Monday, January 23, 2017

இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை - லாரன்ஸ் விளக்கம்

Actor Lawrence
'இளைஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை' என போராட்டக்களத்தில் இருந்த நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மெரினாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், "கடந்த ஒரு வாரம் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. போராட்டக் களத்துக்குள் வேறு சிலர் புகுந்தனர். அவர்களால்தான் பிரச்னை ஏற்பட்டது.

இளைஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. அவசரச் சட்ட நகலை முன்பே காட்டியிருந்தால் கலைந்திருப்போம். அவசரச் சட்ட நகலை கேட்டுள்ளோம். அவசரச் சட்ட நகலை காட்டியபின், அரசு விடுத்த கோரிக்கைப்படி மூன்று மாதம்வரை போராட்டத்தை தள்ளி வைப்போம். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவராவிடின் மீண்டும் போராடுவோம். மாணவர்களை தாக்கியது வருத்தமளிக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...