Sunday, February 26, 2017

மதுரையில் தொடரும் பிரமாண்ட பிரியாணி திருவிழா!



மதுரையில் பிரமாண்டமான முறையில் பிரியாணி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோயிலில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக, பிரியாணி திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பிரமாண்டமான முறையில் பிரியாணி சமைத்து அனைவருக்கும் வழங்கி அந்த வட்டாரத்தையே மணக்கச் செய்தார்கள். இந்நிலையில், மதுரை தெற்குவாசல் பள்ளிவாசல் கந்தூரியை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட தேக்சாவில் பிரமாண்ட பிரியாணி தயாரிக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. காலை முதல், மட்டன் பிரியாணியும், தால்சால்னாவும் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...