Wednesday, February 28, 2018

மருத்துவ மாணவர் சாவில் நீதி விசாரணை : உறவினர்கள் கோரிக்கை

Added : பிப் 28, 2018 00:55

ராமேஸ்வரம்: சண்டிகரில் மருத்துவ மாணவர் மரணம் தொடர்பாக , நீதி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும், என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத்,24, சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ. எம்.இ.ஆர்., மருத்துவ கல்லுாரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கடந்த டிச.,16ல் சேர்ந்தார்.விடுதியில் தங்கிய 73 நாட்களில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கல்லுாரி தெரிவித்தது. அவரது உறவினர்கள் மற்றும் தமிழக அதிகாரிகள் கல்லுாரிக்கு சென்று மாணவர் தங்கியிருந்த அறை 205ஐ பார்த்தனர். அதில் கதவு, தாழ்ப்பாள் உடைக்காமல் இருந்தது. அவற்ைற உடைக்காமல் எப்படி உடலை மீட்டனர். கதவை பூட்டாமல் தற்கொலை செய்தாரா' என்ற கேள்விக்கு பதிலில்லை. எனவே மாணவர் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மாணவர் உடல் சண்டிகரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து காரில் மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...