Sunday, March 20, 2016

கவுசல்யாவின் மேற்படிப்பு செலவை ஏற்கும் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

THE HINDU TAMIL

கவுசல்யாவின் மேற்படிப்பு செலவு முழுவதையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஏற்றுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான தங்கவேல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 13-ம் தேதி, கலப்புத் திருமண தம்பதி சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்து வமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாய மடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சைக்குப் பிறகு படிக்க விரும்புவதாகவும், படிக்க உதவி செய்யுங்கள் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய ஆய்வாளர் சந்திரபிரபாவிடம் கூறினார்.

இந்நிலையில், கவுசல்யாவின் மேற்படிப்பு செலவு முழுவதையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஏற்றுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...