Tuesday, February 2, 2016

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்



malaimalar

பெங்களூர், பிப். 1–

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாசம்– சவுபாக்கியம்மா தம்பதி மகள் சவுமியா.

இவருக்கும் ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு திருமண வரவேற்பு விருந்து நடந்தது. மணமகன் ராஜு தனது குடும்பத்தினருடன் மிக தாமதமாக மண்டபத்துக்கு வந்தார்.

அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது அவர்கள் ரசம் கேட்டனர். ஆனால் ரசம் காலியாகி விட்டது என்று பதில் வந்தது.

உடனே மணமகன் குடும்பத்தினர் ஆவேசம் அடைந்தனர். பெண் வீட்டாரிடம் தகராறு செய்தனர். "உங்களுக்காக தனியாக உணவு எடுத்து வைத்திருந்தோம். யாரோ அதனை பரிமாறி காலி செய்து விட்டனர்" என்று எவ்வளவோ கூறி சமரசம் செய்தனர். ஆனால் மணமகன் வீட்டார் சமாதானம் அடையாமல் மண்டபத்தில் அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு சென்றனர்.

மறுநாள் அதிகாலை நலுங்கு நிகழ்ச்சிக்காக மணமகன் குடும்பத்தினரை அழைக்க அவர்களது அறைக்கு சென்றனர். ஆனால் அங்கு மணமகன் இல்லை.

தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் இரவோடு இரவாக மண்டபத்தை காலி செய்து விட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் திருமணம் நின்றது. பெற்றோர்கள் கதறி அழுதனர். மணமகள் சவுமியா தேம்பி தேம்பி அழுதார்.

இதனை கண்ட திருமண விழாவுக்கு வந்த கோவிந்த ராஜ் என்ற வாலிபர் சவுமியாவை நான் திருமணம் செய்வதாக கூறினார். இதற்கு பெரியவர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். சவுமியாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதனால் அதே முகூர்த்தத்தில் சவுமியா கழுத்தில் கோவிந்தராஜ் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள். ரசம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...