Friday, June 30, 2017

திருமண பதிவு: புதிய சட்ட முன்வடிவு அறிமுகம்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:22




சென்னை: தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் சட்டத்தில், திருத்தம் கொண்டு வருவதற்காக, புதிய சட்ட முன்வடிவு, நேற்று சட்டசபையில், அறிமுகம் செய்யப்பட்டது.

சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இதன் விபரம்: இப்புதிய சட்டம், '2017 தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் திருத்த சட்டம்' என அழைக்கப்படும். தமிழகத்தில், அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, 2009ல், தமிழ்நாடு திருமணங்களை பதிவு செய்தல் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்படி, திருமணம் நடந்த தேதியில் இருந்து, 90 நாட்களுக்குள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், கூடுதலாக, 60 நாட்களுக்குள், அதற்கான கட்டணத்துடன், பதிவு செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம், 2015 பிப்., 9ல் அளித்த தீர்ப்பில், கூடுதலாக கட்டணம் செலுத்தி, 150 நாட்களுக்கும் மேலாக, திருமணங்களை பதிவு செய்யும் வழிமுறையை தயார் செய்ய அறிவுறுத்தியது. இது தொடர்பாக, திருத்தம் கொண்டு வருவதற்காக, புதிய சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் நடத்தும் நபர், மத குரு என்று அழைக்கப்படுகிறார். இந்த சொல், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சொல் என்பதற்கான திருத்தமும், இந்த சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...