Wednesday, January 18, 2017

கேஸ் வெல்டிங்கால் வங்கியின் 3 லாக்கர் உடைப்பு! சென்னையில் அதிர்ச்சி

சென்னை மந்தைவெளியில் உள்ள யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் புகுந்த கொள்ளையர்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மந்தைவெளி ஆர்.கே மடம் சாலையில் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பூட்டை உடைத்து இன்று அதிகாலை 3 மணி அளவில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வங்கியில் இருந்த 3 லாக்கரை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து பணம், நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இன்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள், வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைப்போன நகைகள் மற்றும் பணம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...