Monday, October 27, 2014

The Tamil Hindu...வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், மாற்று நபர் மூலம் வாக்களிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.



வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், மாற்று நபர் மூலம் வாக்களிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.
மக்களவை, சட்டசபை, உள்ளாட்சித் தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தம் 2010-ம் ஆண்டில் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அவர்கள் இந்தி யாவுக்கு வந்து வாக்களிப்பது சிரமம் என்பதால் அவர்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், ஆன் லைன் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப் பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி யிருப்பதாவது:
பல்வேறு நாடுகளில் உள்நாட்டு மக்கள் தொகைக்கு இணையாக இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்தியத் தூதரகத்தில் வாக்குப் பதிவை நடத்த முடியாது.
அதற்குப் பதிலாக ராணுவ வீரர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது போன்று மாற்று நபர் மூலம் வாக்களிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதாவது வெளிநாடுவாழ் இந்தியரின் பிரதிநிதியாக வேறொருவர் வாக்களிக்கலாம்.இதேபோல் ‘இ-வோட்டிங்’ முறை குறித்தும் பரிசீலித்து வருகிறோம். ‘இ-வோட்டிங்’ நடைமுறையில் சம்பந்தப்பட்ட வாக் காளர்களுக்கு இணையம் வாயிலாக வாக்குச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். அதில் அவர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து தபாலில் அனுப்ப வேண்டும். இதற்காக சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகம், வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை ஆகியவற்றின் பிரதி நிதிகள் அடங்கிய 12 பேர் குழு ஆய்வு நடத்தி தனது பரிந் துரைகளை தெரிவித்துள்ளது அந்தப் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. மத்திய சட்ட அமைச் சகத்தின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...