Monday, September 28, 2015

இந்தியாவில் பாஜக முயற்சியில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரம்: அமெரிக்காவில் மோடி பெருமிதம்

Return to frontpage

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் உள்ள எஸ்.ஏ.பி. மையத்தில் அமெரிக்கா வாழ் இந்திய மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை பாஜக உருவாக்கியுள்ளது" என்றார்.

அவர் மேலும் பேசும்போது, "நம் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்திருந்தது. ஒருவர் ரூ.50 கோடி சம்பாதித்தார், ஒருவரது மகன் ரூ.250 கோடி சம்பாதித்தார், மகள் ரூ.500 கோடி சம்பாதித்தார், மருமகன் ரூ.1,000 கோடி சம்பாதித்தார்.

ஆனால், பாஜக இப்போது ஊழலற்ற ஆட்சி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். என் மீது யாராவது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது சொல்ல முடியுமா?" (அரங்கில் "இல்லை" என்ற பெரிய சப்தத்தை மக்கள் எழுப்புகின்றனர்)

"கடந்த ஆட்சியில் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டனர். ஆனால் இன்று இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு புதிய அடையாளம் இருக்கிறது. இதற்குக் காரணம், உங்களது விரல் செய்த வித்தை. உங்கள் விருப்பம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

21-ம் நூற்றாண்டு யாருடையது என்ற பேச்சு உலகளவில் பரவலாக பேசப்படுகிறது. அதற்கு பலரும், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதே என பதில் கூறுகின்றனர்.

16 மாத ஆட்சி காலத்திற்குப் பிறகு இன்று உங்கள் முன் நிற்கும் நான் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேனா என்று நீங்களே சொல்லவேண்டும். ('ஆம்' என்ற பெரும் ஓசை அரங்கத்தில் ஒலிக்கிறது).

நான் ஒவ்வொரு முறை இந்தியா முன்னேறும் என்று கூறும்போதெல்லாம், பலரும் என்னிடம் கேட்கின்றனர்? எந்த நம்பிக்கையில் இதைக் கூறுகிறீர்கள் என்று?

இந்திய மக்கள் தொகையில் 65% பேர் 35 வயது மதிக்கத்தக்கவர்கள். அதாவது இளம் வயதினர். இந்தியாவின் இளமையே எனக்கு இந்த நம்பிக்கையை அளிக்கிறது என நான் அவர்களிடம் கூறுகிறேன்.

மேலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. உலக வங்கி அறிக்கை, மூடிஸ் வர்த்தக அமைப்பு அறிக்கை போன்ற பல்வேறு அமைப்புகளின் பொருளாதார ஆய்வறிக்கைகளும் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது" என்றார் மோடி.

தொழில்நுட்ப புரட்சி அவசியம்

"ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்ப புரட்சி அவசியம். அதை கருத்தில் கொண்டே டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இ-கவர்னன்ஸ் முறையும் சிறப்பாக செயல்படுகிறது" என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.

உலகுக்கு 2 அச்சுறுத்தல்கள்

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்த உலகம் இரண்டு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று தீவிரவாதம்; மற்றொன்று பருவநிலை மாற்றம். இந்த இரண்டையும் திறம்பட சமாளிக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். தீவிரவாதம் என்றால் என்ன என்பதற்கே ஐ.நா. இன்னமும் முழுமையான விளக்கமளிக்கவில்லை.

ஒரு விளக்கத்துக்கே 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் அதற்கான தீர்வு காண எத்தனை ஆண்டுகள் ஆகும். நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்ற பேதம் ஏதும் இல்லை. தீவிரவாதம் மக்கள் நலனுக்கு அச்சுறுத்தலே. காந்தியும், புத்தரும் பிறந்த மண்ணில் இருந்து வரும் நான், உலக அமைதி உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

மேலும் அவர் பேசும்போது, வசதி படைத்தோர் காஸ் மானியத்தை விட்டுத்தர வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று 30 லட்சம் மக்கள் மானியத்தை விட்டுக்கொடுத்தது பெருமை அளிப்பதாக கூறினார்.

டிசம்பர் 2 முதல் விமான சேவை

டெல்லி - சான் பிரான்ஸிஸ்கோ நகர் இடையே வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் வாரம் மூன்று முறை ஏர் இந்தியா நேரடி விமானத்தை இயக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...