Friday, June 30, 2017

பல்லாவரம் நகராட்சியில் தீவிர வசூல் வேட்டை

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
23:56

குரோம்பேட்டை;பல்லாவரம் நகராட்சியில், தீவிர வசூல் வேட்டை நடப்பதை ஒட்டி, பொதுமக்கள் வரியை செலுத்தி பயனடையுமாறு, நகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.பல்லாவரம் நகராட்சியில், நாளை முதல், 15ம் தேதி வரை, தீவிர வசூல் முகாம் நடக்க உள்ளது. இந்த தினங்களில், பல்லாவரம் நகராட்சி அலுவலக வசூல் மையம், நேரு நகர் வசூல் மையம், ராதா நகர் மேல்நிலை தொட்டி வளாகம், கண்ணபிரான் கோவில் தெரு, கீழ்க்கட்டளை பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய கணினி மையங்கள் மற்றும் tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரி செலுத்துமாறு, பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இந்த மையங்களில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை நிலுவை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை செலுத்தி பயனடையலாம்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...