Wednesday, February 28, 2018

ஓலா, உபருக்கு மாற்றாக உருவெடுக்கும் புதிய சக்தி: இத இதத்தான் எதிர்பார்த்தோம்

By DIN | Published on : 27th February 2018 03:36 PM |

செல்போன் ஆப்கள் மூலமாக கார்களை முன்பதிவு செய்துகொள்ளும் வசதியின் மூலம் மக்கள் பயனடைந்தார்களோ இல்லையோ ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் லாபம் அடைந்தன.

பல நேரங்களில் ஓட்டுநர்களின் நிலைதான் பரிதாபமாகிப் போனது. அதற்காக சுமார் 3 ஆயிரம் கார் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து எடுத்திருக்கும் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சென்னையில் கார் ஓட்டும் சுமார் 3 ஆயிரம் கார் ஓட்டுநர்கள் இணைந்து சொந்தமாக ஒரு செல்போன் செயலியை உருவாக்க உள்ளனர். அதற்கு ஓட்டுநர் தோழர்கள் சங்கம் என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த செயலி மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கமிஷனாக அதிகத் தொகையை ஓட்டுநர்களிடம் இருந்தும், பயணத்தை ரத்து செய்யும் போது அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு தொகையையும் வசூலிப்பதாக உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

புதிய செல்போன் செயலியை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சம்பத் என்பவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பயணிகளுக்கு சிறந்த சேவையும், அதன் மூலம் ஓட்டுநர்களுக்கு லாபமும் கிடைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்படுகிறது. தற்போது ஓட்டுநர்களின் மொத்த வருவாயில் 20 முதல் 21 சதவீதத்தை கமிஷனாக செயலி நிறுவனங்களே பிடுங்கிக் கொள்கின்றன. ஜிஎஸ்டி 5 சதவீதமே இருக்கும் நிலையில், ஓட்டுநர்களிடம் இருந்து 7%ம் பிடிக்கப்படுகிறது.

தற்போது புதிய செயலி உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம், ஒரு பயணி தான் பயணித்த மொத்த தூரத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். மறைமுகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதே சமயம், பயணத்தை மாற்றும் போது அதற்காக எந்த கட்டணமும் தனியாக வசூலிக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 ஆயிரம் ஓட்டுநர்கள் இடம்பெற்றிருப்பார்கள். புறநகர்ப் பகுதிகளில் 1,200 பேர் பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக புகார் அளித்து கடந்த ஜனவரி மாதம் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...