Thursday, March 24, 2016

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று



1923 - மார்ச் 24 : 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்; உள்ளம் உருகுதையா, நான் ஆணையிட்டால், யாருக்காக, அமைதியான நதியினிலே ஓடம்...' உட்பட, தமிழக நெஞ்சங்களை உருக்கும் பாடல்களைப் பாடி, நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்திருப்பவர், டி.எம்.சவுந்தரராஜன். தன் குடும்பப் பெயரான, தொகுளுவா மற்றும் தந்தை பெயரான மீனாட்சி அய்யங்காருடன் இணைந்தே, டி.எம்.சவுந்தரராஜன் என்றழைக்கப்பட்டார். வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம் மற்றும் கிராமிய மணம் கமழும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ் உட்பட நடிகர்களின் முகத்தை, தன் குரலின் மூலம், ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் பெற்றவர். 2013, மே 25ம் தேதி இறந்தார். பத்மஸ்ரீ டி.எம்.சவுந்தரராஜன், பிறந்த நாள் இன்று!

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...