Sunday, February 26, 2017


மல்லையாவுக்கு மறைமுகமாக ஜெட்லி பதிலடி..



சில நாட்களுக்கு முன்பு இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா, 'இங்கிலாந்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். என் மேல் இருக்கும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி அணுகுவேன்' என்று கூறி இருந்தார். இந்நிலையில், இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்தில் இருந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது மாற்றப்பட வேண்டும்.' என்று பேசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அப்போது, இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்தில் தங்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதைப் பற்றி அந்நாட்டு அரசிடம் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெட்லி, 'பலர் கடன் வாங்கிவிட்டால், அதற்கான உரிய பணத்தை செலுத்தத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். பிறகு அவர்கள் லண்டனில் வந்து தங்கிவிடலாம் என்றும் நினைக்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டும்.' என்று பேசியுள்ளார். விரைவில் இங்கிலாந்து சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஜெட்லி இப்படி பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...