Tuesday, February 28, 2017

ஆறு மாத குழந்தை விற்பனை : மதுரையில் 5 பேர் கைது

மதுரை: மதுரையில், ஆறு மாத குழந்தையை, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகா, 34. இவருக்கு, ஆறு மாதத்திற்கு முன், ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, இரண்டாவது கணவர் பிரிந்து சென்ற நிலையில், குழந்தையை வளர்ப்பதில், கனகாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து அவருக்கு பழக்கமான, 57 வயது பெண்ணிடம் கனகா தெரிவித்தார். குழந்தையை அவனியாபுரத்தைச் சேர்ந்த, 33 வயது நபர் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடியில் ரத்த வங்கி நடத்தி வரும், 39 வயதுடையவரிடம், 2.50 லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது. அவர், ஆண் வாரிசுக்காக குழந்தையை சட்டவிரோதமாக 'தத்து' எடுத்து உள்ளார். இந்நிலையில், தன் குழந்தையை சிலர் விற்று விட்டதாக போலீசில் கனகா புகார் செய்தார். இது தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 
போலீசார் கூறுகையில், 'கனகா சம்மதத்தோடு தான் குழந்தை விற்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு பேர் மூலம் குழந்தை விற்கப்பட்டுள்ளதால், கனகாவுக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை.
'இதனால் அவர், புகார் தெரிவித்திருக்கலாம். முதற்கட்டமாக, ஐந்து பேரை கைது செய்துள்ளோம். தேவைப்பட்டால், கனகாவையும் கைது செய்து விசாரிப்போம்' என்றனர்.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...