Tuesday, February 28, 2017

இப்பவே தகிக்கிறது வெயில்! : 'ஜில்' பானங்கள் விற்பனை தூள்

கோவை : இப்போதே வெயில் வாட்டி எடுப்பதால், கோவையில் கம்பங்கூழ், தர்பூசணி, இளநீர், நன்னாரி சர்பத் விற்பனை அதிகரித்துள்ளது.
வழக்கமாக, ஏப்ரல், மே (பங்குனி, சித்திரை) மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், குளிர் காலமான பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் வாட்டுகிறது. காலை, 10:00 மணியை தாண்டியதும், வெயில் தகிக்க ஆரம்பிக்கிறது; மாலை, 3:30 வரை வாட்டி எடுக்கிறது.வேலை நிமித்தமாக நகருக்குள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வாகனத்தில் செல்வோர் வாடி வதங்குகின்றனர். ஆசுவாசப்படுத்திக் கொள்ள, குளிர்பானங்கள் அருந்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நகர்ப்பகுதியில் ஆங்காங்கே கம்பங்கூழ், நீர் மோர், நன்னாரி சர்பத், கரும்பு ஜூஸ், தர்பூசணி, இளநீர், நுங்கு, பதனீர் விற்கும் கடைகள் உருவாகி உள்ளன. இவற்றின் விற்பனை காலநிலைக்கு ஏற்ப அதிகரித்து வருகிறது.கம்பங்கூழ் 15 ரூபாய், நீர் மோர் 10 ரூபாய், நன்னாரி சர்பத் 15 ரூபாய், சோடா சர்பத் 20 ரூபாய், கரும்பு ஜுஸ் 15 ரூபாய், தர்பூசணி பிளேட் 15 ரூபாய், இளநீர் 20 ரூபாய், பதனீர் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீ விலையை விட அதிகமாக இருந்தாலும், யாரும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. தாகம் தணிக்க குளிர்பானங்களையே நாடுகின்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'நன்னாரி சர்பத் விற்பனை, குளிர்காலத்தில் மட்டும் 'டல்'லடிக்கும். கம்பங்கூழ், கரும்பு ஜூஸ் போன்றவற்றை எந்த காலகட்டத்திலும் அருந்துவதற்கு பொதுமக்கள் பழகி விட்டனர். 'திண்டிவனம் மற்றும் ஆந்திராவில் இருந்து தர்பூசணி பழங்கள் தருவிக்கப்படுகின்றன. வெயில் கொளுத்துவதால், தர்பூசணி சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்கிறோம். மே வரை விற்பனை சூடுபிடிக்கும்' என்றனர்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...