Thursday, March 30, 2017

 முத்திரையிட்ட ரூபாய் நோட்டு: ஊழியர் தவிப்பு

 

சென்னை: அரசு போக்குவரத்து கழக முத்திரை வைக்கப்பட்ட, புதிய, 2,000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல், ஊழியர் திண்டாடிய சம்பவம் நடந்துள்ளது. 'ரூபாய் நோட்டுகளில், எதையும் எழுதக்கூடாது' என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை பற்றி கவலைப்படாமல், நோட்டின் எண்ணிக்கை; பெயர்களை எழுதுவது தொடர்ந்தது.

 புதிய, 2,000 - 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, 'ரூபாய் நோட்டில் எழுதினால், அவை செல்லாத நோட்டாக கருதப்படும்' என, எச்சரித்தது. இந்நிலையில், திண்டிவனத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர் ஒருவருக்கு கிடைத்த, 2,000 ரூபாய் நோட்டில், 'தமிழக அரசு போக்குவரத்து கழகம், திண்டிவனம்' என்ற, ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதை, மாற்ற பல வங்கிகளில் அலைந்தும், மாற்ற முடியாமல் திண்டாடி வருகிறார்.

இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவிப்பால், நாங்கள் அதுபோன்ற நோட்டுகளை வாங்குவதில்லை. பொதுமக்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...