Wednesday, June 28, 2017

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி



மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. தரவரிசை பட்டியல் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

ஜூன் 28, 2017, 05:30 AM
சென்னை,

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகள் படிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியிலும் விண்ணப்பம் நேற்று வழங்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் டீன் டாக்டர் வசந்தாமணி விண்ணப்ப வினியோகத்தை தொடங்கிவைத்தார்.

விண்ணப்ப படிவம் ஜூலை 7-ந்தேதி வரை வழங்கப் படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை செயலாளர், தேர்வுக்குழு, நம்பர் 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புவதற்கு ஜூலை 8-ந்தேதி கடைசி நாள்.

பின்னர் 14-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர் தான் ரேண்டம் நம்பர் வெளியிடப்படுகிறது.

முதல் முதலாக நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 15 சதவீத இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அந்த கலந்தாய்வு நடைபெற்ற பிறகு ஜூலை 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...