Friday, June 30, 2017

தேசிய செய்திகள்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய மந்திரி சமூக வலைதளங்களில் கண்டனம் வலுக்கிறது





பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய வேளாண் மந்திரி ராதாமோகன் சிங் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 30, 2017, 04:30 AM

பாட்னா,

மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாடு முழுவதிலும் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் ‘தூய்மை இந்தியா திட்டம்’ என்கிற திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய வேளாண் மந்திரி ராதாமோகன் சிங் செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மந்திரி ராதாமோகன் சிங், மோடிஹாரி என்ற இடத்துக்கு அருகே காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்தார். அவருடைய பாதுகாவலர்கள் அவரது பாதுகாப்புக்காக அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

இதை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் உலாவ விட்டனர். இந்த வீடியோ வேகமாக பரவியது.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலர் மத்திய மந்திரிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவரது இந்த ஒழுங்கீன நடத்தை தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், இது குறித்து அவரிடம் பிரதமர் விளக்கம் கோர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...