Thursday, May 21, 2015

மழை நீரில் மிதக்கும் பெங்களூரு 21 May 2015 03:37 AM IST

பெங்களூரில் தொடர்ந்து 12 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில், குடிசைகளில், சாலையோரங்களில் வசித்து வரும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியிருந்தது.
பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் அவதிக்குள்ளாகியது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...