Friday, June 30, 2017

பிஎஸ்என்எல்.,ன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
13:09

புதுடில்லி : பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிக்சர் அல்லது 666 என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அனிலிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 2ஜிபி டேட்டா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் அனைத்து நெட்வொர்க்களுக்கும் 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் தில் கோல் கே போல்-349, டிரிப்பிள் ஏஸ்-333 அல்லது சௌக்கா-444 திட்டங்களை தேர்வு செய்ய முடியும்.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.786 மற்றும் ரூ.599 விலையில் இரண்டு காம்போ திட்டங்களை அறிவித்தது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சௌக்கா 444 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா 90 நாட்களுக்கு, தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் வழங்கும் வரவேற்புக்கு ஏற்ப புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல். தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஜியோவுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் நாட்டில் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று வோடபோன், ஐடியா, மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...