Wednesday, February 28, 2018

மாநகர பேருந்துகளில் நடத்துநர் அமர்ந்து பயண சீட்டு வழங்கக்கூடாது: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

By DIN | Published on : 27th February 2018 09:24 PM



சென்னை மாநகர பேருந்துகளில் இனி நடத்துநர் சீட்டில் அமர்ந்து கொண்டு பயண சீட்டு வழங்கக்கூடாது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் பல வழித் தடங்களில் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வருகிறது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் நஷ்டம் அதிகரித்து வருகிறது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாநகர பேருந்துகளில் மட்டும்தான் நடத்துநர் இருக்கையில் அமர்ந்து கொண்டே பயண சீட்டு வழங்கும் நிலை உள்ளது. இதனால் இலவச பயணம் அதிகரித்து, போக்குவரத்து கழகத்திற்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையை மாற்றி, போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க தற்போது சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நடத்துநர் இருக்கையை விட்டு எழுந்து சென்று பயணிகளுக்கு பயண சீட்டு வழங்க வேண்டும், இலவச பாஸ், மாதாந்திர பாஸ் போன்றவற்றில் பயணம் செய்யும் பயணிகளிடம் அவர்களின் பயண அட்டையை சோதிக்க வேண்டும். அவை போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டதா அல்லது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பதை நடத்துநர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து புகார் குறித்து பயணிகள் 9445030516 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் புகார் தெரிவிக்கையில் பேருந்து வழித்தடம் எண் பக்கவாட்டில் உள்ள சீட் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் கூற வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...