Friday, February 26, 2016

2 டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'மருத்துவ கவுன்சில் அதிரடி

சென்னை: விதிமுறைகளை மீறி செயல்பட்ட, இரண்டு டாக்டர்களை, 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்தவர் டாக்டர் ராமச்சந்திரன். இவர், மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர், 'ஸ்கேன்' செய்து, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என, தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, கலெக்டர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் விசாரித்ததில், ராமச்சந்திரன் விதிமீறி செயல்பட்டதை உறுதி செய்தனர். கலெக்டர் பரிந்துரையை அடுத்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், டாக்டர் ராமச்சந்திரனை, ஐந்து ஆண்டுகள், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது.

ஓராண்டு தடைசென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2014ல், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, அமுதா என்ற பெண்ணுக்கு, உடல் எடையைக் குறைக்க, டாக்டர் மாறன் என்பவர் மூலம், அடுத்தடுத்து, இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்தன.
வீடு திரும்பிய அவர், 10 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்து இறந்தார். கணவர் கவுரிசங்கர் போலீசிலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் புகார் செய்தார். 

விசாரணையில், தவறாக சிகிச்சை அளித்தது தெரிய வந்ததால், சிகிச்சை அளித்த டாக்டர் மாறனை, ஓராண்டுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...