அந்தப் பேருந்தை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தீர்களா?” என்று வழக்கறிஞர் கேட்டபோது, “இல்லை. வேறொரு மேடம்தான் (சசிகலா!) அங்கு இருந்தார்” என்றார். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த இசையமைப்பாளர் கங்கை அமரன், பையனூரில் உள்ள தனது நிலத்தை சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி விற்க வைத்தது பற்றி விவரித்தபோது உடைந்து அழுதார்!

நகைகளுக்குக் காவலாக வந்திருந்த போலீஸார், நீதிமன்றத்திலேயே முழுதாக மூன்று நாட்களுக்குத் தங்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், மூன்று நாட்கள் மதிப்பிடும் அளவுக்கு நகைகளைக் குவித்திருந்தார் ஜெயலலிதா. அந்த ஐந்து சூட்கேஸ்களும் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளன.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

நீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

சி.கண்ணன்

நீட் தேர்வு அடிப்படையில் கால் நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டின் 15 சதவீதம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி களில் உள்ள கால்நடை மருத் துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக் கான (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் (விசிஐ - VCI), அகில இந்திய கால் நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPVT) மூலம் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகிறது. மீத முள்ள, மாநில அரசுகளுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

15 சதவீதம் இடங்கள்
இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங் களுக்கு, இந்த ஆண்டு அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடக் காது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET) மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வரும் மே மாதம் 7-ம் தேதி நடத்துகிறது. அந்த நீட் தேர்வில் தகுதிப் பெறும் மாணவர்களைக் கொண்டு 15 சதவீதம் கால்நடை மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

மாணவர்கள் அதிர்ச்சி
இதன்மூலம் கால்நடை மருத் துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 கல்லூரிகளில் 320 இடங்களில் மாநில அரசுக்கு 272 இடங்கள் உள்ளன. இவற்றில் 48 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகிறது. இந்த 48 இடங்களும், இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதனால் மாண வர்களும், அவர்களின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்கட்டம்
நாடுமுழுவதும் அரசு மருத்து வம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படும் 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPMT) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மீதமுள்ள மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. கடந்த ஆண்டு 15 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் மற்றும் மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்ற நடைமுறையை பின்பற்றி கால்நடை மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மீதமுள்ள 85 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடையவை

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்?- அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு

கி.கணேஷ்

தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படு கிறது. இதில், அரசு ஊழியர்களுக் கான ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும் என தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.

அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த வாரம் துறைகள் வாரியாக முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. அவற்றை தொகுத்து முழுமையான பட்ஜெட் தயாரிக்கப்படும். இப்பணி கள் சில தினங்களில் முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் குறித்து முதல்வர் முடிவு செய் வார். வழக்கமாக மார்ச் இரண்டாம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் 3-ம் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது’’ என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபித்து கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துள்ளார். 500 மதுக்கடைகள் மூடல், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம், மகப்பேறு உதவித் தொகை உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், பல்வேறு திட்டங்களுக்கான தொடர் நிதியும் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும் தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த அரசு மீது மக்களி டையே அதிருப்தியும் எதிர்ப்பும் உள்ளது. இதை மாற்றுவதற்காக பொதுமக்களை குறிப்பாக பெண் களை கவரும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஓய்வு வயது உயர்வு

இந்த பட்ஜெட்டில் அரசு ஊழி யர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற் போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.

ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசு ஓய்வுபெறும் வயதை கடந்த 1998-ல் 60 ஆக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் உயர்த்த உள்ளதாக பலமுறை கூறப்பட்டது. ஆனால், உயர்த்தவில்லை. தற்போது ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என தகவல் கசிந்துள்ளது. இது ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அவர்கள் ஆதரிப்பார்கள்.

அதே நேரம் வயது உச்சவரம்பை நெருங்கி அரசுப் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பாதகமான முடிவாகும். வரும் 2018 முதல் 2020 வரை சுமார் 2.5 லட்சம் பேர் வரை பணி மூப்பால் ஓய்வு பெறவுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள் நீட்டிப்பதன் மூலம், அரசுக்கு ஒரு மடங்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலும், வரும் ஆண்டுகளில் பணியாளர் தேர்வும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மறுப்பதாகும். எனவே, இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'தர்மத்தைக் கொல்லும் செங்கோட்டையன்!' கொதிக்கும் கே.பி.முனுசாமி



ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதனால் அதனை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில், அவரின் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தற்போது, அமைச்சர் செங்கோட்டையன் 'தர்மத்தைக் கொன்று சசிகலாவைக் காப்பாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.அதன் தொடர்ச்சியாக இன்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பாண்டியராஜன், பொன்னையன், எம்.எல்.ஏ.செம்மலை, எம்.பி.வனரோஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் இன்று, சேலம் புறநகர் மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டத்தின் முன்னாள் அ.தி.மு.க.செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டம், மதியம் 1 மணி வரை நீண்டது. அதன் பிறகு ஓ.பி.எஸ். முன்னிலையில் அவரின் அ.தி.மு.க. அணிக்கு சோழிங்க நல்லூர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து, தேமுதிக அணியைச் சேர்ந்த 750 பேர், நேரில் ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வீரவாள் பரிசளித்து, மலர்மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஆனால் நேற்று, கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் அவரை நேரடியாகப் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். என்னைப் பார்த்து இரண்டு விரலை அசைத்தார் என்றும் பேசியிருக்கிறார். அ.தி.மு.க-வில் செங்கோட்டையன் கட்சிக்காக நன்றாக உழைத்துப் பாடுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு தொண்டர், தர்மமே சாகின்ற அளவில் ஒரு தவறான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.



ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தவரையில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், மத்திய அமைச்சர்கள், பா.ஜனதா தலைவர் அமித்ஷா என்று எல்லோரும் அப்போலோ வந்தாலும் கூட, அங்கிருப்பவர்களிடம் எப்படி இருக்கிறார் ஜெயலலிதா என்று கேட்பார்கள். வெளியில் வந்து, அவர் நன்றாக இருக்கிறார் என்று மட்டும்தான் கூறிச் சென்றிருக்கிறார்கள். இதுவரையில், அவரை நேரடியாக மருத்துவமனையில் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை. செங்கோட்டையன் எங்களைப் போலவே, தினமும் வருவார். நாங்கள் எங்கே உட்காருகிறோமோ அங்கே உட்காருவார். வருத்தத்தோடு எங்களுடன் கலந்துரையாடுவார். சென்றுவிடுவார். அதிலும் அந்த நேரத்தில் இரண்டு தேர்தல் வந்தது. அதனால் 20 நாட்கள் தேர்தல் பணியில் இருந்தார்.

அவர் கூறுகிறார், ஜெயலலிதாவை கண்ணாடி வழியாகப் பார்த்தேன். இரண்டு விரல்களைக் காட்டினார் என்று. யாரைக் காப்பாற்றுவதற்காக ஒரு தர்மத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கிறார். சசிகலாவைக் காப்பாற்றுவதற்காக இவ்வளவு பெரிய உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலைச் சொல்லுகிறாரே, இவர் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு ஒரு துரோகம்செய்திருக்கிறார். இது, கடைசியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரை யாரும் பார்க்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியவர், சசிகலா. அவர் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார். அப்படிப்பட்ட நிலையில், தான் ஜெயலலிதாவைப் பார்த்ததாகக் கூறி, சசிகலாவைக் காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சிசெய்கிறார். இதனை உடனடியாக அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்தால், வேறுவிதமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவேண்டிவரும்." என்று கூறினார்.



பின்னர் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முனுசாமி, மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளது தெளிவற்றது. அவர், முழுமையாக ஓ.பி.எஸ்.விடுத்த அறிக்கையைப் பார்க்காமலே கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதே, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். காபந்து முதல்வராக இருந்தாலும், அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். தான்." என்று தெரிவித்தார்.

120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி... ! மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா


தமிழகத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தெரியாமல் இருக்காது. அசைவத்துக்கு புகழ்பெற்ற ஹோட்டல் அது. இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ள வடக்கம்பட்டியில் ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதங்களில் ஒன்று கூடி முனியாண்டி கோயில் திருவிழாவை நடத்துவார்கள். முனியாண்டியை வழிபட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் என்னவென்று தெரியுமா? முனியாண்டி விலாஸ் புகழ் மண் மணக்கும் பிரியாணியே தான்.

இந்தாண்டு முனியாண்டி கோயில் திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. ஊரை சுற்றி வயல். பழமை மாறாமல் புதுமையும் கலந்த வீடுகள் என்று பளிச்சிட்டது வடக்கம்பட்டி. ஆண்டுதோறும் தை மாதத்தில் நடக்கிறது இந்தத் திருவிழா. இந்த நாளில் இந்தியா முழுக்க முனியாண்டி விலாஸ் வைத்திருப்பவர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி விடுகிறார்கள். திருவிழாவைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், முனியாண்டி விலாஸ் ஹோட்டலை பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழ் சமூக வரலாற்றில் மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு என்று தனி இடமுண்டு. அசைவ உணவுக்கு புகழ்பெற்ற ஹோட்டல் இது. இந்தத் தலைமுறையினரிடம் அசைவ உணவகங்கள் என்றால் கே.எப்.சி., அரேபியன் கபாப், டொமினோஸ் என வாயில் நுழையாத பெயர்களை சொல்வார்கள். அவர்களுக்கு முனியாண்டி விலாஸ் பற்றி தெரியுமா என தெரியவில்லை. அசைவ உணவகம் என்றால் முனியாண்டி விலாஸ் தான் என்ற நிலைமை இப்போது இல்லை. முனியாண்டி விலாஸ் உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.



குளிரூட்டப்பட்ட அறை, அழகிய கட்டமைப்பு, வித்தியாசமான தோற்றம், புரியாத பெயர்களில் உணவகங்கள் பெருத்து விட்டன. இது போன்ற பிரமாண்ட ஹோட்டல்கள் வருவதற்கு முன்பு, நம் மக்களை சுவையால் கட்டி போட்டவர்கள் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்தான். .

இப்போதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் , ஆர்பாட்டமில்லாமல் முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டமுள்ளது. நியாயமான விலை, வீட்டுச் சாப்பாடு போன்ற உணர்வு. கலப்படமில்லாத செய்முறை. காசுக்கு உணவு விற்றாலும் அதில் அறத்துடன் நடந்து கொள்ளும் விதம். இதுதான் இன்னும் அவர்களை இயங்க வைத்து வருகிறது.

இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலை நடத்துபவர்களில் கணிசமானவர்கள், வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான். தங்கள் தொழில் வெற்றிகரமாக நடக்க வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் தான் காரணம் என நம்பும் அவர்கள், ஆண்டுதோறும் முனியாண்டி கோயிலுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இரு வெவ்வேறு சமூகத்தினர் தை, மாசி மாதங்களில் தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.

"தினமும் தங்கள் ஹோட்டலில் நடக்கும் முதல் வியாபார பணத்தை அப்படியே சாமிக்கென்று என்று எடுத்து வைத்து விடுவோம். ஆண்டுதோறும் சேரும் மொத்த பணத்தை ஆண்டு முடிவில் விழா கமிட்டியிடம் கொடுத்து விடுவோம். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதில் ஒரு ரூபாயை கூட எடுக்க மாட்டோம். அதில் தான் இந்த திருவிழாவை நடத்துகிறோம்" என்கின்றனர் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்.

திருவிழாவில் முனியாண்டி சாமிக்கு வழிபாடு நடத்தி வழிபட்ட பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மண் மணக்கும் பிரியாணியும், இதற்காக நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகிறது. உற்சாகமாய் கொண்டாடுகிறார்கள் மக்கள்.



இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராமசாமி, ‘’நான் சென்னை பூந்தமல்லியில் ஹோட்டல் வைத்திருக்கிறேன். பெரிய விளம்பரம் இல்லாவிட்டாலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தேடி வந்து சாப்பிடத்தான் செய்கிறார்கள். நாங்கள் இன்னும் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை விற்பதில்லை. எல்லாமே கைப்பக்குவத்தில் உருவான மசாலாக்கள் மூலம் உணவு தயாரிக்கிறோம். கறிகளில் கலப்படமோ, கெட்டுப்போனதையோ பயன்படுத்த மாட்டோம். அந்த காலத்தில் எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது விவசாயத்தில் நல்ல வசதியாக இருந்த எங்கள் முன்னோர்கள், உணவு சமைத்துக்கொண்டு போய் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளார்கள். நீண்ட நாட்கள் இந்த அறப்பணியை செய்ததன் மூலம், ஊரிலுள்ள பலரும் சமையல் வேலையை கற்று கொண்டிருக்கிறார்கள்.

விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோக பிழைப்பு தேடி பலரும் வெளியுர்களுக்கு சென்றார்கள். அதன் பின்பு சுப்பையா நாயுடு என்பவர் 1937 ல் காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து ராமரெட்டி என்பவர் கள்ளிக்குடியில் இரண்டாவது முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுக்கவும், மற்ற மாநிலங்களிலும் டெல்லி, மும்பையிலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் உருவாகின. எங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனியாண்டி விலாஸ் பெயருக்கு முன்பு மதுரையை போட்டுக்கொண்டோம். அதன் பின்பு மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பிரபலமானது. உணவு வழங்குவது புண்ணியம். அதற்கு பணம் வாங்கக்கூடாது என்றாலும், இக்கால பொருளாதாரச்சூழலில் இலவசமாக உணவு வழங்கமுடியாது. அதனால்தான் ஆண்டுக்கொரு முறை அன்னதானம் வழங்கி புண்ணியம் தேடுகிறோம். அதை சாதாரண அன்னதானமாக இல்லமால் பிரியாணியாக கொடுக்கிறோம்.

தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் ரெட்டியார் சமூகத்தினரும் இந்த அன்னதானத்தை செய்கிறோம். இரண்டு நாட்கள் சைவ அன்னதானம் வழங்கும் நாங்கள் மூன்றாம் நாளில் பிரியாணியை வழங்குகிறோம். எவ்வளவுதான் புதுப்புது பெயர்களில் ஹோட்டல்கள் வந்தாலும், முனியாண்டி விலாஸ் இருக்கும். அதுக்கு காரணம் வடக்கம்பட்டி முனியாண்டி சாமியின் அருள்தான்’’ என்றார்.

மலை போல குவித்து வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள், 120 ஆடுகள், 400 கோழிகளைக் கொண்டு, தங்களுக்கே உரிய கைப்பக்குவத்தில் பிரியாணி சமைத்து, சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அங்கேயே சாப்பிட்டும், பார்சல் கட்டியும் எடுத்து செல்கிறார்கள் மக்கள்.
பிரியாணி மணமுடன் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் பெயரும் அந்த வட்டாரம் முழுக்க பரவுகிறது.

- செ.சல்மான்,

Tamil exam still not mandatory for students from other states: Madras High Court

By Express News Service  |   Published: 28th February 2017 03:52 AM  |  



CHENNAI: The First Bench of the Madras High Court has extended the benefit of exemption from writing the Tamil examination for this year too to students of other States and studying in minority institutions on Monday.

The Bench of Acting Chief Justice Huluvadi G Ramesh and Justice R Mahadevan extended the benefit while passing orders on a batch of PILs from linguistic minority institutions praying for a directive to the State School Education authorities to exempt the students belonging to other States and having different mother tongues from writing the Tamil language exam and instead to write the exam in their mother tongue.

The senior counsel appearing for the PIL petitioners submitted that the students would be put to irreparable loss if they were forced to take the Tamil exam. Though the Act was brought into force in 2014, till date no rule was framed to implement it and the Government itself was not clear on its stand about its implementation, the counsel said.

Lost passport? File complaint online

By Jayanthi Pawar | Express News Service | Published: 28th February 2017 03:57 AM |

CHENNAI: Lost your passport or some other important document? You need not go through the pain of visiting a police station to lodge a complaint and then again for the ‘non-traceable’ certificate.

The State Crime Records Bureau is developing an online portal in the State police’s website www.eservices.tnpolice.gov.in, where people can lodge a complaint on missing important documents such as passports and education certificates. The portal would generate an online receipt that can be printed to apply to the departments concerned for a fresh copy of the lost documents.

At present, if a document is lost, you have to file a written complaint in the police station under whose jurisdiction you lost it. After a few days of lodging the complaint, a “non-traceable” certificate has to be obtained from the same police station. Only on submission of this certificate, the agencies or institutions concerned would consider reissuing a fresh copy of the documents.

Police officers hope the new portal would eliminate this tedious process and make it simple for the public and the police too.

The portal is being developed by the National Information Centre (NIC), the Central government unit that handles the IT requirements of government agencies. Officials hope it will be ready by April.

“It will be easy and quick process. Within minutes after registering the complaint, the receipt will be generated. The complainant can take either a printout or save a screenshot to apply for a fresh set of documents from the concerned agency,” a police officer told Express.

The officers said that to check the authenticity of the complaint, the user had to provide the mobile number and upload any of the government-issued photo ID cards to get the complaint registered. A copy of the complaint would be available at the concerned local police station. Government agencies that issue such documents would have provisions to verify the authenticity of the receipt generated by the system. The responsibility of verifying the authenticity of the applicant for fresh documents would lie with the concerned agency that issues the documents.

“This facility mainly aims to benefit senior citizens and people coming from other states who face language barriers. Filing a complaint online makes it easy for them. However, there will be a disclaimer mentioned in the site saying fake complaints are punishable,” said the officer.

Based on the success of the web portal, the officer said developing it as a mobile app would be considered.

TN CM Palaniswami meets PM Modi, discusses relief funds, NEET exam





Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami on Monday appealed to Prime Minister Narendra Modi to immediately release relief funds for the drought-hit state and for the damage caused by Cyclone Vardah.

Reiterating the state’s demand, Palaniswami sought Rs 39,565 crore as drought relief package and Rs 22,573 for the damage in the cyclone.

Speaking to reporters after meeting the Prime Minister, Palaniswami said, “We have also sought Rs 17,333 crore under various other central schemes.”

The chief minister also put forth the demand to stop hydrocarbon extraction project in Neduvasal in Pudukkottai district that has attracted large-scale protests recently.

“We have asked the PM not to take forward the Centre’s hydrocarbon extraction project without consultation with concerned farmer community and the state government’s permission,” he said.

Palaniswami avoided a question on the arrest of protesters in Neduvasal.

On the issue of the medical entrance exam NEET, a request has been made seeking the Centre’s assent for a state legislation exempting students of Tamil Nadu from taking up the entrance exam.

“We have asked the Centre to ratify a legislation that has been passed in TN assembly exempting TN from NEET,” he said.

“We have also asked the Centre to fulfil our demand for setting up AIIMS at Tanjavur,” the chief minister said.

Demand for setting up of Cauvery Management Board, Cauvery Water Regulation Committee, Rs 1,650 crore fund for special scheme for fishermen and their release from Sri Lanka were part of a memorandum submitted by the chief minister to Modi.

On his second day in the national capital, the CM is expected to meet Union Ministers of transport, law, power and urban development.

Union Minister of State for Road Transport, Highways and Shipping Pon Radhakrishnan later met the Chief Minister and spoke about projects in the state.

Names for Madras varsity V-C shortlisted

The three-member search committee for University of Madras Vice-Chancellor met on Monday for over three hours and short-listed 10 names. A member said by next week, the names would be handed over to the Governor-Chancellor, Ch. Vidyasagar Rao.
As many as 60 candidates had applied for the post.
இப்பவே தகிக்கிறது வெயில்! : 'ஜில்' பானங்கள் விற்பனை தூள்

கோவை : இப்போதே வெயில் வாட்டி எடுப்பதால், கோவையில் கம்பங்கூழ், தர்பூசணி, இளநீர், நன்னாரி சர்பத் விற்பனை அதிகரித்துள்ளது.
வழக்கமாக, ஏப்ரல், மே (பங்குனி, சித்திரை) மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், குளிர் காலமான பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் வாட்டுகிறது. காலை, 10:00 மணியை தாண்டியதும், வெயில் தகிக்க ஆரம்பிக்கிறது; மாலை, 3:30 வரை வாட்டி எடுக்கிறது.வேலை நிமித்தமாக நகருக்குள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வாகனத்தில் செல்வோர் வாடி வதங்குகின்றனர். ஆசுவாசப்படுத்திக் கொள்ள, குளிர்பானங்கள் அருந்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நகர்ப்பகுதியில் ஆங்காங்கே கம்பங்கூழ், நீர் மோர், நன்னாரி சர்பத், கரும்பு ஜூஸ், தர்பூசணி, இளநீர், நுங்கு, பதனீர் விற்கும் கடைகள் உருவாகி உள்ளன. இவற்றின் விற்பனை காலநிலைக்கு ஏற்ப அதிகரித்து வருகிறது.கம்பங்கூழ் 15 ரூபாய், நீர் மோர் 10 ரூபாய், நன்னாரி சர்பத் 15 ரூபாய், சோடா சர்பத் 20 ரூபாய், கரும்பு ஜுஸ் 15 ரூபாய், தர்பூசணி பிளேட் 15 ரூபாய், இளநீர் 20 ரூபாய், பதனீர் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீ விலையை விட அதிகமாக இருந்தாலும், யாரும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. தாகம் தணிக்க குளிர்பானங்களையே நாடுகின்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'நன்னாரி சர்பத் விற்பனை, குளிர்காலத்தில் மட்டும் 'டல்'லடிக்கும். கம்பங்கூழ், கரும்பு ஜூஸ் போன்றவற்றை எந்த காலகட்டத்திலும் அருந்துவதற்கு பொதுமக்கள் பழகி விட்டனர். 'திண்டிவனம் மற்றும் ஆந்திராவில் இருந்து தர்பூசணி பழங்கள் தருவிக்கப்படுகின்றன. வெயில் கொளுத்துவதால், தர்பூசணி சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்கிறோம். மே வரை விற்பனை சூடுபிடிக்கும்' என்றனர்.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் 'பயோ டாய்லெட்' பொருத்தும் பணி தீவிரம்; பிளாட்பார்ம்களில் மூக்கை பிடித்து செல்வதற்கு விமோசனம்!


கோவை : கோவை - ராமேஸ்வரம் ரயிலில், 'பயோ டாய்லெட்' வசதி முழுமையடைந்துள்ள நிலையில், இதர எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இவ்வசதியை விரிவுபடுத்தும் பணி, கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது. பசுமை ரயில் பாதை திட்டத்தால், பிளாட்பார்ம் பயணிகள் மூக்கை பிடித்து செல்வதற்கு விமோசனம் கிடைத்துள்ளது.

ரயில் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, ரயில்வே ஸ்டேஷன்களும், ரயில் பெட்டிகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவது ஒருபுறம் இருப்பினும், ரயில் கழிவறையிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகளால் பிளாட்பார்ம் பயணிகள் மூக்கை பிடித்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.நீண்டதுார ரயில்களில் பயணிகள் கழிவறையை பயன்படுத்துவது அதிகம் என்பதால், பெட்டிகளில் தண்ணீர் காலியாவதுடன், தண்டவாளங்களிலும் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க, 'இக்கோ பிரண்ட்லி பயோலஜிக்கல் டாய்லெட்' இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவுசெய்தது.

அதன்படி, ராமேஸ்வரம் - மானாமதுரை இடையிலான ரயில்பாதை மனிதக் கழிவுகள் வெளியேறாத நாட்டின் முதல் பசுமை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 'துாய்மை இந்தியா' திட்டத்தின்படி, ரயில் பெட்டிகளில் இந்த 'பயோ டாய்லெட்' வசதி ஏற்படுத்தப்பட்டு பசுமை வழித்தடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் நடந்த குடியரசு தின விழாவில், 35 பெட்டிகளில் ஏற்கனவே, 140 'பயோ டாய்லெட்' பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த, கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, கோவை - ராமேஸ்வரம் பசுமை ரயில் உட்பட, பல்வேறு ரயில்களில், 120 பெட்டிகளில், 'பயோ டாய்லெட்' வசதிகள் விரைவில் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை ரயில்வே ஸ்டேஷனை பொறுத்தவரை தினமும் இயக்கப்படும், 72 ரயில்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், குறுகிய துார ரயில்கள் தவிர, வட இந்தியா வரை செல்லும் நீண்ட துார எக்ஸ்பிரஸ் ரயில்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன் பணிமனையில் ரயில்களில் 'பயோ டாய்லெட்' பொருத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. முதற்கட்டமாக, கோவை - ராமேஸ்வரம் ரயிலில் இந்த வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதர எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருவதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழி பிறந்துள்ளது.

இதுகுறித்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சின்னராசு கூறுகையில், ''கோவை - ராமேஸ்வரம் ரயில் பெட்டிகளில் 'பயோ டாய்லெட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏ.சி., ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் படிப்படியாக, 'பயோ டாய்லெட்' வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

விசேஷ தொழில்நுட்பம்!
'பயோ டாய்லெட்' எனப்படும் இந்த உயிரி கழிவறையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது. இந்த கழிவறைகளில் ஆறு கட்டமாக மனிதக் கழிவுகள் மக்கச் செய்யப்படுகிறது. சூற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பயணிகள் கழிப்பறையில் போடும் மதுபாட்டில்கள் போன்றவற்றால், அவை செயலிழக்க வாய்ப்புள்ளதாக பராமரிப்பு பொறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆறு மாத குழந்தை விற்பனை : மதுரையில் 5 பேர் கைது

மதுரை: மதுரையில், ஆறு மாத குழந்தையை, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகா, 34. இவருக்கு, ஆறு மாதத்திற்கு முன், ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, இரண்டாவது கணவர் பிரிந்து சென்ற நிலையில், குழந்தையை வளர்ப்பதில், கனகாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து அவருக்கு பழக்கமான, 57 வயது பெண்ணிடம் கனகா தெரிவித்தார். குழந்தையை அவனியாபுரத்தைச் சேர்ந்த, 33 வயது நபர் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடியில் ரத்த வங்கி நடத்தி வரும், 39 வயதுடையவரிடம், 2.50 லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது. அவர், ஆண் வாரிசுக்காக குழந்தையை சட்டவிரோதமாக 'தத்து' எடுத்து உள்ளார். இந்நிலையில், தன் குழந்தையை சிலர் விற்று விட்டதாக போலீசில் கனகா புகார் செய்தார். இது தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 
போலீசார் கூறுகையில், 'கனகா சம்மதத்தோடு தான் குழந்தை விற்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு பேர் மூலம் குழந்தை விற்கப்பட்டுள்ளதால், கனகாவுக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை.
'இதனால் அவர், புகார் தெரிவித்திருக்கலாம். முதற்கட்டமாக, ஐந்து பேரை கைது செய்துள்ளோம். தேவைப்பட்டால், கனகாவையும் கைது செய்து விசாரிப்போம்' என்றனர்.

தெற்கு ரயில்வேயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

DINAMALAR 

சென்னை: கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து தமிழகம் வழியாக, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு, அந்தியோதயா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து, நேற்று துவங்கியது.ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, டில்லி ரயில் பவனில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், அந்தியோதயா ரயில் போக்குவரத்தை நேற்று துவக்கி வைத்தார். இந்த ரயில், தமிழகத்தில் ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, கோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இந்த ரயிலின் வழக்கமான போக்குவரத்து, ஹவுராவில் இருந்து, மார்ச் 4ம் தேதியிலிருந்தும், எர்ணாகுளத்தில் இருந்து, மார்ச் 7ம் தேதியிலிருந்தும் துவங்குகிறது.

இந்த ரயில் போக்குவரத்து குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக, இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத, 16 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதுதவிர, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகரிலிருந்து தமிழகத்தின் திருச்சிக்கு, ஹம்சபர் என்ற முழுவதும், 'ஏசி' வசதி செய்யப்பட்ட, வாராந்திர ரயில் போக்குவரத்து சேவையும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில், தமிழகத்தின் சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
தமிழை கொலை செய்யும் தமிழ் படங்கள் - சமூக ஆர்வலர்கள் வேதனை

தமிழுக்கு ஏற்பட்ட வறட்சியால், தமிழ் படங்களே தமிழே கொலை செய்து வருகின்றன. வாயில் நுழையும் வார்த்தைகள் எல்லாம், படங்களின் தலைப்பாக மாறுவது, கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜென்டில்மேன், லவ் டுடே என, தமிழ் படங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் கலாசாரம் அதிகரித்தது. 'தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே, படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்' என்ற நடைமுறை, தி.மு.க., ஆட்சியில் அமலானது. 
தமிழா, இல்லையா குழப்பம்:

ஜில்லா, மிருதன், கெத்து, கபாலி, ஜில் ஜங் ஜக், மெட்ராஸ் உட்பட, பல படங்களின் பெயர்கள், தமிழா, இல்லையா என, சர்ச்சை எழுந்து, வரி விலக்கு கிடைப்பதிலும் சிக்கல் உருவானது. சமீப காலமாக, சேதுபதி, போக்கிரிராஜா, மனிதன், கொடி, படிக்காதவன், பொல்லாதவன் என, பழைய படங்களின் பெயர்களே, புதிய படங்களுக்கு சூட்டப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், தற்போது வாயில் நுழையும் வசனத்தையும், தலைப்பாக மாற்றி வருகின்றனர். த்ரிஷா இல்லைனா நயன்தாரா, தலையில் ஏண்டா எண்ணெய் வைக்கல, கெட்ட பையன் சார் இவன், குரங்கு கையில பூமாலை, நாளை முதல் குடிக்க மாட்டேன் என, இப்பட்டியல் நீள்கிறது. 

இது குறித்து, தமிழ் ஆர்வலர்கள் கூறியதாவது: கனவு வாரியம் போன்ற தமிழ் படங்கள், சர்வதேச அளவில் விருது வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், தமிழ் படங்களுக்கான அடையாளம் மற்றும் கலாசாரமும் குறைந்து வருகிறது. தமிழ் படங்களில் இடம் பெறும், 70 சதவீத பாடல் மற்றும் வசனங்கள், 'தமிங்கிலீஷ்' ஆகவே உள்ளன.
மக்களை எளிதில் சென்றடையும் சினிமா போன்ற தளங்களை, தமிழின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளத்திற்கும் பயன்படுத்த வேண்டும். தற்போதைய நிலை நீடித்தால், அடுத்த தலைமுறைக்கு, திருக்குறள் கூட புரியாமல் போய்விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

டுபாக்கூர் 'இ - டிக்கெட்' முகவர்களிடம் உஷார் : ரயில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., எச்சரிக்கை | Dinamalar

கோவை: அனுமதியற்ற, 'இ - டிக்கெட்' முகவர்கள் அதிகரித்து உள்ளதாக எச்சரித்துள்ள, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், 'போலி முகவர்கள் பற்றி ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் புகார் அளிக்கலாம்' என, அறிவுறுத்தி உள்ளது. 

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005 முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆன்மிகம், சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களுக்கு, சிறப்பு ரயில்களில் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
முன்பதிவு

ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, உணவும் முன்பதிவு செய்து கொள்வது இத்திட்டத்தின் சிறப்பம்சம். தவிர, மாநிலம் முழுவதும், ஐ.ஆர்.சி.டி.சி., அனுமதி பெற்ற, 1,000 முகவர்கள் மூலமும் இதர ரயில்களுக்கு, இ - டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலி டிக்கெட் முகவர்கள் அதிகரித்து வருவதாக, சமீப காலமாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே, பயணி யர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் குறிப்பிடப்பட்ட முகவர்களிடம் மட்டும் இ - டிக்கெட் பெற்று, ஏமாறுவதை தவிர்க்கலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனுமதியற்ற டிக்கெட் முகவர்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் அதிகம் வருகின்றன. இத்தகைய நபர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கில் தாங்களாகவே, 'யூசர் ஐடி' ஒன்றை உருவாக்கி, பயணிகளையும், ரயில்வே நிர்வாகத்தையும் ஏமாற்றுகின்றனர். 

டிக்கெட்டுக்கு, 500 ரூபாய் வரை கமிஷன் பெற்று ஏமாற்றுவதாகவும் புகார்கள் வருகின்றன. இத்தகைய நபர்களிடம் பெறப்படும் டிக்கெட்டுகள் செல்லத்தக்கதல்ல; டிக்கெட் கட்டணமும் திரும்பக் கிடைக்காது.

நடவடிக்கை

பயணிகள், www.irctc.com என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட முகவர்களை மட்டுமே டிக்கெட் பெறுவதற்கு தொடர்புகொள்ள வேண்டும். அனுமதியற்ற முகவர்கள் குறித்து ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

By DIN  |   Published on : 27th February 2017 07:01 PM  |  
bharti-airtel
சென்னை: ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. 

சீமைக் கருவேல மரம் வளர்த்தால் தண்டனை: சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவு

By DIN  |   Published on : 28th February 2017 05:11 AM  |    
maduraicourt
சீமைக் கருவேல மரங்களை வளர்க்கத் தடை விதிக்கும் சட்டத்தை இரண்டு மாதங்களில் நிறைவேற்றுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவை ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 90 சதவீத சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 10 சதவீத மரங்களையே அகற்றியிருக்க வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களில் இப்பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களின் தீமைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை வளர்க்கத் தடை விதிக்கவும், மீறினால் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்டத்தை 2 மாதங்களில் தமிழக அரசு இயற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, 15 நாள்களுக்குள் அகற்றவும் உத்தரவிட்டனர்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகங்களுக்கு நீதிபதிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எப்போது வேண்டுமானாலும் திடீர் ஆய்வு மேற்கொள்வர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இளைஞர்களுக்கு வைகோ அழைப்பு

இவ்வழக்கில் ஆஜரான பின்பு மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக ஆட்சியில் தான் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது. ஆனால், இப்போது இதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்துப் பேசி வருகிறார். அவரது இந்தச் செயலை மன்னிக்க முடியாது. தற்போது மீத்தேன், ஷேல் கேஸ் சேர்ந்த கலவையான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் துடிக்கிறது. இந்தியாவின் நலனுக்காக தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என்று பாஜக-வின் இல.கணேசன் அறிவுரை கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் உயர தமிழகத்தை பலியாக்க முடியாது. மத்திய அரசின் இந்த நாசகாரத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றார்.

செங் கல் பட்டு நகரில் சுற் றித் தி ரி யும் குரங் கு கள்.

செங் கல் பட்டு, பிப்.28:

செங் கல் பட்டு நக ரில், பொது இடங் கள், வீடு கள், மார்க் கெட், உணவு விடு தி கள் என கண்ட இட மெல் லாம் குரங் கு கள் எண் ணிக்கை அதி க ரித்து வரு வ தால் அவற் றின் அட்டகாசத்தை பொருத் துக் கொள்ள முடி யா மல் நகர மக் கள் திணறி வரு கின் ற னர்.
செங் கல் பட்டு பகு தி யில் சமி பத் தில் வெறி பி டித்த நாய் ஒன்று 10க்கும் மேற் பட்ட நபர் களை கடித் து கு த றிய சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது. இது போன்ற பொமக் க ளுக்கு தொல் லைக் கொ டுக் கும் மிரு கங் களை நக ராட்சி பணி யா ளர் கள் முறை யாக பிடிப்பதில்லை என்ற புகார் உள் ளது. இந் நி லையி, நக ரின் முக் கிய பகு தி க ளில் குரங் கு க ளின் அட் ட கா சம் நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது இத னால், மக் கள் அச் ச ம டைந் துள் ள தாக கூறு கின் ற னர்.

செங் கல் பட்டு வேதா ச லம், அழ கே சன் ந கர், அண் ணா ந கர், அனு மந் தப் புத் தேரி, நத் தம், ஜே.சி.கே.நகர் உள் ளிட்ட முக் கிய பகு தி க ளி லும் பழைய பேருந்து நிலை யம், புதிய பேருந்து நிலை யம், ரயில் நிலை யம் உள் ளிட்ட மக் கள் அதி கம் கூடும் இடங் க ளும் உள் ளது. மலையை ஒட்டி உள்ள இந்த பகு தி க ளில் சமிப கால மாக நக ருக் குள் வரும் குரங் கு க ளின் எண் ணிக்கை அதி க ரித் துள் ளது. ஒரே நேரத் தில் 10 முதல் 15 குரங் கு கள் வரை நக ருக் குள் வந்து கூட் டம் கூட் ட மாக வீடு கள், பஜார் பகுதி, உணவு விடு தி கள், கடை க ளில் புகுந்து அங் குள்ள தின் பண் டங் களை அள்ளி செல் கின் ற ன. இவற்றை விரட்ட வரு ப வர் களை ஆக் ரோ ஷத் து டன் எதிர்க் கின் ற னர். இத னால், குரங் கு க டிக்கு பயந் து கொண்டு அவற்றை விரட்ட முடி யா மல் மக் கள் சிர மப் பட்டு வரு கின் ற னர்.

பேருந்து நிலை யங் க ளில் பஸ் சில் ஏறும் குரங் கு கள் பய ணி க ளின் உடைமை களை ஒரு கை பர்த் து வி டு கி றது. குரங் கு க ளின் சேட் டை யால் வீடு க ளில் தனி யாக உள்ள குழந் தை கள், முதி ய வர் கள் அச் சத் தில் உள் ள னர். அதே போல், வீட் டு தோட் டத் தில் வள ரும் பழங் க ளை யும் விட்டு வைப் ப தில்லை.

இது கு றித்து செங் கல் பட்டு பகுதி மக் கள் சிலர் கூறு கை யில்; ஏற் க னவே, நக ரில் பன்றி தொல்லை, நாய் தொல்லை அதி க ரித்து வரு கி றது, இந் நி லை யில் குரங் கு கள் தொல் லை யும் அதி க ரித் துள் ளது. இத னால், பகுதி மக் கள் தினம் தினம் அச் சத் தில் தான் வெளியே சென்று வரு கின் ற னர். எனவே, பொது மக் க ளுக்கு இடை யூ ராக, தொல்லை கொடுத் து வ ரும் குரங் கு களை வனத் துறை மற் றும் நக ராட்சி ஊழி யர் கள் இணைந்து பிடித்து வேறு இடத் தில் விட வேண் டும். மேலும், அதி க ரித் து வ ரும் நாய், பன் றி க ளை யும் அப் பு றப் ப டுத்த வேண் டும். என்று தெரி வித் த னர்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை, பிப். 28:

அகில இந் திய மருத் துவ நுழை வுத் தேர் வான நீட் நுழை வுத் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாளா கும். தமி ழ கத் தில் பழைய முறைப் படி மாண வர் சேர்க்கை நடக் குமா அல் லது நீட் தேர்வு அடிப் ப டை யில் மாண வர் சேர்க்கை நடக் குமா என்று மாண வர் கள் குழப் பத் தில் உள் ள னர்.

நாடு முழு வ தும் ஒரே மாதி ரி யான மருத் துவ நுழை வுத் தேர்வு நடத்த வேண் டும் என்று தொட ரப் பட்ட வழக் கில், நுழை வுத் தேர்வு நடத்த உச்ச நீதி மன் றம் கடந்த ஆண்டு ஏப் ரல் மாதம் உத் த ர விட் டது. அதை தொ டர்ந்து மே 1ம் தேதி, ஜூலை 24ம் தேதி என இரண்டு கட் டங் க ளாக நீட் நுழை வுத் தேர்வு நடந் தது.
தமி ழ கம் உள் ளிட்ட சில மாநி லங் கள் நீட் தேர் வில் இருந்து ஓராண் டுக்கு விலக்கு பெற் றன. அதில் 2 லட் சத்து 52 ஆயி ரம் மத் திய அரசு ஒதுக் கீடு இடங் க ளுக்கு இட ஒ துக் கீடு கவுன் ச லிங் ஆன் லை னில் நடந் தது.

இந் நி லை யில், இந்த ஆண்டு, நாடு முழு வ தும் நீட் தேர்வு கட் டா யம் என்ற நிலை யில், தமி ழக அரசு நீட் தேர்வு தொடர் பாக சட் ட ச பை யில் ஜன வரி 31ம் தேதி சட்ட மசோதா ஒன்றை தாக் கல் செய் தது. தமி ழ கத் தில் மருத் துவ மாண வர் சேர்க்ை கயை பொறுத் த வரை பழைய நடை மு றையே தொடர வேண் டும் என்று அதில் கூறப் பட் டி ருந் தது. பிப் ர வரி 1ம் தேதி அந்த சட்ட மசோதா நிறை வேற் றப் பட்டு, குடி ய ரசு தலை வ ரின் ஒப் பு த லுக் காக அனுப் பப் பட் டது.

குடி ய ரசு தலை வர் இது வரை அந்த சட்ட மசோ தா வுக்கு ஒப் பு தல் வழங் க வில்லை. அத னால் இது வரை அந்த சட் டம் நடை மு றைக்கு வரா த நி லை யில், தமி ழ கத் தில் பழைய முறைப் படி மாண வர் சேர்க்கை நடக் குமா அல் லது நீட் தேர்வு அடிப் ப டை யில் மாண வர் சேர்க்கை நடக் குமா என்று மாண வர் கள் மத் தி யில் குழப் ப மான சூழ் நிலை உரு வா கி யுள் ளது.

இதற் கி டையே, நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (மார்ச் 1ம் தேதி) கடைசி நாளா கும். இதற்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் www.cbseneet.nic.in என்ற இணை ய த ளத் தில் விண் ணப் பிக்க வேண் டும். நீட் தேர் வுக்கு விண் ணப் பிப் ப தற் கான கடைசி நாளில் பலர் விண் ணப் பிக்க முயற்சி செய் தால், சர் வர் கோளாறு ஏற் ப ட லாம். அத னால் நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் கடைசி நேரத் தில் விண் ணப் பிப் பதை தவிர்க் கு மாறு சிபி எஸ்இ தரப் பில் கூறப் பட் டுள் ளது.

சட்ட மசோதா நிறை வே று மா?

நீட் தேர்வு தொடர் பான குழப் பம் குறித்து சுகா தா ரத் துறை செய லா ளர் ராதா கி ருஷ் ணனை தொடர் பு கொண்டு கேட் ட போது, ‘தமி ழக சட் ட ச பை யில் நிறை வேற் றப் பட்ட சட்ட மசோதா மத் திய அர சின் உள் துறை அமைச் ச கத் துக்கு அனுப் பப் பட் டுள் ளது. அதை சட் ட மாக் கு வ தற் கான பணி களை ஒவ் வொரு நாளும் மேற் கொண்டு வரு கி றோம். துறை ரீ தி யான ஒப் பு தல் பெறும் பணி கள், தற் போது மேற் கொள் ளப் பட்டு வரு கி ற து’ என் றார்.
இதற் கி டையே, நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (மார்ச் 1ம் தேதி) கடைசி நாளா கும். இதற்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் www.cbseneet.nic.in என்ற இணை ய த ளத் தில் விண் ணப் பிக்க வேண் டும். நீட் தேர் வுக்கு விண் ணப் பிப் ப தற் கான கடைசி நாளில் பலர் விண் ணப் பிக்க முயற்சி செய் தால், சர் வர் கோளாறு ஏற் ப ட லாம். அத னால் நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் கடைசி நேரத் தில் விண் ணப் பிப் பதை தவிர்க் கு மாறு சிபி எஸ்இ தரப் பில் கூறப் பட் டுள் ளது.
காங்கயம் அருகே
பிளாஸ்டிக் முட்டை விற்பனை

காங் க யம், பிப்.28:

காங் க யம் அருகே பிளாஸ் டிக் முட்டை விற்கப்படுவது தெரி ய வந் துள் ளது.

திருப் பூர் மாவட் டம் காங் க யம் சென் னி மலை சாலை சாவடி கிரா மத் தில் உள்ள மளிகை கடை யில் பெரி ய சாமி என் ப வர் நேற்று முட்டை வாங் கி யுள் ளார். அந்த முட் டையை வீட் டிற்கு கொண்டு சென்று ஆப் பா யில் போட தோசை கல் லில் உடைத்து ஊற் றி யுள் ளார். அப் போது முட்டை சரி யாக வேகா மல் பிளாஸ் டிக் பேப் பர் போன்று பட லம் ஏற் பட் டுள் ளது. இது கு றித்து கடைக் கா ர ரி டம் பெரி ய சாமி முறை யிட் டுள் ளார்.

அப் போது, கடைக் கா ரர் தான் சென் னி ம லை யில் இருந்து மொத் த மாக முட்டை வாங் கி ய தா க வும், இதில் பிளாஸ் டிக் முட்டை இருந் தி ருக் க லாம் என தெரி வித்து கடை யில் உள்ள மற்ற முட் டை களை விற் பனை செய் யா மல் திருப்பி அனுப் பு வ தா க வும் கூறி யுள் ளார். இந்த முட்டை பிளாஸ் டிக் முட்டை என் றும் இதனை சாப் பிட் டால் உடல் நலம் பாதிக் கும் என் றும் இப் ப குதி மக் கள் தெரி வித் த னர். இந்த பிளாஸ் டிக் முட்டை குறித்து உணவு பொருள் பாது காப்பு துறைக்கு தக வல் தெரி விக் கப் பட் டுள் ளது.
Feb 28 2017 : The Times of India (Chennai)
Exempt TN from NEET: EPS to Modi
Chennai:
TIMES NEWS NETWORK


`Exam Will Be Injustice To Rural Students'
Emphasising that Tamil Nadu has a fair and transparent medical admission policy , chief minister Edappadi K Palaniswami on Monday urged Prime Minister Narendra Modi to approve two Bills exempting students from the state from appearing for the National Eligibility-cum-Entrance Test (NEET) to get admission into medical and dental colleges in the state.During his first official me eting with Modi after being sworn in as chief minister, Palaniswami submitted a memorandum containing crucial issues relating to the state that require urgent attention of the Centre.
“The imposition of NEET will cause grave injustice to students from rural areas and hence approval for the TN bills seeking exemption from NEET may be accorded so that Presidential assent could be obtained at the earliest,“ the CM said. The state had sought financial assistance of ``39,555 crore for drought relief and `22,573 crore for the damage caused by cyclone Vardah, but the Centre was yet to provide any assistance, Palaniswami said.
The CM expressed the state's concerns about Mekedatu scheme proposed by Karnataka, the dams planned by Kerala across Pambar and Bhavani rivers which are part of the Cauvery basin, and sought the Centre's help in setting up permanent mechanisms, the Cauvery Management Board and Cauvery Water Regulation Committee to resolve the longfestering issue between the neighbouring states. That apart, the state is also keen on restoring the full reservoir level of 152ft in Mullaperiyar dam, inter-linking of rivers, besides seeking approval for the Athikadavu-Avinashi scheme. Terming unfair the formula adopted by the 14th finance commission which has “singled out Tamil Nadu for very adverse treatment“, Palaniswami demanded the pending dues of `17,333 crore for various Central schemes. Emphasising the power sector, he sought expeditious approval of the revised bidding documents for the Cheyyur ultra mega power project, creation of a dedicated interstate green energy corridor to evacuate surplus wind power from Tamil Nadu and abolishing frequency linked penalty for renewable energy-rich states. He also urged concessional funding of `17,000 crore from power ministry to make Chennai cyclone and flood resilient through improvements in distribution network.
Feb 28 2017 : The Times of India (Chennai)
74 PG med seats to go waste this year
Chennai:


Annamalai Univ Seats Still Derecognised
Tamil Nadu government's effort to boost the number of post graduate programmes for medicine may suffer a setback with the Medical Council of India yet to renew the recognition of 74 PG seats of in Rajah Muthiah Medical College attached to Annamalai University .The PG programmes in six departments, including paediatrics, obstetrics and gynecology and orthpedics, were derecognised by MCI in June 2016 on grounds of low patient footfall, discrepancies in appointments and promotions of faculty and poor infrastructure.The college will not be allowed to admit new PG students in the upcoming academic year until the MCI gives them the green signal.
Faculty and students in the college say the campus has been ailing for long despite coming under the state government's control in 2013.
“ Although the government took charge of the university , it still functions as a self-financed institute,“ said a PG student of the medical college at Chidambaram on conditions of anonymity . He said the number of out-patients had gone below 50%, the faculty rarely attended classes and the infrastructure fell short of the norms set by MCI. He was among other PG students, parents and doctors' association members who held a meeting in Chennai on Monday to discuss ways to give their college a leg-up.
The MCI had cancelled the permission granted to anaesthesiology department after an inspection team found the equipment to be “old and inadequate“. It derecognised the PG programmes in the paediatrics, orthopaedics and radiodiagnosis after finding discrepancies in appointment of faculty members and their promotions. They also cited the lack of publication of research papers. The anaesthesiology department, for example, hadn't published a single paper in three years.
One of the demands that constantly cropped up in the meeting was to bring the college, which currently has around 750 MBBS students, under Tamil Nadu Dr M G R Medical University .“At least then, the government will share it resources, including faculty and infrastructure, with the college,“ said B Kamaraj, a parent whose son is a third-year MBBS student at Rajah Muthiah College.
While the university charges `5.45lakh per year as tuition fee for MBBS, the fee in government medical college is `15,600.“And the infrastructure is far inferior. This is the price students who get admission on merit pay ,“ said Kamaraj.
Although repeated calls by TOI to the university's registrar went unanswered, officials in the education department said they had sought renewal of recognition with the MCI. Sources in the MCI say the permission is unlikely to be granted if the college doesn't put its act together.
An official in the state department of health and family welfare said discussion has been underway for long to bring the college under the directorate of medical education. “But there are too many legal and financial issues to be addressed before we make a move,“ he said.




NEWS TODAY 22.04.2024