Wednesday, January 18, 2017

வாவ் கட்ஜு.. இப்படி ஒரு ஜட்ஜு இல்லாம போயிட்டாரே சுப்ரீம் கோர்ட்டில்!

சென்னை: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜு கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப் போராளியாகவே மாறி விட்டார்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு இல்லாத துணிச்சலுடன், தைரியத்துடன், தீரத்துடன் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கட்ஜு. எப்படியெல்லாம் செய்தால் ஜல்லிக்கட்டை மீட்கலாம் என்று சட்ட ஆலோசனைகளையும் தொடர்ந்து கூறி வருகிறார்.
தமிழகத்து எம்.பிக்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று கோபம் காட்டி வருகிறார். இந்த நிலையில் முழுமையான தமிழ் உணர்வுடன், தமிழக மக்கள் அமைதியாக நடத்தி வரும் உணர்ச்சிப் போராட்டம் குறித்து ஒரு போஸ்ட் போட்டு அத்தனை தமிழர்களையும் நெகிழ வைத்துள்ளார்.

தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. இதுதான் கட்ஜு போட்டுள்ள பேஸ்புக் போஸ்ட்.
source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...