Wednesday, February 28, 2018

மார்ச் 25ல் டில்லியில் டாக்டர்கள் மாநாடு : இந்திய மருத்துவ சங்கம் முடிவு

Added : பிப் 28, 2018 00:44


திண்டுக்கல் : தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் மார்ச் 25ல் டாக்டர்கள் மாநாடு நடக்கிறது, என இந்திய மருத்துவ கழக தேசிய முன்னாள் தலைவர் வினய் அகர்வால் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: இந்திய மருத்துவ கழகத்தில் டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இதை அழித்துவிட்டு, 5 டாக்டர்கள், மீதியுள்ளோர் டாக்டர் அல்லாதோரை இணைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆணையம் ஓமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் படித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்காமல் மருத்துவம் பார்க்கலாம் என்ற முறையைவலியுறுத்துகிறது. இதனால் போலி டாக்டர்கள் உருவாவர். எம்.பி.பி.எஸ்.படித்த வர்கள் பயிற்று மருத்துவருக்கு மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் தேசிய கமிஷனில் பதிவு செய்ய முடியும் என்பது தேவையற்றது. இதனால் தனியார் கல்லுாரிகள், தாங்களாகவே எம்.பி.பி.எஸ்., பி.ஜி., படிப்பை அதிகரித்து கொள்வர்.இதை எதிர்த்து டில்லியில் மார்ச் 25ல் டாக்டர்கள் மாநாடு நடக்கிறது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.04.2026

After CU, VB profs move HC over EC’s election duty order  Dipawali Mitra, Subrata Chattoraj & Srishti Lakhotia  TNN 21.04.2026 Kolkata :...