Tuesday, February 28, 2017

தெற்கு ரயில்வேயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

DINAMALAR 

சென்னை: கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து தமிழகம் வழியாக, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு, அந்தியோதயா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து, நேற்று துவங்கியது.ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, டில்லி ரயில் பவனில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், அந்தியோதயா ரயில் போக்குவரத்தை நேற்று துவக்கி வைத்தார். இந்த ரயில், தமிழகத்தில் ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, கோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இந்த ரயிலின் வழக்கமான போக்குவரத்து, ஹவுராவில் இருந்து, மார்ச் 4ம் தேதியிலிருந்தும், எர்ணாகுளத்தில் இருந்து, மார்ச் 7ம் தேதியிலிருந்தும் துவங்குகிறது.

இந்த ரயில் போக்குவரத்து குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக, இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத, 16 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதுதவிர, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகரிலிருந்து தமிழகத்தின் திருச்சிக்கு, ஹம்சபர் என்ற முழுவதும், 'ஏசி' வசதி செய்யப்பட்ட, வாராந்திர ரயில் போக்குவரத்து சேவையும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில், தமிழகத்தின் சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...