Thursday, June 29, 2017

பல்கலையில் உண்ணாவிரதம்
பதிவு செய்த நாள்29ஜூன்
2017
01:19

நாகமலைபுதுக்கோட்டை தமிழ்நாடு அனைத்து பல்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை காமராஜ் பல்கலை பிரதான கட்டடம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது. முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் விவேகானந்தன் தலைமை வகித்தார். பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் புவனேஸ்வரன், நிர்வாக அலுவலர் சங்க தலைவர் முத்தையா, செயலாளர் கருத்தப்பாண்டி, பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்துதல், தணிக்கை சான்று அரசு கடிதம் எண் 174ஐ திரும்ப பெறுதல், தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...