Monday, February 1, 2016

பணி நிரந்தரம் செய்வதாக உறுதி: ஒப்பந்த செவிலியர் உண்ணாவிரதம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு

Return to frontpage

பணி நிரந்தரம் செய்வதாக அதிகாரிகள் அளித்த உறுதி யின்பேரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் 3,447 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. தமி ழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதம் இருந்தவர் களில் 8 பேர் நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதையடுத்து, அன்றிரவே தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது தோல்வி அடைந்ததால், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக செவிலியர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், 2-ம் நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நேற்றும் 4 செவிலியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை டிஎம்எஸ் வளா கத்தில் நேற்று நடந்தது.

இதில், முதல் கட்டமாக 806 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாகவும், மீதமுள்ளவர்களை இன்னும் 10 நாட்களில் பணி நிரந்தரம் செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஒப்பந்த செவிலியர்கள் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

10-ம் தேதிக்குள்..

10-ம் தேதிக்குள் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் 11-ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவோம் என்று ஒப்பந்த செவிலியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...