Wednesday, January 28, 2015

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம் l

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதியான கடோங்கில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் உள்ளது. 

செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து இந்த கோவில் கட்டப்பட்டதால் செண்பக விநாயகர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த கோவிலில் ரூ.27 கோடி செலவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டது. திருப்பணிகளை தமிழகத்தைச் சேர்ந்த பழனி கிருஷ்ணமூரத்தி தலைமையிலான குழு செய்தது. திருப்பணிகள் சோழர்கால கட்டிடக்கலை பாணியில் செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. 

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...