Friday, June 30, 2017

பெருங்களத்தூரில் ரயில்வே சுரங்க நடை பாதைப்பணி ஆய்வு

By DIN | Published on : 30th June 2017 04:54 AM

பெருங்களத்தூரில் ரூ 3.6 கோடியில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கநடை பாதைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஸ்ரீ 'பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன்.

 தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்க நடை பாதைப்பணிகளை ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பேரூராட்சிகளையும், ஜிஎஸ்டி சாலையையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலப்பணி நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜிஎஸ்டி சாலையில் அமைக்க இருக்கும் மேம்பாலப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது. ரயில்வே துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து மேற்கொள்ளும் பெருங்களத்தூர் மேம்பாலப்பணி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீர்க்கன்கரணை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே கேட் மேம்பாலப்பணிக்காக மூடப்பட்டுவிட்டதால் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி நிகழும் ரயில் விபத்து காரணமாக பலர் உயிரிழக்க நேரிடுகிறது. ஆகவே பொதுமக்கள் எளிதில் ரயில்வே நடைமேடைக்குச் செல்லவும், ரயில் தண்டவாளத்தைக் கடந்து ஜிஎஸ்டி சாலைக்குச் செல்லவும் சுரங்க நடை பாதை அமைக்க வேண்டும் என்று பீர்க்கன்கரணை பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கை ரயில்வே நிர்வாகம் ஏற்று ரூ3.6 கோடி செலவில் சுரங்கநடை பாதை அமைக்க முன் வந்துள்ளது. சுமார் 100 அடி நீளம்,10 அடி உயரம்,18 அடி அகல சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சுரங்க நடைபாதை பணிகள் குறித்து ரயில்வே கோட்டப் பொறியாளர் எஸ்.சீனிவாசன் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரனிடம் விவரித்தார்.

ரயில் மேம்பாலப்பணி, நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பணிகளை விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்என்று பீர்க்கன்கரணை பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரனிடம் அளித்தனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...