Wednesday, March 23, 2016

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி

ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
DINAMALAR

பத்தனம்திட்டா : கேரளாவில், ஓட்டுப்பதிவு குறைவதை தடுக்கும் வகையிலும், வாக்காளர்களிடையே ஓட்டு போடும் ஆர்வத்தை துாண்டும் வகையிலும், குலுக்கல் நடத்தி பரிசு வழங்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் கட்சிகள், இலவச பொருட்கள், அன்பளிப்பு, பணம் கொடுத்து வருகின்றன. இப்போது, வாக்காளர்களை வழிக்கு கொண்டு வர, தேர்தல் கமிஷனும், பரிசுத் திட்டத்தில் இறங்கியுள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தில் தான் இந்த கூத்து. இங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டம், அதிக அளவு மலைப்பகுதி நிறைந்த இடமாகும். தேர்தலில் ஓட்டு போட இங்குள்ள வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

மாநில அளவில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகும் நிலையில், இங்கு, 65 சதவீதத்தை தாண்டுவதே பெரும்பாடாக உள்ளது. அதுவும், மலைப்பகுதியைச் சேர்ந்த, 100 ஓட்டுச்சாவடிகளில் மிக மிக குறைந்த அளவு ஓட்டுகள் தான் பதிவாகின்றன. இதையடுத்து, மே மாதம், 16ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை எப்படியும் அதிகரித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹரிகிஷோர் களமிறங்கியுள்ளார்.

மிக குறைவாக ஓட்டுப்பதிவாகும் ஓட்டுச்சாவடிகள் மீது, சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அங்குள்ள வாக்காளர்களை ஈர்க்கும் விதத்தில், அதிரடி திட்டம் ஒன்றையும் கலெக்டர் அறிவித்துள்ளார். அதன்படி, அங்கு, ஓட்டு போடும், வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட எண் உடைய, அட்டை வழங்கப்பட உள்ளது. 'தேர்தலுக்கு பின், குலுக்கல் நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்' என்றும், கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Changes in varsities Act opposed

Changes in varsities Act opposed The Hindu Bureau MADURAI 13.09.2026 The members of the Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Tere...