Saturday, January 14, 2017

ஒருமுறை மட்டுமே கருணை வேலை ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை: கருணை அடிப்படையிலான வேலை என்பது தொடர் ஓட்டம் அல்ல எனக்கூறிய ஐகோர்ட் கிளை, மீண்டும் பணி வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூரை சேர்ந்த தமிழ்மதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''என் கணவர் பால்ராஜ். வேளாண்மைத்துறையில் பணியாற்றினார். பணிக்காலத்தில் கடந்த 24.4.2002ல் இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் திருமணமாகாத என் 6வது மகள் விக்ேனஸ்வரியின் தகுதிக்கேற்ற வேலை வழங்க உத்தரவிட வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அரசு வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகி, 'மனுதாரரின் 3வது மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

14.7.2015ல் பணியில் சேர்ந்த அவர் 6 மாதத்தில் குடும்ப பிரச்னை காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவதாக மீண்டும் வாய்ப்பு கேட்கின்றனர். இது ஏற்புடையதல்ல' என்றார்.

இதையடுத்து நீதிபதி, ''கருணை அடிப்படையிலான வேலை என்பது தொடர் ஓட்டம் போன்றதல்ல. வேலைக்கு சேர்க்கப்பட்ட ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். அதனால் மற்றொருவருக்கு தாருங்கள் என கேட்க முடியாது. மனுதாரர் தரப்பு கோரிக்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்டது. எனவே, இந்த மனு ஏற்புடையதல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
Dailyhunt

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...