Tuesday, March 24, 2015

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க வீட்டுக்கு வருவாங்க! ஆவண நகலை தயாராக வைத்திருக்க அறிவுரை

திருப்பூர் : வீடு வீடாகச் சென்று, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி, திருப்பூர் மாவட்டத்தில் நாளை துவங்குகிறது. எனவே, ஆவண நகல்களை, பொதுமக்கள் தயாராக வைத்திருக்கும்படி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கவும், நேர்மையாக தேர்தலை நடத்தவும், இரட்டை பதிவை தவிர்க்கவும், பட்டியலில் ஆதார் எண் இணைக் கும் பணி, இம்மாதம் 1ல் துவங்கி யது. இதுதொடர்பான இறுதி கட்ட பயிற்சி, திருப்பூர் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது.

தேர்தல் அதிகாரிகள் பேசியதாவது: ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர், ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பெற வேண்டும்.பட்டியலில் தவறு இருப்பின், அவற்றை திருத்தம் செய்ய, படிவம் 8 வழங்க வேண்டும். பட்டியலில்,2 இடங்களில் பெயர் இருப்பின், ஏதேனும் ஒன்றை நீக்குவதற்கு, படிவம் 7 வழங்க வேண்டும். புதிதாக குடிவந்தவர்களாக இருப்பின், படிவம் 6 பெற வேண்டும். இப்படிவம் பெறும்போது, வாக் காளரின் பழைய முகவரியை பெற வேண் டும். தீதீதீ.ஞுடூஞுஞிtடிணிண.tண.ஞ்ணிதி.டிண என்ற இணைய தள முகவரியில், தமிழில் விவரங்களை பதிவு செய்வது குறித்தும், அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

நாளை முதல், அடுத்த மாதம் 8 வரை, மாவட்டத்தில் உள்ள 2,243 ஓட்டுச்சாவடி மையங்களிலும், இப்பணி நடைபெறும். மக்களிடம் வழங்கப்படும் படிவங்களை திரும்பப் பெற, அடுத்த மாதம் 12 மற்றும் 24; மே 10 மற்றும் 24ல், சிறப்பு முகாம் நடத்தப்படும்.

கையெழுத்து கட்டாயம் : மாவட்ட அளவில், இதுவரை 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர், "ஆன்-லைன்' மூலமாக, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளனர். பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் படிவத்தில், வாக்காளர் கையொப்பத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; கையொப்பம் இல்லாதவை ஏற்கப்படாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுப்பணி நடந்து வரும் இந்நேரத்தில், 2 வாரங்களில் ஆதார் எண் இணைப்பு பணியை முடிக்க இயலாது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

"நகலுடன் தயாரா இருங்க'
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பர். ஒவ்வொரு குடும்பத்திலும், வாக்காளராக உள்ளவர்களது மொபைல் எண், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை, தயாராக வைத்திருக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும்போது, அவ்விவரங்களை தெரிவிப்பதுடன், ஆவண நகல் களையும் வழங்க வேண்டும்,' என்றனர்.

ஆதார் எண் இல்லையா?
ஆதார் அட்டை பெறாத வாக்காளர்கள், தங்களது மொபைல் எண், இ-மெயில் முகவரியுடன், உடற்கூறு பதிவின்போது வழங்கப்பட்ட ரசீது நகலை வழங்கலாம். இதுவரை உடற்கூறு பதிவு செய்யாதவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பெற்ற ரசீது நகலை வழங்கலாம். அதுவும் இல்லையெனில், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்துள்ள படிவ நகலை வழங்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...