Monday, March 27, 2017

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை வெளிநாட்டு கிளி மாயம் போலீசில் புகார் 
 
வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 10–ந் தேதி ஊழியர்கள் கூண்டில் இருக்கும் பறவைகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாக கூண்டில் வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டை சேர்ந்த ‘மொலுகான்’ கொண்டைக்கிளி மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தந்தார். உடனே விரைந்து வந்த பூங்கா அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் கடந்த 16 நாட்களாக பூங்காவில் தொடர்ந்து தேடிப்பார்த்தனர். ஆனால் கிளி கிடைக்கவில்லை,

இதனையடுத்து ஓட்டேரி போலீசில் வண்டலூர் உயிரியல் பூங்கா வனச்சரக அலுவலர் பிரசாத், வெளிநாட்டைச் சேர்ந்த அரியவகை கிளியை காணவில்லை என்று நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளியை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் கூண்டை உடைத்து மர்ம நபர்கள் கிளியை திருடிச்சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...